இளங்கோ அடிகள்

இளங்கோ அடிகள்!தி.ஆ. 2044 மடங்கல் (ஆவணி) 2, (18-8-2013) அன்று விழுப்புரம் தமிழ்ச் சங்க 11ஆம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் ‘இளங்கோ அடிகள்’ என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா:

இளங்கோ அடிகள்!
 
 – தமிழநம்பி –

பாட்டரங்கின் நற்றலைவ! பைந்தமிழ் முன்மரபில்
தீட்டும் விரைவியப் பாவல! என்றென்றும்
நெஞ்சில் நிறைந்தார் நிலைப்புகழை  இவ்வரங்கில்
எஞ்சலின்றிக் கூற எழுந்துள்ள பாவலர்காள்!

ஓரேர் உழவர், உழன்று விழாவெடுக்கும்
தீராத் தமிழ்ப்பசியர் தேர்ந்த மருத்துவர்
பாவலர் நல்லெளிமை பாலதண் டாயுதரே!
ஆவலுடன் வந்தே அமைந்திருந்து கேட்கின்ற
அன்புசால் தாய்க்குலமே! ஆன்ற பெரியோரே!
இன்தமிழ்ப் பற்றார்ந்த எந்தமிழ நல்லிளைஞீர்!
எல்லார்க்கும் நெஞ்சார்ந்த என்வணக்கம் கூறுகிறேன்!

நல்ல தலைப்பொன்றை நான்பாடத் தந்தார்!
நெஞ்சில் நிறைந்த இளங்கோ அடிகள்!ஆம்!
எஞ்சலின்றி எல்லாத் தமிழருளம் ஈர்க்கும்
புரட்சி நெருப்பினில் பூத்த துறவி!
மிரட்சி கொளச்செய்யும் மேன்மைமிகு பேரறிஞர்!

Continue Reading →

உனக்காக என் இதயத்திலிருந்தொரு கவிதை!

 பேராசிரியர் கோபன் மகாதேவா வைத்தியர் சீதாதேவி அவர்களின்  திருமணவாழ்வின் ஐம்பதாவது ஆண்டு விழாவை 2010 ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அவர்கள் தங்கள் குடும்பத்தோடு கொண்டாடிக்கொண்டிருந்தவேளை நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர்போல் அவ்விழாவில் பங்குபற்றியமை எதிர்பாராததொன்றுபேராசிரியர் கோபன் மகாதேவா

– அண்மையில் மறைந்த தனது மனைவி  வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா நினைவாகப் பேராசிரியர் கோபன் மகாதேவா எழுதிய கவிதை. –

நித்திரையே வாராத நீள் இரவின்  நதியினில் நீந்துகிறேன்.
பத்தரை மாற்றவள் எனப் பல் மக்கள் புகழ்ந்து சொன்ன
பத்தினியாள் பிரிந்துசென்று வாரம் ஏழு ஆகுது இன்று.

Continue Reading →

வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா: நினைவு முகம் கலைந்து போகுமா?

வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா“முடிவில்: நான் ஒரு வைத்தியராகப் பல பயிற்சிகள் பெற்று 40 ஆண்டுகள் கடமையாற்றி இளைப்பாறியது என் பாக்கியமே. எனவே இருபதாம் நூற்றாண்டில் நடந்ததைப் போல எங்கள் வைத்தியத் துறை தொடர்ந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் மேலும் விருத்தியடைய நான் மனதார வாழ்த்துகிறேன்” வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா
    
வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா அவர்கள் எழுதிய “20 ஆம் நூற்றாண்டின் வைத்திய வரலாறு” என்ற கட்டுரையை “பிரித்தானியாவின்  தமிழ் பெண் எழுத்தாளர்கள்”  என்ற எனது தொகுப்பிற்காக பதிவு செய்துகொண்டிருந்தவேளை, அவரின் பிரிவுச் செய்தி எழுத்தாளர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைத்தபோது என் கண்கள் நனைந்;து வேதனையாகியது. யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் பாடசாலையில் தனது கல்வியை மேற்கொண்ட வைத்தியர் சீதாதேவி மகாதேவா 1998 இல் லண்டனில் இளைப்பாறிய ஒரு மூத்த ஆங்கில வைத்தியராகத் திகழ்ந்தவர். குழந்தை வைத்தியம், மனநோய்ச்சிகிச்சை முறை, வெப்பவலய நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு, குடிசார் வைத்தியசேவை போன்ற துறைகளில் பயிற்சி பெற்ற திருமதி சீதாதேவி மகாதேவா பிரித்தானிய தேசிய சுகாதார சேவையில் 27 ஆண்டுகளும், 13 ஆண்டுகள் இலங்கையிலும் சேவையாற்றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.
   

Continue Reading →

அன்னா அக்மதோவா கவிதைகள்

அன்னா அக்மதோவாஅ. யேசுராசா1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து,1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக்கொல்லப்பட்டார். 1912 இல், அக்மதோவாவின் முதலாவது கவிதை நூலான ‘மாலைப்பொழுது’ வெளிவந்தது; 1914 இல் ‘மணிகள்’ என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது. 1935 – 40 ஆம் ஆண்டுகளில், – ஸ்டாலினின் ‘களைஎடுப்புக்’ காலகட்டத்தில் – எழுதப்பட்ட ‘இரங்கற்பா’ நெடுங்கவிதை  மிக முக்கியமான படைப்பாகும். ஸ்டாலினின் இலக்கியக்  கொமிஸாரான ‘ஸ்தனோவ்’, “ பாதி கன்னியாஸ்திரி ; பாதி வேசி” என அக்மதோவாவை இழித்துரைத்தார். ‘யுனெஸ்கோ’ நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை ‘அக்மதோவா ஆண்டு’ எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார். 1966 இல் மரணமடைந்தார்.

Continue Reading →

நெடுங்கவிதை: டி.எஸ்.எலியட்டின் ‘பாழ்நிலம்’ [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)]

2. சதுரங்க விளையாட்டு

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'அவள் வீற்றிருந்த நாற்காலி ஜொலிக்கும் சிம்மாசனம்,
தகதகத்தது பளிங்குத்தரைமேல். நிலைக்கண்ணாடியில்
ஒரு மதுரஸ திராட்சைக்கொத்தின் சித்திரம்
அதில் பொன்னிற கியூபிட் எட்டிப்பார்த்தான்.
(இன்னொரு காதல் தேவன் அவள் விழிகளை சிறகால் மறைக்க)
எழுதினாள் பக்கச்சட்டங்கள் இரட்டிப்பாக்கிய
தூங்காவண்ணமணி விளக்குச்சுடரில் பட்டுத்தெறித்தது
மேஜையும் அவள் வெல்வெட்டுப் பேழை ஆபரணங்களும்.
அள்ளிவீசிய் வெண்கிரணங்களில் ஐக்கியமான ஒளி ஜாலங்கள்
திறந்திருந்த தங்கச்சிமிழ்கள் வர்ணக்குப்பிகள் அகத்தே
திரவம், பொடி, குழம்பென்று டப்பிகளில் நெளிய
வண்ண வண்ண செயற்கை வாசனாதி திரவியங்கள்
சிந்தையை மயக்கி செயலிழந்து ஊசலாடச் செய்யும்.
வீசும் சாளரத்தென்றலில் மெழுகுத் தீபங்கள் நடனமாடும்
சித்திர விதானத்தில் எழில் கோலங்களை
புகைமண்டலங்கள் எழுப்பும் பாங்கில்
கடல்கட்டைகள் எரியும் தாமிர அடுப்பில்
கணப்பு ஆரஞ்சு நிறத்தொல் தகிரும்.
அதன் சுவரில் திமிங்கிலம் நீந்தும் மாடத்தில் ஓர் அடர்வனம்.
மங்கிய நிலவொளியில்  ஒருநெஞ்சை உருக்கும் ஓவியம்.
அதில் ஒரு புராணக் காட்சி
கொடூர டார்க்குஸ் மன்னன்தன் கொழுந்தியாள்
பிலோமிலாளை கடூரமாய் கற்பழித்து
அவள் குயிலாகச் சபிக்கப்பட்டதில் இன்றும் அவள்
கானகத்தில் தன் ஊமைச் சோகத்தை கூவித்திரிகிறான்.
‘ஜக், ஜக்’ என்று இன்னும் அவள் புலம்புவது
இன்றைய ஜடக்காதுகளுக்கு கேட்காது. இப்படி எத்தனையோ சித்திரங்கள் பேசின.
அவைகளில் வெறித்த உருவங்கள் விரக்தியால்
காலத்தால் கருகிய தங்கள் கதைகளைச் சொல்லின.
அறையின் அமைதி கிழித்து அந்நேரம் மாடியில் யாரோ ஏறும்
காலடி ஓசையில் ஒய்யாரமாய் வளைந்து திரும்பினாள்
கணப்பின் கதகதப்பில் சிங்காரியின் கேஸங்கள்
ஐந்தாய் வகிந்திடும் ஜாலத்தில்
காதல் மொழிகள் பொங்கி உதிர்ந்தன.

Continue Reading →

லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள்

லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள் [தமிழில் : அ. யேசுராசா]

லாங்ஸ்ரன் ஹியூஸ்

அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902 இல் பிறந்த கறுப்பினத்தவர். “இரவைப் போன்று கறுப்பானவன் / எனது ஆபிரிக்காவின் ஆழங்களைப் போன்று கறுப்பானவன்” என்பவை அவரது வரிகள்.ஆங்கிலத்தில் எழுதியவர். கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள், ஒருபுதிய பாடல், அன்புக்குரிய அழகிய மரணம் முதலிய அநேக கவிதைத்  தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை,நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமானார். 
    

Continue Reading →