நிழல் – பதியம் இணைந்து நடத்தும் 24 வது குறும்பட பயிற்சி பட்டறை!

அன்புடையீர் வணக்கம்,  நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 24 வது குறும்பட பயிற்சி பட்டறை.டிசம்பர் 25 முதல் 31 வரை நாமக்கலில் நடக்க இருக்கிறது.இதில் நடிப்பு, திரைக்கதை ,கேமெர,முதலியவை…

Continue Reading →

நந்தினி சேவியாரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்“ வாசக நோக்கில் சில குறிப்புகள்

நந்தினி சேவியாரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்“ வாசக நோக்கில் சில குறிப்புகள்
சுரண்டல், இனபேதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றினை சமூக வாழ்நிலை மாந்தர்கள் ஊடாட்டத்தின் மூலம் நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர். மேய்ப்பன், ஒற்றைத்தென்னை, கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு. விருட்சம் ஆகிய எட்டுக்கதைகளும் வறுமை, இனம், சாதி ஆகிய மூன்று சமூகப்பிரச்சினைகளையும் உயிர்ப்புடன் நம்முன் பேசுகின்றன. அயல்கிராமத்தைச் சேரந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு அடுத்ததாக இச்சிறுகதைத் தொகுதி, கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கதையை நீட்டி முடக்காமல் தேவைக்கேற்ப அச்சொட்டாகச் சொல்வதில் வல்லவர். கூடவே எள்ளல் உணர்வுடன் வாசிக்கத் தூண்டுகிறது. இக்கதைகள் எட்டினையும் விமர்சனம் என்றில்லாமல் ஒரு வாசக அனுபவத்துடன், ஏனைய வாசகர்களும் வாசிக்கவும் ஜோசிக்கவும் வைக்கும் நோக்கில் இரசனைக்குறிப்பாக எழுதமுற்படுகின்றேன்.

Continue Reading →

‘பதிவுகள்’ சிறுகதைகள் -1

பதிவுகள் சிறுகதைகள் -1

-‘பதிவுகளி’ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் – பதிவுகள்-

Continue Reading →

தினக்குரல்:காம்: இலங்கைத் தமிழர் – வடக்கு, கிழக்கில் ஜனநாயகக் குரல் மீண்டும் எழுந்துவிடக்கூடாது என்றளவில் இராணுவ ஆட்சி

இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிப்பதற்குக் கூட இந்த நாட்டிலே உங்களுடைய இராணுவம் அனுமதிப்பதாக இல்லை. அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் கிண்டி எறிந்து சீரழித்து விடுகின்றீர்கள். இதுவா இந்த நாட்டினுடைய பண்பாடு, நாகரீகம் என்று நான் உங்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன். கொல்லப்பட்ட எல்லாளனுக்குக்கூட உங்களுடைய மன்னன் அவனை வெற்றி பெற்றவன் அங்கே நினைவுச்சின்னம் வைத்து அவனை வணங்க முடியுமானால் மனித குலத்தின் உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர்களுடைய புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் மரியாதைக்காகக் காப்பாற்ற வேண்டாமா?

Continue Reading →

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ‘பதிவுக’ளில் அவ்வப்போது எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகளில் சில!

திரைப்படம்: அமெரிக்க பூதமும்,  கம்யூனிச பிணமும்! – சுப்ரபாரதிமணியன் – 
 
சுப்ரபாரதிமணியன்[எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ‘பதிவுக’ளில் அவ்வப்போது எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகளில் சில ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. – பதிவுகள்] போலந்து திரைப்படம் ஒன்று . ஸ்டாலின் காலம் பற்றினதில் கம்ய்யூனிசத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு சிறுவன் ஒரு படத்தை பாதுகாத்து வருகிறான். அவனை வேறொரு   கம்யூனுக்கு மாற்றுகிறார்கள். கம்யூன் தலைவன்  கெடுபிடியான ஆசாமி. குரூரமானவன். சிறுவன் வேறொரு கம்யூனுக்குப் போவதற்காக் தனது பொருட்களை தேடி எடுத்து அவசர கதியில் புறப்படுகிறான். அவன் பாதுகாத்து வைத்திருந்த படம் எதெச்சையாய் கீழே விழுகிறது.  கம்யூன் தலைவன் கால் ப்ட்டு கிழிகிறது. கம்யூன் தலைவன் கேட்கிறான். ” யார் இந்த வயதானவன் ” பையன்  அதிர்ந்து போய் சொல்கிறான்.  ” லெனின்” லெனின் படம் கிழிவுறுவது அவனை வெகுவாக பாதிக்கிறது.  கம்யூனிசத்தில்  அக்கறை கொண்ட அய்ம்பது வயது பெண் ஒருத்தி இதே போல் லெனின் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைவதை “குட்பை லெனின் ” என்ற செர்மன் படத்தில் பார்க்கலாம். ” லெனின் பிறப்பு ரஸ்யாவிற்கு ஏற்ப்பட்ட  துர்பாக்கியம்.  அந்த நாட்டின் அடுத்த துர்பாக்கியம் அவர் மரணம் ” என்று சர்சில் எழுதினாராம். ஸ்டாலின்  ஆட்சியின் கொடுமைகள் சர்ச்சிலின் கருத்திற்கு முன்னுரையாக இருந்திருக்கிறது.

Continue Reading →

முல்லைப்பெரியாறு அணை (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து..)

முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.முல்லைப்பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைபெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட ஆணை ஆகும். மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசயப்பணிகளுக்கு பயன்படுத்திகொள்ளும் பொருட்டு ‘பெரியார் திட்டத்தின்’ கீழ் அப்போதை மெட்ராஸ் மகாநாதிற்கும் திருவிதாங்கூர் மகாராஜவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

Continue Reading →

நடிகை செளகார் ஜானகிக்கு வயது எண்பது!

செளகார் ஜானகிபழம்பெரும் நடிகையான செளகார் ஜானகிக்கு 12.12.2011 அன்று வயது எண்பது. சிறந்ததொரு குணசித்திர நடிகையாக விளங்கிய செளகார் ஜானகி அமைதியாகச் சாதனைகள் பலவற்றைப் புரிந்துவிட்டிருக்கின்றார். தற்போது பெங்களூரில் வசித்துவரும் செளகார் ஜானகி இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 385 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பது பிரமிப்பைத் தருகின்றது. இது தவிர 300 தடவைகள் மேடையேறியுமிருக்கின்றார். சிறுவயதிலிருந்தே செளகார் ஜானகி அவர்கள் கலையுலகில் நுழைந்து விட்டார். தனது 11 வயதில் தெலுங்கு வானொலிக் கலைஞராக விளங்கிய ‘செளகார் ஜானகி’  மூன்று மாதக் கைக்குழந்தையுடன் விளங்கிய தாயாகத் திரையுலகில் காலடியெடுத்து வைத்துச் சாதனைகள் படைத்தார். நாகிரெட்டியாரின் விஜயா கம்பைன்ஸ்ஸாரினால் தயாரிக்கப்பட்ட செளகார் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ‘செளகார் ஜானகி’ என்று அழைக்கப்படத் தொடங்கினார்.  அப்படத்தில் அவர் என்.டி.ராமராவுடன் நடித்திருப்பார்.  அவரது முதல் படமான ‘செளகார்’ படத்திற்காக அவர் பெற்ற வருமானம் ரூபா 2500 மட்டுமே.

Continue Reading →

மகாகவி பாரதி: சூழலை மீறிச் சிந்தித்த மாகவிஞன்!

மகாகவி பாரதி: சூழலை மீறிச் சிந்தித்த மாகவிஞன்!மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் டிசம்பர் 11. தனது குறுகிய காலத்து வாழ்வில் அவரது சாதனைகள் வியப்பைத் தருவன. தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிச் சிந்தித்த கவிஞன் அவன். ‘தன்னுடை அறிவி னுக்குப் புலப்பட லின்றியே தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம் தீயபக்தி யியற்கையும் வாய்ந்தி’டாத கவிஞனவன்.  தன் அறிவு கொண்டு , தனக்குச் சரியென்று பட்டதை உரைத்திடத் தயங்காதவன் அவன். தான் வாழந்த சமுதாயத்தைப் பற்றி, அச்சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளைப் பற்றி, அந்நியர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த தன் பிறந்த மண் பற்றி, அதன் விடுதலை பற்றி, பெண் விடுதலை பற்றி, வர்க்க விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மானுட இருப்பைப் பற்றி, சக உயிர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பாடிய, எழுதிய படைப்பாளி அவன். பணத்தை மட்டுமே வைத்து எடைபோடும் இந்த மானுட சமுதாயம், அவன் வாழ்ந்த காலத்தில், வாழத் தெரியாதவனென்றெல்லாம் அவனை எள்ளி நகையாடியது. ஆனால் இன்று .. அதே மானுட சமுதாயம் அவனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. மாகவி பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ‘பதிவுகள்’ அவனது கவிதைகள் சிலவற்றை மீள்பிரசுரம் செய்கிறது.

Continue Reading →

கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்க ஏற்பாட்டில் மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்!

நாள்: 18.12.2011 ஞாயிற்றுக்கிழமைநேரம்: காலை மணி 9:30 – மாலை மணி 6:30இடம்: ‘சிந்தா சாயாங் ரிசோர்ட்’ (Cinta Sayang Resort) மேலதிக விபரங்கள் … உள்ளே

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்

வணக்கம் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் நாற்பது மாதங்களை கடந்துவிட்டது. குறும்பட வட்டத்தின் முதல் பகுதி சென்னை எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது. மிகுந்த பொருட்செலவின் காரணமாக இந்நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் தியேட்டர் லேப் அலுவலத்தில் மாற்றப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சக நண்பர்கள் குறும்படங்களோடு, உலக அளவில் புகழ்பெற்ற குறும்படங்களும் திரையிடப்பட்டு வருகிறது. சென்னை குறும்பட ஆர்வலர்கள் அனைவரும் எவ்விதக் கட்டணமுமின்றி இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம். மேலும் குறும்பட எடுக்க நினைக்கும் ஆர்வலர்களுக்கான வழிகாட்டலும் இந்நிகழ்வில் நடைபெறுகிறது.

குறும்பட வட்டம் – பகுதி இரண்டு.
நாள்: 10-12-2011, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

Continue Reading →