‘கொரோனா’ நடிகன்!

கவிதை: 'கொரோனா' நடிகன்!
எழுத்தோடுகிறது.
வாருங்கோ… வாருங்கோ…..
வாங்கிட்டுப் போங்கோ..
மலிவு… மலிவு….
நுவரெலியா.. உருளைக் கிழங்கு….
தம்புள்ள.. கிழங்கும் இருக்கு..

சந்தை  வரிசையில்
ஆளுக்கு ஒவ்வொரு விலை
வணிகத்தில் வன்முறை நிகழ்வது
படமாக்கப்படுகிறது.
பெரு மூச்சுக்கு அவிழ்ந்து நகர்கிறது
காட்சி.

Continue Reading →

இத்தரை எங்கும் இன்பம் பெருகட்டும்!

சித்திரைப் புத்தாண்டு பற்றி எண்ணியதும்
சிந்தையில் பற்பல நினைவுகள் எழுந்தன.
பால்ய பருவம் இனிய பருவம்.
கவலைகள் அற்ற சிட்டெனப் பறந்த
களிப்பில் நிறைந்த இனிய பருவம்.
அப்பா, அம்மா , தம்பி , தங்கை
அனைவரும் கூடி மகிழ்ந்த பருவம்.
பண்டிகை யாவும் கொண்டாடி மகிழ்ந்த
நெஞ்சில் அழியாக் கோலமென இன்றும்
இனிக்கும் பருவம் பால்ய பருவம்.
புத்தாடை அணிந்து நண்பருடன் கூடி
மான்மார்க், முயல்மார்க் வெடிகள் கொளுத்தி
கொண்டாடி மகிழ்ந்த பருவம் அஃதே.

Continue Reading →

ஆர் வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க !

மனமெல்லாம் சித்திரையை வரவேற்கத் துடித்தாலும்
தினம்தினமாய் வரும்செய்தி செவிகேட்கக் கசக்கிறது
புத்தாடை வாங்கலாமா பொங்கலுமே செய்யலாமா
என்கின்ற அச்சநிலை எங்குமே தெரிகிறதே   !

கூடிநிற்றல் குற்றமென கொள்கையிப்போ இருக்கிறது
ஆடிப்பாடி மகிழுவதும்  அரசால் தடையாகிறது
வீட்டினிலே சிறையிருக்கும் வேதனையில் இருக்கையிலே
நாட்டினிலே சித்திரையை  யார்வருவார்  வரவேற்க !

வழிபாட்டுத் தலமெல்லாம் மனிதநட மாட்டமில்லை
வர்த்தக நிலையமெல்லாம் பாதுகாப்பு மயமாச்சு
வெடிவாங்கி கொண்டாட   வேட்டுவைத்த கொரனோவால்
வடிவான சித்திரையை வரவேற்க யார்வருவார்  !

Continue Reading →

ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்


லதா ராமகிருஷ்ணன்

1.பூவின் வாசனைக்குத் தூலவடிவம் தருபவன்!
(சமர்ப்பணம்: இளையராஜாவுக்கு)

இசை உனக்குள் கருக்கொள்ளும்போது
நீ உருவிலியாகி
ஒரு காற்றுப்பிரியாய் பிரபஞ்சவெளியில்
அலைந்துகொண்டிருப்பாய்……

இசையை முழுமையாய் உருவாக்கி
முடிக்கும்வரை
நீ மனிதனல்ல _ தேவகணம்தான்.

உன் உயிரில் கலந்த இசை
என்னை ஊடுருவிச் செல்லும் நேரம்
காலம் அகாலமாகும்;
காணக்கிடைக்கும் சிந்தா நதி தீரம்……

Continue Reading →

கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்

கவிதை: கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்- செல்லத்துரை சுதர்சன் -

கியூபாவின் பிடல் காஸ்ரோ மருத்துவக் குழு இத்தாலியில் மரணமீட்புக்காய்த் தரையிறங்கிய நாள்  23.03.2020. இக்கவிதையை எழுதிய கலாநிதி செ. சுதர்சன் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கவிஞரும் விமர்சகரும் ஆய்வாளருமாகிய இவர் பல நூல்களின் ஆசிரியர்

உயர் பசிலிகாவின் கீழறை உறங்கும்,
முதுபெரும் ரோமின் பேதுருவே!
லத்தீன் சிலுவையுருவப் பேராலயத் திருக்கதவுகள்
இறுக மூடிக்கொண்டன!
ரைபர் ஆறும் ஜனிக்குலம் குன்றும்
மௌனித்துப் போயின…!
அரவணைக்கும் கரம்கொண்ட
நீள் வட்ட வெளி முற்றம் என்னாயிற்று…!
‘என் ஆடுகளை மேய்’ எனும் போதனையும்
எர்மோன் மலையடிவார வாசகமும்
தொலைந்து போயின காண்…!
பேதுருவே தொலைந்து போயின காண்…!

கலைகொழிக்கும் முதுபெருந்தாய் மடியில்
உறங்குவோய் இது கேள்….!
ஐராப்பிய ஒன்றியக் கதிரையிலமர்ந்து
உன் மக்கள் கழுகுக்காய் உயர்த்திய கைகளும்…
பட்டினி விரித்தவை, குருதி பெருக்கியவை,
பிணங்கள் குவித்தவை, நிலங்கள் கவர்ந்தவை,
விடுதலை மலர்களை நிலமிசைப் புதைத்தவைதாம்.

Continue Reading →

கவிதை: குற்றுயிரும் குலையுயிரும்

- தம்பா (நோர்வே) -கலியுகத்தின் பிரளயங்கள் ஓயாத
ஒரு பொழுதில்
ஓய்ந்துவிட்ட பூமியின் சூழற்சி.

ஆயிரம் அணுகுண்டுகளை
அடக்கி ஆள்பவனும்,
இலட்சம் படைகளை திரட்டி
மூக்கணாம் கயிறின்றி
முரண்டு பிடிப்பவனும்
கோடான கோடி டாலர்களை
அடுக்கி அரண்களை அபகரித்தவனும்
ஈரல்குலை நடுநடுங்க
அற்பமாய் ஆக்கி போடும்
கண்ணற்ற அழிவின் கடவுளெது?

தூங்கா நகரங்கள் உச்சிப்பொழுதினிலும்
தாலாட்டையும் தலையணைகளையும்
தானமாக பெற்றுக்கொள்கிறது.

Continue Reading →

கவிதை: மழை வாழ்த்தும் காதலர்!

மழை வாழ்த்தும் மானுடர்!
வாழையிலை குடையாக
வதனமெலாம் மலர்ச்சியுற
விண்ணின்று பன்னீராய்
மழைத்துளிகள் சிந்திடவே
நாளைதனை நினையாமல்
நனையுமந்த திருக்கோலம்
பார்ப்பவரின் மனமெல்லாம்
பக்குவமாய் பதிந்திடுமே   !

Continue Reading →

யாத்திரை போகலாம்

- தம்பா (நோர்வே) -இடி,மின்னல், நெருப்பு
தமக்குள் எதிரியை தேடும்
மைதானத்தில் ஊடுபயிராக
மனிதம் துளிர் விடுகிறது.

உயிர் வலித்து
குருதி பருகும் உடல்
ஆத்மா எனும் அந்நியனுக்கு
அரிதாரம் பூசுகிறது.

ஒளி மறந்த தீயின் குளிர்
வேள்வியின் திசையெங்கும்
ஏடுதுவங்கும் உதிர்வின் பேச்சு.

பறக்கின்ற காற்றில்
உனது மூச்சுக்காற்று எது?
ஓடுகின்ற ஆற்றில்
நீ விட்ட கண்ணீர் எது?

Continue Reading →

கொடுத்து வரும் தண்டனையே கொரோ நோவாய் வந்திருக்கு !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இயற்கை யெனும் பெருமரணை
நொருக்கி நிற்கும் வகையினிலே
எடுத்து வரும் பொருத்தமிலா
முயற்சி யெலாம் பெருகுவதால்
இயற்கை அது சீற்றமுற்று
எல்லை இலா வகையினிலே
கொடுத்து வரும் தண்டனையே
கொரோ நோவாய் வந்திருக்கு   !

Continue Reading →

இழந்த தருணங்கள்….

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

பகலவன் மறைந்து
சில மணி கடந்தும்
அலுவலக வேலையில்
நாளைக்குள் பணியை
நிறைவு செய்யும்
முனைப்பில்
கோப்புகளுக்கிடையே
புதைந்தபடி….
செல்லிடப்பேசி
அழைப்பு மணியில்
அரை மணிக்கு ஒரு முறை
அப்பா எப்ப வருவீங்க?
எனும் பிஞ்சு மொழிக்கும்
விரைவாக வந்து விடுகிறேன்
எனும் பொய்யான பதில்
கூறியவாறே
தொடர்கிறேன் பணியை …..

Continue Reading →