கவிஞர் சோ. பத்மநாதன் மொழிபெயர்த்த Sri Lankan Tamil Poetry

கவிஞர் சோ. பத்மநாதன்  மொழிபெயர்த்த Sri Lankan Tamil Poetry

கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் மொழிபெயர்த்த ஈழக்கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய Sri Lankan Tamil Poetry – An Anthology என்ற (தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட) தொகுப்பு வெளிவந்துள்ளது.  இத்தொகுப்பில் சில்லையூர் செல்வராசன், சேரன், மஹாகவி, தா. இராமலிங்கம், எம்.ஏ நுஃமான், செழியன், karoline kaitampillai, திருமாவளவன், தானா விஷ்ணு, த. அஜந்தகுமார், த. ஜெயசீலன், துவாரகன், சோ.ப, றஷ்மி, ஆர். முரளீஸ்வரன், காஸ்ரோ, அஷ்வகோஸ், வேலணையூர் தாஸ், ஒட்டமாவடி அறபாத், அஷ்ரப் சிஹாப்டீன், முல்லை முஸ்ரிபா, சங்கரி, அவ்வை, மனோகரி, சோலைக்கிளி, சர்மிளா செய்யித், சடகோபன், பா. அகிலன், கருணாகரன், கு. றஜீபன், இ.சு முரளிதரன், கி.பி அரவிந்தன் ஆகியோரின் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் உள்ளன. தொகுப்பில் 67 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் 25.03.2015 மாலை 3.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி கவிதை நூல் வெளியிடப்பட்டது.

kuneswaran@gmail.com