வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) கவிதைகளிரண்டு!

வேதா. இலங்காதிலகம்

1. மனிதர் மனிதராக இல்லை..

மனிதசாதி – மனுக்குலம் இன்று
மனிதம் மறந்து மனிதமிழந்து
மனித மிருகமாகின்றதே.
புனிதரெனப் பகட்டாக இவர்
புனைய ஓர் ஆடையெதற்கு!
மனிதர் மிருகவேட்டை யாடுவார்,
மனிதர் தலைகுனிவா யின்று
மனித வேட்டையாடுகிறாரே ஏன்!

Continue Reading →

அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்த மூத்த படைப்பாளிகள் எஸ்.பொ. – காவலூர் ராஜதுரை நினைவரங்கு!

காவலூர் ராஜதுரை1_es_po5.jpg - 3.96 Kbவுஸ்திரேலியா – சிட்னியில்  அண்மையில்  அடுத்தடுத்து  மறைந்த ஈழத்தின்  மூத்த  படைப்பாளிகளான  எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  காவலூர்  ராஜதுரை  ஆகியோரின்   படைப்பிலக்கிய மதிப்பீட்டு    நினைவரங்கு  எதிர்வரும்  20  ஆம்   திகதி (20-12-2014)  சனிக்கிழமை   மாலை  5   மணிக்கு  மெல்பனில்  Preston – Darebin Intercultural Centre இல்  நடைபெறும். கலை,   இலக்கிய  ஆர்வலரும்  சட்டத்தரணியுமான  செல்வத்துரை ரவீந்திரன்  தலைமையில்    நடைபெறவுள்ள   இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவுக்கு   வருகை   தந்துள்ள  ஈழத்தின்   மூத்த இலக்கியத்திறனாய்வாளரும்   இலங்கை   வானொலி   மற்றும்    The Island  , வீரகேசரி    முதலான  நாளிதழ்களின்  மூத்த ஊடகவியலாளருமான திரு. கே.எஸ்.சிவகுமாரன்,   கண்டி  அசோக்கா வித்தியாலய    ஸ்தாபகர்   நடராஜாவின்    துணைவியார்    இலக்கிய ஆர்வலர்   திருமதி  லலிதா  நடராஜா  ஆகியோர்  அமரர்கள் எஸ்.பொ. –  காவலூர்  ராஜதுரையின்  உருவப்படங்களுக்கு விளக்கேற்றி    நிகழ்ச்சிகளை   தொடக்கிவைப்பர். கலாநிதி    கௌஸல்யா   ஜெயேந்திராவின்    வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்    இந்நிகழ்ச்சியில்     சட்டத்தரணி   ரவீந்திரன் தலைமையுரை    நிகழ்த்துவார்.

Continue Reading →