அஞ்சலி: ‘லங்கா ராணி அருளர் மறைவு!

அருளர்எழுத்தாளரும், சமூக அரசிய செயற்பாட்டாளருமான அருளர் (அருட்பிரகாசம்) மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் கருணாகரனின் பதிவொன்றின் மூலம் அறிந்துகொண்டேன். அருளர் இலங்கைத் தமிழர்களின் விடுதலை அமைப்புகளிலொன்றான ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர். அத்துடன் அவர் ஓர் எழுத்தாளரும் கூட.


அவர் எழுதிய ‘லங்கா ராணி’ நாவலானது எழுபதுகளின் இறுதியில் , இலங்கைத் தமிழர்கள் ஆயுதரீதியிலான போராட்டத்தினை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தம் போராட்டம் பற்றிய புரிதலை, அறிவினை வளர்த்துக் கொள்வதற்காக இரகசியமாக வாசித்த நாவல். 77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து தெற்கிலிருந்து அகதிகளாக அக்கப்பலில் இலங்கைத் தமிழர்கள் வடக்கு நோக்கித்திரும்பினார்கள். சுமார் 1200 தமிழர்களைக் காவிக்கொண்டு பயணித்தது ‘லங்கா ராணி’. அந்நாவலின் பல்வகைப் பயணிகளினூடு, விடுதலைப்போராட்டத்தை அணுகிய நாவல். இந்நாவலை வெளியிட்டது ஈரோஸ் அமைப்பு.


‘லங்கா ராணி’ நாவலுக்கு முக்கியமானதொரு பெருமை உண்டு. அது: இலங்கைத்தமிழரின் ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டத்தில் , அப்போராட்டம் பற்றி முதலில் வெளியான நாவல் இதுவேயென்றே கருதுகின்றேன். . இந்த ஒரு நாவல் மட்டும் போதும் அருளரை வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கு.

Continue Reading →

ஊடக அறிக்கை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

Communist Party of India (Marxist)


30.11.2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (29.11.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை

இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த அரசு ராஜினாமா செய்த பின்னணியில் இவரது சகோதரர் மகிந்திர ராஜபக்சே பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு புதிய அமைச்சரவையும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியின் போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் அச்சம் கலந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சே அரசின் அதிகார வர்க்க, மக்கள் விரோதப் போக்கின் காரணமாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்து புதிய கூட்டணி அரசு ஏற்பட்டது. ஏற்பட்ட புதிய அரசு மக்களுக்கு அளித்த குறிப்பாக, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதுடன், இவ்வாட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. 

Continue Reading →

நாமலின் அரசியல் முதிர்ச்சியும், கோ.ரா.வின் அரசியல்முதிர்ச்சியின்மையும்.

நாமல் ராஜபக்சஜனாதிபத்தேர்தல் முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் கருத்துகளை உள்ளடக்கிய பதிவொன்றினை இணையத்தில் வாசித்தேன். அதிலவர் கூட்டமைப்பின் பேச்சையும் மீறித் தம் கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாகவிருந்தது. அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர் ஒருவரே இவ்விதம் கூறக்கூடும். சென்ற தடவையை விட இம்முறை தம் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பினும், அதனை நோக்காது, கிடைத்த வாக்குகளை மையமாக வைத்து ஆரோக்கியமாக அணுகிய நாமலின் ஆளுமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் அடுத்து அநுராதபுரத்தில் பதவியேற்ற கோத்தபாயா ராஜபக்சவோ , பதவியேற்பு வைபவத்தில் தான் சிங்கள பெளத்த வாக்குகள் மூலம் மட்டுமே வெற்றிவாகை சூடியதாகக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவித்தன. தமிழ் மக்களும் தம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் கூடவே கூறியிருந்தார். கோ.ரா.வின் அரசியல் முதிர்ச்சியின்மைக்கு இக்கூற்றுகள் எடுத்துக்காட்டுகளாகும்.

தமது பதவியேற்பு வைபவத்தில் கோ.ரா செய்த முக்கியமான தவறுகளாக நான் கருதுவது:

1. அநுராதபுரத்திலிருந்து அரசாண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப்போரில் கொன்ற துட்டகாமினி கட்டிய தூபியான ரூவன் வெலிசாயவில் தனது பதவியேற்பு வைபவத்தை நடத்தியது. இதன் மூலம் அவர் கூற விழைவதுதானென்ன? நவீன துட்டகாமினி தானென்று கூறுகின்றாரா? நவீன எல்லாளனான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போரில் கொன்று வெற்றிவாகை சூடியதைக் குறிக்குமொரு குறியீடா மகாதூபி ரூவன்வெலிசாய. கோ.ரா.வும் அவர் கீழிருந்த இராணுவத்தளபதிகள் பலரும் யுத்தத்தில் யுத்தக்குற்றங்கள் பலவற்றைப் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சமயத்தில் தமிழ் மக்களை எள்ளி நகையாடும் நோக்கில் இவ்வைபவத்துக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதா?

Continue Reading →

இலங்கை ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் பற்றி….

கோத்தபாய ராஜபக்சசஜித் பிரேமசாசாஇலங்கையின் பெரும்பான்மையின மக்கள் தமது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அதே சமயம் சிறுபான்மையின மக்கள் சஜித் பிரேமசாசாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இன, மத மற்றும் மொழிரீதியாகப் பிளவுண்ட இலங்கையில், ஓரினத்தின் ஜனாதிபதியாக கோத்தபாயா ராஜபக்ச வென்றிருக்கின்றார். சிறுபான்மையின மக்களுட்பட நாற்பத்தொரு வீத மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதே சமயம் 52.51  வீத மக்கள் (6,883,620) அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இனவாதத்தை அள்ளி வீசி, தென்னிலங்கையில் சிங்கள மக்களை இனரீதியாகத் தூண்டி பெரு வெற்றியினைக் கோத்தபாயா பெற்றிருக்கின்றார். இலங்கையின் பெரும்பான்மையின மக்களைப்பொறுத்தவரையில் இலங்கையில் அவர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்டு வாழ்பவர்களல்லர். அவர்களில் பலர் சிறுபான்மையினர் அடையும் துன்பங்களை இன்னும் அறிய முடியாதிருப்பது துரதிருஷ்ட்டமானது. தமிழர்களுக்கு அதிக உரிமைகளைப்பெற்றுக் கொடுத்து விடுவார் சஜீத் என்று இனவாதத்தைக் கக்கித் தென்னிலங்கையில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றார் கோத்தபாயா ராஜபக்ச. இவரது வெற்றி இனவாதத்துக்குக் கிடைத்த வெற்றி. அதே சமயம் 41.7% வீத மக்கள் (5,467,088) இனவாதத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Continue Reading →

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்!

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

1. 2015ற்குப் பின்னர் உருவான ஜனநாயகத்துக்கான வெளி தொடர்ந்தும் விரிவு படுத்தப்பட வேண்டுமா? இல்லை மீண்டும் அதற்கு முன்பு நிலவிய இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டுமா?

2. இறுதி யுத்தத்தில் மானுடப் படுகொலைகளைப்புரிந்த ஒருவர், எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினரைப் பயமுறுத்திப் பணிய வைக்கும் ஒருவர், இன்றும் இனவாதம் பேசும் இனவெறியர்களுடன் ஒன்றிணைந்து இனவாத அரசியலை முன்னெடுக்கும் ஒருவர் , தனது அதிகாரம் நிலவிய காலகட்டத்தில் வெள்ளைவான் கலாச்சாரத்தால் பல்லினச் சமூகங்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட ஒருவர், நாட்டின் அரசியல் சட்டங்களை மதிக்காத ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?

Continue Reading →

நினைவு கூர்வோம்: த.விமலேஸ்வரன்

த.விமலேஸ்வரன்யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்புச் செயற்குழுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய த.விமலேஸ்வரனை நினைவூட்டிய முகநூல் உரையிது. இதனை முகநூலில் முகநூல் நண்பர் Sam Mer பகிர்ந்திருந்தார். இந்த உரையினை யாழ் பல்கலைக்கழக வணிக பீட மாணவனான  மட்டக்களப்பைச் சேர்ந்த  அ.விஜிதரன் கடத்தப்பட்டபோது  அவரது விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். பாத யாத்திரை மேற்கொண்டார்கள். சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்தார்கள். யாழ் நகரிலிருந்து வெளியான பத்திரிகைகளிலெல்லாம் விஜிதரனின் கடத்தலும், அவரது விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் முக்கிய இடத்தைப்பிடித்தன.

மாணவன் விஜிதரனுக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் த.விமலேஸ்வரனும் ஒருவர். அப்போராட்டத்தின்போது விமலேஸ்வரன் ஆற்றிய உரையாக இதனை முகநூலில் பதிவு செய்த Sam Mer குறிப்பிட்டிருக்கின்றார். இந்த உரைக்கான ஆதாரத்தையும் குறிப்பிட்டிருந்தால் அது ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருந்திருக்கும்.

இவ்வுரை விமலேஸ்வரன் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்துகின்றது. இவரை நான் நேரில் அறிந்ததில்லை. ஆனால் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக, நண்பர்கள் கூற்றுகள் மூலமே அறிந்திருக்கின்றேன். 1963இல் பூநகரியில் பிறந்தவர். ஆரம்பத்தில் காலம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டிருக்கின்றார். தொடர்ந்தும் சமூக, அரசியற் செயற்பாடுகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கின்றார். இவரைப்போன்ற மானுட உரிமைப்போராளிகளை நினைவு கூரவேண்டிய காலகட்டமிது. நினைவு கூர்வோம்.

Continue Reading →

PHRE condemns the violation of a court order by Gnanasara Thera and urges the IGP and AG to investigate

People for Human Rights and Equality Inc. (PHRE)People for Human Rights and Equality Inc. (PHRE)
Reg. No. A0037233S
E-mail: peopleforhumanrightsequality@gmail.com  Web: www.phre.org.au

PHRE condemns the violation of a court order by Gnanasara Thera and urges the IGP and AG to investigate

The People for Human Rights and Equality (PHRE) is dismayed to learn of the actions led by Galagoda Aththe Gnanasara Thera that lead to the final rites of Ven. Kolamba Medhalankarakkhitha Thera being performed adjacent to the tank of the Nayaaru Temple at Chemmalai Mullaitivu. Gnanasara Thera and other monks had carried out the final rites despite a court order by the Mullaitivu Magistrate’s Court prohibiting the cremation of Ven. Kolamba Medhalankarakkhitha Thera’s body within the temple grounds. Moreover, local police officers who were present at the site refused to enforce the court order and instead enabled the cremation to take place.  The cremation of a body within temple grounds is deemed sacrilegious according to Hindu customs and the incident has sparked widespread anger and protest.

The above incident is not the first time that Galagoda Aththe Gnanasara Thera has engaged in conduct that amounts to contempt of court. In 2018, he was convicted of contempt of court charges and sentenced to serve a six-year prison term by the Court of Appeal. The contempt of court charges related to his actions that included the threatening of Hon. Magistrate of Homagama and a senior officer of the Attorney General’s Department.  Gnanasara Thera received a presidential pardon in February this year and was released from custody.  Members of the legal profession and the general public decried the presidential pardon, arguing that such a move undermines the rule of law in Sri Lanka.  The recent actions of Gnanasara Thera in Mullaitivu in blatant violation of court order serves to only reinforce his gross unsuitability to receive a pardon.

Continue Reading →

புத்தர் உகுத்த கண்ணீர்!

முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மறைந்த புத்த துறவியின் உடலைத்தகனம் செய்திருப்பது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் சூழலைச் சிதைக்கும் ஒரு நிகழ்வு. எழுபதுகளில், எண்பதுகளில் தமிழ் இளைஞர்கள், தமிழ் மக்கள் இலங்கையின் சட்டங்கள் தம்மைப் பாதுகாக்கவில்லை. பாரபட்சத்துடன் தம்மை அணுகுகின்றன என்று எண்ணினார்கள். இனக்கலவரங்கள், ஆயுதப்படைகளின் அடக்குமுறைகள் அவர்களை ஆயுதமேந்த வைத்தன. விளைவு நீண்ட யுத்தம். இன்று யுத்தம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பத்தைக் கடந்த நிலையில் தமிழ்ப்பகுதிக்குள் தன் ஆதரவாளர்களுடன் நுழைந்த புத்த மதத்துறவிகள் நீதி மன்ற உத்தரவையும் மதிக்காமல் இறந்த புத்த பிக்குவின் உடலைத்தகனம் செய்திருக்கின்றார்கள். காவல் துறை பார்த்துக்கொண்டிருக்கின்றது.

இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடி நடந்தவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல் துறையினர் உட்பட. இலங்கையின் சட்டமானது அனைவரையும் பாரபட்சமில்லாமல் நடத்துகின்றது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

நடந்தவற்றுக்கு நீதி கிடைக்காவிட்டால் இன்றுள்ள இளம் சமுதாயம் மீண்டும் போராடத்தொடங்கும் சூழல் உருவாகும். அடுத்தமுறை இனவெறிபிடித்த புத்தபிக்குகள் இவ்விதம் தமிழ்ப்பகுதிகளில் வெறியாட்டம் ஆடுகையில் அவர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகலாம். பதிலுக்கு அவர்களுக்கு ஆதரவாகப் படையினர் தமிழர்களைத் தாக்கலாம். தென்னிலங்கையில் இனக்கலவரங்கள் தொடங்கலாம். மீண்டுமொருமுறை இலங்கை போர்ச்சூழலுக்குள் தள்ளப்படலாம். இவ்விதமான சூழலுக்குள் நாடு மீண்டும் தள்ளப்படும் சூழலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சட்டமீறல்கள் ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை அனைவரும் உணர வேண்டும். இவ்விதமான அபாயச் சூழல் ஏற்படாமலிருக்க நடந்தவற்றுக்கு இலங்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இனவாதம் பேசிச் செயற்படும் புத்தமதத்துறவிகள் புத்த மதத்துக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். புத்தரின் கோட்பாடுகளுக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். இவர்களால் நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் தடைபடுகின்றது. இலங்கையின் அனைத்தின மக்களும் , இன, மத, மொழி பேதமின்றி நடந்த சட்ட மீறலைக் கண்டிக்க வேண்டும். அதற்கு நீதி கிடைக்கப்போராட வேண்டும்.

Continue Reading →

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10 – தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10: தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட  பொய்களும் மறைக்கப்பட்ட  உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!தோழர் தொல்.திருமாவளவன் இங்கு இலண்டன் வந்தார். இரண்டரை நாட்கள் தங்கி நின்றார். இரண்டு விழாக்களில் பங்கேற்றார். இப்போது தாயகம் திரும்பி விட்டார். ஆனாலும் அவர் இங்கு வருவதற்கு முன்னரே ஆரம்பமாகிய சர்ச்சைகளும், சலசலப்புக்களும், அவர் மீதான அவதூறுகளும், அவரது இரு நிகழ்வுகளிலும் தொடர்ந்தன. இப்போது அவர் தாயகம் திரும்பி பல நாட்கள் ஆகிவிட்ட பின்பும் இன்னமும் தொடர்கின்றன. தொல்.திருமாவளவன் நாம் எல்லோரும் அறிந்த, நாடறிந்த, உலகறிந்த அரசியல் செயற்பாட்டாளர். விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பினை உருவாக்கி தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும்  ஆதரவாக தொடர்ந்தும் குரல் எழுப்பி வரும் அவர், இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மிக அண்மையில் முனைவர் பட்டத்தினை பெற்றுக் கொண்டவர். ஆரம்பம் முதலே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு சக்தியாக விளங்கிய இவர், விடுதலைப்புலிகள் உடனும் அதன் தலைவர் வே.பிரபாகரனுடனும் என்றுமே நல்ல உறவினையும் நட்பினையும் பேணி வந்தவர். ஆயினும் ஈழவிடுதலைப்போரின் இறுதிக்கட்டத்தில் இவரது விடுதலைச்சிறுத்தைகள்  அமைப்பானது, அன்றைய ஆளும் இந்திரா காங்கிரசுடனும், தி.மு.கழகத்துடனும் வைத்திருந்த உறவானது, ஈழமக்கள் பலராலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தவர் என்ற துரோக முத்திரையை அவர் மீது சுமத்தியிருந்தது. அத்துடன் இன்று ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் எழுச்சி பெற்ற இந்துத்துவா சக்தியானது  இன்று அனைத்து சிறுபான்மை இனங்களையும் குழுக்களையும் ஒடுக்குகின்ற கால கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு  சக்தியாக விளங்கும் இவரையும் இவரது கட்சியினையும் கருவறுப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. அதிகாரங்களுடன் ஒத்தியங்கும் ஊடகங்களும் அவர் மீதான ஊடக மறைப்பினைச் செய்வதுடன் அவருக்கெதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதிலும் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.

Continue Reading →

ராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்!

யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளரான அகிலன் கதிர்காமர்Rajapaksa redux and a democracy in peril ( ‘ராஜபக்சாவின் மீள் எழுச்சியும் ,ஜனநாயகத்துக்கான ஆபத்தும்’ ) என்னும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளரான அகிலன் கதிர்காமர். ‘இந்து’ ஆங்கிலப்பத்திரிகையில் கட்டுரையொன்று எழுதியுள்ளார். அது பற்றிய பதிவிது; அதற்கான பகிர்வும் கூட.


தற்போதுள்ள மைத்திரி -ரணில் அரசானது பொருளியல் ,அரசியல்ரீதியில் தோல்வியுற்றாலும், கடந்த ஐந்து வருடங்களில் ஜனநாயக வெளியினை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கினையாற்றியுள்ளது. அச்சத்துடன் வாழ்ந்த சூழல், இராணுவமயமாக்கல் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியுள்ளது. போரின் அழிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அந்தரங்கமாகக்கூட நாட்டு அரசியல் பற்றிக் கதைப்பதற்கு மக்கள் பயப்பட்டார்கள். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழலில் மக்கள் வீதிகளுக்கு வந்து இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை விடுவிக்குமாறு போராட முடிகின்றது. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்காகப் போராட முடிகின்றது. நாடு முழுவதும் நிலவிய கடத்தப்படுவோம் என்னும் அச்சம் நீங்கி விட்டது. ஊடகங்களுக்குரிய சுதந்திரம் அதிகரித்துள்ளது. அடக்குமுறை குறைந்துள்ளது. எதிர்ப்பினை வெளிப்படுத்தும் ஆர்ப்பாட்டக் கலாச்சாரம் மீண்டும் திரும்பி விட்டது.


இவைனைத்தையும் ராஜபக்சவின் மீள் எழுச்சி மாற்றி விடும். ஜனநாயகத்து ஆபத்தானது இம்மீளெழுச்சி. இதனை வற்புறுத்தும் கட்டுரை இது. இதனை எழுதியவர் யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளரான அகிலன் கதிர்காமர். ‘இந்து’ ஆங்கிலப்பத்திரிகையில் வெளியான கட்டுரை இது. பயன் கருதிய பகிர்விது.


(TheHindu.Com): Rajapaksa redux and a democracy in peril ! The return of an authoritarian oligarchy in Sri Lanka could be stopped  by a united stand of democratic forces!   By Ahilan Kadirgamar (Ahilan Kadirgamar is a political economist and Senior Lecturer, University of Jaffna )

Sri Lanka is again at the crossroads with presidential elections due before December 9, 2019. The political drive since the newly formed Rajapaksa-led Sri Lanka Podujana Peramuna (SLPP), which swept the local government polls in February 2018, has culminated in Gotabaya Rajapaksa, the much feared former Defence Secretary and younger brother of the former President, Mahinda Rajapaksa, being named presidential candidate.


The Rajapaksa regime, which decimated the Liberation Tigers of Tamil Eelam and consolidated considerable power around a family until it was dislodged in January 2015, may now be on the verge of recapturing state power and drastically changing the political landscape for the next decade, if not longer. Even as the United National Party (UNP) in power is dillydallying on its presidential candidate, the SLPP is moving fast in an electoral game that the Rajapaksas have proven to be masters at.


The rise of Gotabaya Rajapaksa, after what seemed like decisive regime change in January 2015, is in good measure due to the failures of the current Wickremesinghe-Sirisena government. Neither did the new government hammer through the allegations of corruption and rights abuse levelled against the Rajapaksa regime nor did it provide a meaningful programme to address economic woes. Rather, infighting and self-serving manoeuvres within the government have brought its stated plans, from economic reforms to a constitutional political settlement, to a standstill.


Despite the many political and economic failures of the current government, the significant shift over the last five years has been the opening of democratic space. The climate of fear and continuing militarisation were to a great degree reversed. In the war-torn regions, where there was fear to even speak in private during the post-war years under Rajapaksa rule, people now take to the streets demanding the release of military-held lands, answers on those who have disappeared in the war and relief for the rural indebted. Throughout the country, with the fear of abductions gone and repression decreasing, dissent and the culture of protests have returned along with greater freedom for the media.

State power and nationalists

Continue Reading →