ஆய்வு: ‘தமிழ்த்தென்றல்’ நளினிதேவி:

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரிய மதுரையில் பிறந்த இவர், இளம் வயது முதற்கொண்டே தன்னுடைய தாத்தா, தந்தையார் வழியில் தமிழ்ப்பற்றை வரித்துக் கொண்டார். பாத்திமா கல்லூரியில் சிறப்பு தமிழ்ப்பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில்  அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை போன்றோரிடமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ., மொ.துரையரங்கனார், விஜயவேணுகோபால் முதலான தமிழ் அறிஞரிடம் தமிழ் பயின்றதால் தமிழுணர்வும், தனித் தமிழ்ப்பற்றும் இவருக்குள் ஆழமாக ஏற்பட்டன. அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். ஈழத்தமிழர்கள் பால் அன்பு கொண்ட இவர் 1980இல் ஈழத்தமிழர் ஆதரவுப்போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியான இவரது சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை போன்றவை பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஆசிரியர்ப்பணி:
தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதைப் புரிய வைத்து செயல்படுத்தினார் (த.நே.41.ப.26)

Continue Reading →

கவிதைகள்: 1. நான் 1 & நான் 2. கவிதை: 2. சிறு பயணம்

கவிதை: 1. நான் 1 & நான் 2

1

கவிதை படிப்போமா?நான் 1: போர்கள் எனக்கு பிடிக்காது
நான் 2: ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு போருக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் போர்கள் எனக்கு பிடிக்கும்

2

நான் 1:  கொலைகள் எனக்கு பிடிக்காது
நான் 2:  ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு கொலைக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் கொலைகள் எனக்கு பிடிக்கும்

Continue Reading →

கவிதை: பரந்த மனம் எழவேண்டும் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்
தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது
அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்
அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது
ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது
அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி
ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்
அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்
ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்
அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !

Continue Reading →