ஜூன் 2014 கவிதைகள்!

ஜூன் 2014 கவிதைகள்!கடற் திராட்சைகள்

மூலம்: டெரெக் வால்காட்
தமிழில்: ரா பாலகிருஷ்ணன்

ஒளியில் சரியும் அப்பாய்மரம்
தீவுகளால் களைப்புற்றுள்ளது
இரு பாய்மரப் படகொன்று கரிபியனை நோக்கி
வீடடைய ஏஜியன் வழி இல்லம் நோக்கி
ஓடிசியுஸ் செல்லலாம்

திராட்சைக் கொத்துகளின் கீழ்
தந்தையும் மகனும் கொண்ட பேராவல்
கல் பறவையின் ஒவ்வொரு ஓலத்திலும்
நசிக்கவின் பெயரை உணரும் காமுகன் போல்

Continue Reading →

கவிதை: சிவரமணிக்கு…

1_sivaramani5.jpg - 3.27 Kbஉன்னிடமொன்றைச் சொல்லும்
தேவை எனக்கிருக்கிறது
எனினும் நான் வாய் திறக்கும்வரை
பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்
உன்னைப் பார்க்கவென
நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்
அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்

அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்
உனை நான் இதயத்தில் உருவகித்தபடி
போய்க் கொண்டிருந்தேன்
எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்
இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து
உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்

Continue Reading →

கவிதை: ’ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா….!

Latha Ramakrishnan(1)
 பார்க்கும்போதெல்லாம் ஆசிரியர் கையில் பிடித்திருக்கும் குச்சி
வெவ்வேறாய் காட்சியளிக்கிறது குழந்தைக்கு….
ஒரு சமயம் பாம்பு _ ஒரு சமயம் சாட்டை _
ஒரு சமயம் ‘பெல்ட்’ _ ஒரு சமயம் முதலை _
ஒரு சமயம் சூட்டுக்கோல் _ இன்னும்…..
கற்பனையும் நிஜமும் கலந்ததோர் வெளியில்
வாழவேண்டியிருப்பதில்
குழந்தையின் உள்ளமெங்கும் ஊமைரணங்கள்.

(2)
”வணக்கம் சொல். பணிவு வேண்டாம்?”
என்று உறுமும் ஆசிரியரின் கண்களிலிருந்து பாய்ந்துவரும் காட்டெருமைக் கொம்புகள்.குத்திக் கிழிக்க
குருதி பெருகும் குழந்தை மனதை
மிச்சம் மீதியில்லாமல் கவ்வுகிறது குகையிருட்டு.

Continue Reading →

அன்னையர் தினக் கவிதை: அன்னையின் கருணை

அன்னையர் தினக் கவிதை: அன்னையின் கருணை

அன்னையின் கருணை அமுதம் போன்றது
அன்பே தாயென வடிவம் பெற்றது
உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது
உறவே நிறையென உள்ளம் நிறைந்தது

Continue Reading →

மே 2014 கவிதைகள்!

 இர.மணிமேகலை (பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.,கோயம்புத்தூர்.) கவிதைகள் இரண்டு!

1. பூலோக வாசிகள்

மே 2014 கவிதைகள்!வானளாவி நிற்கும் கட்டிடக்கூரைகள்
பிரபஞ்சவெளிக்குச் செய்தியனுப்புகின்றன
தார்ச்சாலைகளில் பாய்ந்துசெல்லும் மகிழ்வுந்துகளில்
உறுமும் புலிகள் பயணிக்கின்றனவாம்
பலதரப்பட்ட மலைப்பாம்புகள் அவற்றைச்சாகசத்துடன்
ஓட்டுகின்றன என்பதும் குறிப்பு
கவனிக்க…
பயணத்தின்போது சில இடங்களில்
நாசுக்கும் அழகும் மிளிரும் மான்தென்படும்
பாம்பு அதனிடம்
கண்சிமிட்டிக் கரம் குலுக்கி நகரும்..
ஒதுக்கப்பட்ட தவளைகளைக்கண்டால்
பாம்புக்குக் கொண்டாட்டம்
வயிற்றை நிரப்பிக்கொள்ளும்
விழுங்கும் சிங்க ராஜாக்களைக்கண்டால்
கீழ்நோக்கிய பார்வையுடன் பாதம் பணியும்

Continue Reading →

ரிஷி கவிதைகள்: கவிதைக்கோலோச்சிக்கு….

Latha Ramakrishnan

(1)
கால்காசு கிடைக்க வழியில்லாதபோதிலும்
கவிதைமேல் காதலாகிக் கசிந்துருகி
காயங்களுக்கு வடிகாலும்,
மாயவுலகத் திறவுகோலுமாய்
காலங்காலமாய் எழுதப்பட்டவைகளிலெல்லாம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்
கால தேச வர்த்தமானங்கள்;
தேடப் பொருதியின்றி திட்டித் தீர்க்கிறீர்கள்.
பொருட்படுத்திப் படிக்கும் பெருந்தன்மையின்றி
உங்களுக்கு முன்னே எழுதிய கவிஞர்களை பிரச்னையற்றவர்களாக்கி
பெருந்தனக்காரர்களாக்கி
கவிதையைப் பொழுதுபோக்காக பாவிக்கும் பித்தலாட்டக்காரர்களாக்கி
பேட்டை தாதாக்களாக்கி
சோதாக்களும் பீடைகளும் பீத்தைகளுமாக்கி
சேறு பூசி, செம்புள்ளி கரும்புள்ளி குத்தி,
சிலுவையிலறைந்து முடித்து
குண்டாந்தடியை செங்கோலெனச் சுழற்றியபடி
பரிவாரங்களோடு பவனி வந்து
உங்களுக்கு நீங்களே விசுவரூப சிலைவடித்துக்கொள்கிறீர்கள்
உலக அரங்குகளில்.
உண்மையான கலகம் இதுவல்ல என்று
உணர்வீர்களோ என்றேனும்?

Continue Reading →

சித்திரையே வருக! கவிதைகளிரண்டு!

1_greetings.jpg - 4.88 Kb

சித்திரைப் பெண்ணே சித்திரைப்பெண்ணே
சேதி தெரியுமா?
தமிழர் இனம் இங்கே
தடம் புரண்டு; தறிகெட்டு
பல்லாண்டுத் தரிசுகளாய்
வாழ்கின்றார் கொடுமைதன்னில்
மீட்டெடுப்பாரில்லை
கடைக்கண் பார்வை வேண்டுகின்றோம்
சித்திரைப் பெண்ணே
மடிதனிலே பால் வார்ப்பாய்
மாந்தராய் வாழவைப்பாய்
சிகரத்தில் வைத்தே அழகு செய்வாய்…….!

Continue Reading →

ஏப்ரல் 2014 கவிதைகள்!

ஏப்ரல் 2014 கவிதைகள்!எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) கவிதைகள்!

1. நுழைதல்

எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்
எனது கைவிரல்களை ஒற்றியொற்றி
உன் நேசத்தைச் சொல்லிற்று

பசியினைத் தூண்டும் சோள வாசம்
காற்றெங்கிலும் பரவும்
அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை
முடித்து வந்திருந்தாய்
குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்
பெண்களின் சித்திரங்களை
புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்
வெயிலெரித்த சருமத்தின் துயரம்
உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்
அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது

நகரும் தீவின் ஓசை
நீ நடந்த திசையெங்கிலும்
பாடலாகப் பொழிந்திடக் கூடும்
அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்
வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்

Continue Reading →