‘பதிவுகள்’ கவிதைகளின் மீள்பதிவுகள் – பகுதி 1!

பதிவுகள் கவிதைகள் - 1பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் ‘பதிவுகள்’ கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். – பதிவுகள் ]

Continue Reading →

‘பதிவுகள்’ கவிதைகள் ஜூலை 2011


ஜே.ஜுமானா (புத்தளம் ) கவிதைகள்

 

1. ஒரு நிறுவல்  

'பதிவுகள்' கவிதைகள் ஜூலை 2011புனித ஸ்தலத்தில்
நீ நிற்கின்றாயென்றால்
நிச்சயமாக நீயொரு
பரிசுத்தவானே

 

Continue Reading →

தமிழ்ப்புலமையின் குறியீடு நீ! ஈழத்து இலக்கிய வானின் விடிவெள்ளி நீ!

பேராசிரியர் கா.சிவத்தம்பி

தமிழ்ப் புலமையின் குறியீடு நீ
சொல்லின் வீச்சும்
அறிவின் துலக்கமும்
தமிழ் கூறும் உலகெங்கும்
உன்னை நினைக்க வைத்தது. 

Continue Reading →

கவிதை: சொற்கள்போல் ஒளியை விழுங்குதல்

துவாரகன்

இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன்
அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான்.
சொல்… விழுங்கினால் திக்கும்.
யாருக்கும் எதுவும் புரியாது.

Continue Reading →

பதிவுகள் கவிதைகள்

 

துவாரகன், – கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி, வேதா  இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை ) கவிதைகள் 

Continue Reading →

மானுடம் செழிக்க….

கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -இலக்கிய நேசங்களே…
உங்கள்
இதயப் பூமியிலே
தூவப்பட்ட இலட்சிய விதைகள்
மானுடம் செழிப்பதற்காய்
தூவப்படட்டும்..!!
தேச பக்தர்கள் என்று இங்கே
திரிகின்ற-
போலி மனிதர்களை
உங்கள் பேனா இணங்காட்டட்டும்!!புதிய
மானுடச் செழிப்பிலே
மகிழ்ச்சி கொள்வோம்!!

Continue Reading →

துவாரகன் கவிதைகள்

அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்

துவாரகன்நேற்றும்கூட
என் அம்மா
எனக்காக ஒருபிடி திரளைச்சோறு
குழைத்து வைத்திருந்தாள்
நான் வருவேனென்று.

அவளிடம் சேகரமாயிருக்கும்
எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை.
எல்லாப் பாரத்துக்கும்
அவளே சுமைதாங்கி 

 

Continue Reading →

கவிதை: விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு
விலைபோகும்
ஓட்டு எந்திரங்களல்ல – நாம்
நாளைய விதியை இன்றெழுதும்
தேர்தல் பிரம்மாக்கள்;
இலவசத்தில் மதிமயங்கி
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம்
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்
மண்ணின் – உரிமை குடிகள்;

Continue Reading →

உயர்தர விஷம்

கவிதை: உயர்தர விஷம் – – திரிவேணி சுப்ரமணியம் –

காற்றின் வேகத்திற்கும் 
கனவுப் பொழுதுக்கும் இடையில்
எப்போதும் நான் குறுக்கிடுவதில்லை 
இரண்டுமே இயல்பாய்
இருப்பதுதான் மகிழ்ச்சி.

Continue Reading →

ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!

ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!

என்ன தேசமோ

ப. மதியழகன்உங்களுக்குப் புரியாததைச்
சொன்னால்
பைத்தியம் என்பீர்கள்
உங்கள் பேச்சுக்கு
தலையாட்டாமல் நின்றால்
கோட்டி பிடித்து விட்டதென
ஊருக்குள் வதந்தி பரப்பி
விடுவீர்கள் 
உங்களை அனுசரித்து
போகவில்லையென்றால்
முதுகுக்குப் பின்னால்
முணுமுணுப்பீர்கள்

Continue Reading →