வெளிவரவுள்ளது ‘நெய்தல்’ எனும் கவிதை இதழ்! படைப்புகளை அனுப்பி வையுங்கள்.

வணக்கம், ‘நெய்தல்’ எனும் கவிதை இதழ் அச்சில் வெளிவரவுள்ளதால் கவிதைகள்,கவிதை சார்ந்த கட்டுரைகள்,கவிதை இதழ்களின்,நூல்களின்  அறிமுகங்கள்,கவிதைகள் பற்றி பெரியோர்கள் சொன்னவைகள் என எழுதலாம்.மொழிபெயர்ப்புக்கவிதை கள்  முழுமையாக இருத்தல்…

Continue Reading →

ஆய்வு: அற இலக்கியங்களில் இன்னா செய்யாமை

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் இன்னா செய்யாமை குறித்த செய்திகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இன்னா செய்யாமை
உலகில் வாழப்பிறந்த உயிர்கள் அனைத்தும் பிறர்க்குத் துன்பம் அடையச் செய்து விட்டு அதனால் ஒருவன் பயன்  பெற்று வாழ்வது அற நூல்களில் விலக்கப்பட்ட ஒன்றாகும்

Continue Reading →