வாசிப்பும், யோசிப்பும் 62: கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 62: கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி....கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி....‘டொராண்டோ’வில் 300,000ற்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். அரங்கேற்றங்கள், நூல் வெளியீடுகள், விருதுகள் வழங்கும் விழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. என்ன பயன்? டொராண்டோவிலுள்ள நூலகக் கிளைகளுக்கு இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கும் வசதிகள் இல்லை. தமிழகத்திலுள்ளதைப்போல் இங்குள்ள நூலகக் கிளைகளுக்கு இங்கு வாழும் எழுத்தாளர்கள் வெளியிடும் நூல்களை வாங்கும் வசதி செய்யப்பட்டால் , அதன் மூலம் எழுத்தாளர்கள் தங்களது நூல்களைத் தொடர்ந்தும் வெளியிடும் நிலை ஏற்படுமல்லவா.  இது போல் மார்க்கம் நகரிலும் நூலகக் கிளைகள் பல உள்ளன. அங்கும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அந்நூலகக் கிளைகளுக்கு விற்பதற்கு வழி வகைகள் செய்தால் எவ்வளவு நன்மையாகவிருக்கும். ஏன் இதனை இங்குள்ள நூலகங்கள் செய்யவில்லை. பிரச்சினை இதுதான்: இங்குள்ள நூலகங்கள் நூல் வாங்குவதற்குப் பொறுப்பான தமிழ் பேசும் அதிகாரிகளை நம்பியுள்ளன. இவர்கள்தான் இந்த விடயத்தைப நூலகங்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்கிறார்களில்லை. ஏன்? அவ்வப்போது இங்குள்ளவர்களின் ஓரிரு புத்தகங்களை வாங்குவதோடு சரி.

Continue Reading →

மரணித்த பின்னும் ஜீவித்திருத்தல் என்பது

2014 செப்டெம்பர் 10இல் நிகழ்ந்த நிர்மலதா -தேவகாந்தன்-   1971 ஆவணி 31இல் பிறந்த நிர்மலதா என்கிற ஒரு பெண்ணின் மரணம், செப்டெம்பர் 10, 2014இல் நிகழ்ந்தது. எல்லோர்வரையிலும் நாள்தோறும் யுத்தங்களினாலும், பட்டினியாலும், நோயினாலும் சம்பவிக்கும் லட்சோப லட்சம் மரணங்கள்;போல் இதுவும் ஒன்றாயினும், அவளது தந்தைக்கு அது அவனது சொந்த மரணமேபோல் சுயத்தின் இழப்பாயிற்று.தாய் தந்தையர், கணவன் மனைவி, சகோதரங்கள், மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடையேகூட இவ்வளவு பாதிப்போடு ஒரு மரணம் நிகழ்ந்திருக்க முடியும். அன்பினது ஆழமான வேரூன்றல் என்பதிலிருந்து இந்தப் பாதிப்பு கூடியும் குறைந்துமாய் விளைகிறது. ஒரு நெருங்கிய உறவின் மரணத்தில் கண்ணீரே சிந்தாமல், ஒரு வாய்ச் சொல் அரற்றிப் புலம்பாமல் நொருங்கிப்போனவர்கள் இருக்கிறார்கள். போலவே, அழுது விழுந்து புரண்டு கதறிய பின், சுடலையிலிருந்து அல்லது மின்தகன ‘தோட்ட’த்தினின்று திரும்பிய நாளின் பொழுது விடிந்ததிலிருந்து காதலும் காமமும் இலௌகீகத் தேடல்களுமாய் பிரிவுகளை மறந்துபோனவர்களும் நிறையவே யதார்த்தத்தில் உண்டு.  தந்தையானவன் உடைந்து நொறுங்கியது பெற்ற மகளென்ற பாசத்தில் மட்டும் உருவானதில்லை. தான் தவறவிட்ட அடைவுகளை அவளே தன் சுயபலத்தில் நிறைவேற்றிக்கொண்டிருந்தாள் என்பதனாலுமாகும்.

Continue Reading →