நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 27

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் இருபத்தி ஏழு

அவர்களின் அறைக்கு நகர்ந்து சென்று நோட்டமிட்டபோது அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது. எனவே மெல்ல அடிமேல் அடி வைத்து பத்திரமாகப் படிக்கட்டில் இறங்கினேன். மொத்த வீடும் நிசப்தமாக இருந்தது. ஒரு சிறு சத்தம் கூட கேட்கவில்லை. உணவருந்தும் அறையின் சின்ன சந்து வழியாக நுழைந்து பார்த்தபோது சடலம் வைத்திருக்கும் அறையில் பாதுகாவலாக இருந்த மனிதர்கள் அனைவரும் அவரவர் இருக்கைகளிலேயே தூக்கத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். சவம் வைக்கப்பட்டுள்ள முன்னறையிலிருந்து வெளியே வராந்தாவுக்குச் செல்லும் கதவு திறந்திருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதவின் வழியே புகுந்து வராந்தாவுக்குள் நுழைத்தேன். அங்கேயும் யாருமில்லை. பீட்டரின் மிச்சம் மட்டுமே இருந்தது. அதையும் தாண்டி வாசலுக்குச் செல்லும் முன்புறக் கதவு பூட்டியிருந்தது. அதனின் சாவியும் அங்கே இல்லை.

அந்த சமயத்தில் யாரோ என் பின்புறமுள்ள படிக்கட்டுகளில் இறங்கிவரும் சத்தம் கேட்டது. அங்குமிங்குமாக ஓடி நான் ஒளிந்து கொள்ள இடம் தேடியபோது முன்னறையில் சவப்பெட்டி அருகே மட்டுமே கொஞ்சம் இடம் இருந்தது. அந்தப் பெட்டியின் மேல்மூடி ஒருக்களித்துத் திறந்தவாறு இருந்ததால், ஈரத்துணியால் மூடி வைத்திருக்கும் இறந்த மனிதனின் முகத்தையும், அவன் மேல் மூடப்பட்டிருந்த சவச்சீலையையும் என்னால் நன்கு காண முடிந்தது. காசு மூட்டையை சவத்தின் கைகள் குறுக்காக வைக்கப்பட்டுள்ள பகுதியின் மேல் மூடியினுள் செருகி வைத்தேன். அந்தக் கரங்கள் மிகவும் குளிர்ந்தாக இருந்து என்னையும் உறைய வைத்தது. பின்னர் அறையின் குறுக்காக ஓடிச்சென்று கதவின் பின் மறைந்து கொண்டேன்.

படிக்கட்டுகளில் மேரிஜேன் இறங்கி வந்துகொண்டிருந்தாள். சவப்பெட்டி அருகே மெதுவாகச் சென்று, மண்டியிட்டு, உள்ளே பார்த்தாள். பின்னர் தனது கைக்குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் கண்ணீர்
சிந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவளின் பின்புறமாக நான் நின்றிருந்ததால், அவளின் அழுகைச் சத்தம் எனக்கு கேட்கவில்லை. எனது மறைவிடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். உணவருந்தும் அறையைத் தாண்டிச் செல்கையில் சவப்பெட்டி அருகே இருந்த இரண்டு ஆண்களும் என்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். அந்தச் சந்து வழியாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று நோக்கினேன். யாரும் அசையக் கூட இல்லை.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 27

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் இருபத்தி ஏழு

அவர்களின் அறைக்கு நகர்ந்து சென்று நோட்டமிட்டபோது அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது. எனவே மெல்ல அடிமேல் அடி வைத்து பத்திரமாகப் படிக்கட்டில் இறங்கினேன். மொத்த வீடும் நிசப்தமாக இருந்தது. ஒரு சிறு சத்தம் கூட கேட்கவில்லை. உணவருந்தும் அறையின் சின்ன சந்து வழியாக நுழைந்து பார்த்தபோது சடலம் வைத்திருக்கும் அறையில் பாதுகாவலாக இருந்த மனிதர்கள் அனைவரும் அவரவர் இருக்கைகளிலேயே தூக்கத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். சவம் வைக்கப்பட்டுள்ள முன்னறையிலிருந்து வெளியே வராந்தாவுக்குச் செல்லும் கதவு திறந்திருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதவின் வழியே புகுந்து வராந்தாவுக்குள் நுழைத்தேன். அங்கேயும் யாருமில்லை. பீட்டரின் மிச்சம் மட்டுமே இருந்தது. அதையும் தாண்டி வாசலுக்குச் செல்லும் முன்புறக் கதவு பூட்டியிருந்தது. அதனின் சாவியும் அங்கே இல்லை.

அந்த சமயத்தில் யாரோ என் பின்புறமுள்ள படிக்கட்டுகளில் இறங்கிவரும் சத்தம் கேட்டது. அங்குமிங்குமாக ஓடி நான் ஒளிந்து கொள்ள இடம் தேடியபோது முன்னறையில் சவப்பெட்டி அருகே மட்டுமே கொஞ்சம் இடம் இருந்தது. அந்தப் பெட்டியின் மேல்மூடி ஒருக்களித்துத் திறந்தவாறு இருந்ததால், ஈரத்துணியால் மூடி வைத்திருக்கும் இறந்த மனிதனின் முகத்தையும், அவன் மேல் மூடப்பட்டிருந்த சவச்சீலையையும் என்னால் நன்கு காண முடிந்தது. காசு மூட்டையை சவத்தின் கைகள் குறுக்காக வைக்கப்பட்டுள்ள பகுதியின் மேல் மூடியினுள் செருகி வைத்தேன். அந்தக் கரங்கள் மிகவும் குளிர்ந்தாக இருந்து என்னையும் உறைய வைத்தது. பின்னர் அறையின் குறுக்காக ஓடிச்சென்று கதவின் பின் மறைந்து கொண்டேன்.

படிக்கட்டுகளில் மேரிஜேன் இறங்கி வந்துகொண்டிருந்தாள். சவப்பெட்டி அருகே மெதுவாகச் சென்று, மண்டியிட்டு, உள்ளே பார்த்தாள். பின்னர் தனது கைக்குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் கண்ணீர்
சிந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவளின் பின்புறமாக நான் நின்றிருந்ததால், அவளின் அழுகைச் சத்தம் எனக்கு கேட்கவில்லை. எனது மறைவிடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். உணவருந்தும் அறையைத் தாண்டிச் செல்கையில் சவப்பெட்டி அருகே இருந்த இரண்டு ஆண்களும் என்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். அந்தச் சந்து வழியாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று நோக்கினேன். யாரும் அசையக் கூட இல்லை.

Continue Reading →

பத்துநாட்கள் – பத்து திரைப்படங்கள்: திரைப்படம் (2): – சத்யஜித் ரேயின் அகண்டக் (Agantuk- அந்நியன் – The Stranger)

இயக்குநர் சத்யஜித் ராய்சத்யஜித் ராயின் கடைச்சிப்படம் இந்தப்படம். இந்திய – பிரெஞ்சுக் கூட்டுத்தயாரிப்பு.  இது சத்யஜித் ராயின் ‘அதிதி’ சிறுகதையொன்றின் திரை வடிவம். இத்திரைப்படத்தின் இயக்கம், இசை, திரைக்கதை எல்லாவற்றையுமே மிகவும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் சத்யஜித்  ராய். இத்திரைப்படத்துக்கு இந்திய மத்திய அரசின் விருதுகளுடன் , சர்வதேசத் திரைப்பட விழா விருதுகளும் கிடைத்துள்ளன. வங்காள நடிகர் உத்பால் தத் (Utpal Dutt) மிகச்சிறந்த நடிகர்களிலொருவர்.

இத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு முன் இளம் வயதில் வீடு துறந்து, மேற்கு நாடுகள் பலவும் அலைந்து திரிந்து, மானுடவியலில் பட்டம் பெற்று அத்துறையில் ஊடகங்களுக்கு எழுதி வருபவராக விளங்கும் மனோமோகன் மித்ராவாக அவர் நடித்திருக்கிறார். பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் தன் மருமகள் வீட்டுக்கு விருந்தினராக, அந்நியராக வருகை தருகின்றார். அவரை அவர் உறவினர்கள் எவ்விதம் வரவேற்கின்றார்கள், உபசரிக்கின்றார்கள் , முடிவில் அவர் என்ன செய்கின்றார் என்பதை விளக்குவதுதான் திரைக்கதையின் பிரதான நோக்கம். அவரது நடிப்பும், அப்பாத்திரச்சிறப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. இவரது பாத்திரத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய முக்கிய எண்ணங்களிலொன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது புகழ்பெற்ற நாவலான ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு  உலகம்’ நாவலின் நாயகனாகப் படைத்த ஹென்றி என்னும் பாத்திரத்தை இத்திரைப்படத்தில் வரும் மனோமோகன் மித்ரா பாத்திரம் ஏற்படுத்திய தூண்டல் காரணமாகப் படைத்திருப்பாரோ என்ற எண்ணம்தான். இத்திரைப்படத்தின் முடிவும், அவர் எதற்காக வருகின்றார் என்பதற்கான முக்கிய நோக்கமும் அவ்விதமான எண்ணத்தை ஏற்படுத்தியது. நீங்களும் பார்த்துப்ப்பாருங்கள். முடிவு செய்து கொள்ளுங்கள்.

Continue Reading →

அஞ்சலிக்குறிப்பு: தமிழ்ப்பிரியா ( 1952 – 2020)

இவ்வேளையில் தான் தமிழ்ப்பிரியாவின்(புஸ்பராணி இளங்கோவன்) ரசனைமிக்க பாடல்களுடன் இசையும் கதையும் கேட்போம்.அடுத்து எப்போது ஒலிபரப்பும் என்றும் காத்திருப்போம்.

ஈழத்து எழுத்தாளர் தமிழ்ப்பிரியா இம்மாதம் 07 ஆம் திகதி பிரான்ஸிலிருந்து விடைபெற்றுவிட்டார். தமிழ்ப்பிரியா, இலக்கியம் மாத்திரம் படைத்துக்கொண்டிருந்தவர் அல்ல. அதற்கு அப்பாலும் மனிதநேயச்செயற்பாடுகளில் தன்னார்வத் தொண்டராகவும் தன்னை ஈடுபடுத்தி வந்திருப்பவர். இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடத்திலிருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கிய கருணை உள்ளம் கொண்டவர்.

வீரகேசரி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், தமிழ்ப்பிரியாவின் எழுத்துக்கள் அச்சில் வரும்போது அவற்றை ஒப்பு நோக்கியிருக்கின்றேன். எம்முடன் பணியாற்றிய மட்டக்களப்பு கிரானைச்சேர்ந்த திரு. கனகசிங்கம் ( தற்போது – அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவர் ) பொன்னரி என்ற புனைபெயரில் ஓவியங்களும் வரைந்துகொண்டிருந்தார். கொழும்பிலிருந்து வெளியான சுதந்திரன் பத்திரிகையின் மற்றும் ஒரு வெளியீடான சுடர் மாத இதழின் ஆசிரியராகவும் கனகசிங்கம் இயங்கியபோது, தமிழ்ப்பிரியாவின் படைப்புகள் சுடரில் வெளிவந்து பார்த்திருக்கின்றேன்.

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் இலங்கை மக்கள் அனைவருக்கும் இலங்கை வானொலிதான் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது. அதில் ஒலிபரப்பான இரண்டு சேவைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவை. வர்த்தக சேவையும் தேசிய சேவையும் கடல் கடந்து தமிழ்நாட்டு நேயர்களையும் பெரிதும் கவர்ந்தது. அக்காலப்பகுதியில் இசையும் கதையும் என்ற நிகழ்ச்சியை நேயர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் விரும்பிக்கேட்டவர்களும் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தார்கள். அத்துடன் மங்கையர் மஞ்சரி – பூவும் பொட்டும். முதலான நிகழ்ச்சிகள். அந்த நிகழ்ச்சிகள் பல பெண்நேயர்களை பேனா நண்பிகளாகவும் மாற்றியிருப்பதுடன், ஆரோக்கியமான தொடர்பாடல்களையும் அவர்களிடத்தில் ஏற்படுத்தியது. மின்னஞ்சல் – முகநூல் – வாட்ஸ் அப் இல்லாதிருந்த அக்காலப்பகுதியிலேயே அந்த பெண் நேயர்களுக்கிடையில் அந்த இசையும் கதையும் நெருக்கமான உறவினை உறுதியாக்கியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. எனினும், வளர்ந்த மூத்த எழுத்தாளர்கள், முற்போக்கு – நற்போக்கு – சோஷலிஸ யதார்த்தப்பார்வை முதலான இஸங்களைப் பேசிக்கொண்டிருந்தவர்கள் அந்த இசையும் கதையும் நிகழ்ச்சியில் ஆர்வம் காண்பிக்கவில்லை. காரணம், அதற்கு எழுதியவர்கள் ஒரு கதையை அனுப்புவார்கள். நிகழ்ச்சித்தயாரிப்பாளர் கதையின் சம்பவங்களுக்குப் பொருத்தமான ஒரு திரை இசைப்பாடலை அதற்கு எற்றவாறு பொருத்தி ஒலிப்பதிவுசெய்து வானலைகளில் பரவ விடுவார். அதனைக்கேட்கும் அபிமான நேயர்கள் தங்கள் கருத்தை கடிதமாக எழுதி நிலையத்திற்கு அனுப்புவார்கள். அவை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பாகும். அதனால், வான் அலைகளில் கதை எழுதியவரின் பெயர் மட்டுமன்றி நேயர்களின் பெயரும் – ஊரும் கூட பரவிவிடும். நேயர் கடிதங்களை எழுதி தபாலில் அனுப்பிவிட்டு, அது எப்போது ஒலிபரப்பாகும் என்று வானொலிப்பெட்டிக்கு அருகிலிருந்து காத்திருப்பார்கள்.

Continue Reading →

பத்துநாட்கள் – பத்து திரைப்படங்கள் (1): – சத்யஜித் ரேயின் ‘சாருலதா’

இயக்குநர் சத்யஜித் ராய்முகநூலில் பத்து நாட்களுக்குத் தொடர்ச்சியாகப் பத்து திரைப்படங்களை  பதிவிட்டு ஞாபகப்படுத்த வேண்டும் என்று நண்பர் பரதன் நவரத்தின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையேற்று நாளொன்றுக்கு ஒவ்வொரு திரைப்படம் பற்றிய விபரங்களைப் பதிவு செய்து வருகையில் ஏன்  அத்திரைப்படங்களைப் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. இத்தருணத்தை இயக்குநர் சத்யஜித் ரேயின் திரைப்படங்களில் யு டியூப்பில் கிடைக்கும் அனைத்தையும் பார்ப்பதற்கு முடிவு செய்தேன். அவ்வகையில் முதலாவதாக அறிமுகம் செய்யும் திரைப்படம் அவரது ‘சாருலதா’ திரைப்படம்.

நல்லதொரு திரைப்படம் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். திரைப்படமொன்றின் இயக்கம், கதை, ஒளிப்பதிவு, நடிப்பு , திரைக்கதை & இசை இவை யாவுமே எவ்விதம் அமைய வேண்டுமென்பதற்கு உதாரணங்களாக அமைபவை அவரது திரைப்படங்கள். பாத்திரங்களுகேற்ற சிறந்த , பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அவர்களை எவ்விதம் இயக்க வேண்டுமென்பதை இன்றுள்ள இயக்குநர்கள், சினிமாத்துறைப் பல்வகைக் கலைஞர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.

சாருலதா ஒரு காவியம். ரவீந்திரநாத் தாகூரின் ‘சிதைந்த கூடு’ என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். பார்க்கையில் சிறந்ததொரு கவிதையை வாசிப்பது போன்று சட்டத்துக்குச் சட்டம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் சத்யஜித் ரேய் உலக சினிமாவுக்கு இந்தியா வழங்கிய மாபெரும் கொடை. எழுத்து, இயக்கம், இசையமைப்பு என அவரது பல்வகைத்திறமை வாய்ந்தவர்.

ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப் பத்துப் படங்களையும் பார்த்தீர்களென்றால் முடிவில் உங்களுக்குச் சிறந்த திரைப்படம் பற்றிய புரிதல் (இயக்கம், கதை, ஒளிப்பதிவு, இசை & நடிப்பு போன்றவற்றில்) நிச்சயம் ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம். எனவே பொழுதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Continue Reading →

தாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (1 – 103)

காவியக் கவியோகி தாகூர் (1861-1941)- சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா -எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்கள் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். மிகுந்த வரவேற்பைப்பெற்ற அக்கவிதைகள் திண்ணை இணைய இதழில் வெளியானவை. பின்னர் நூலுருப்பெற்றவையும் கூட.  அவற்றை  மீள்பிரசுரமாகப் பதிவுகளில் வெளியிடுகின்றோம்.  சில மீள்பிரசுரங்கள் உலக இலக்கியத்தின் வளத்தை அறிவதற்கு உரியவை. இம்மொழிபெயர்ப்பும் அத்தகையது.  இக்கவிதைகளுக்காகவே அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரைப்பற்றி குறிப்பாக இக்கவிதைகளைப்பற்றி ‘இரவீந்திரநாத் தாகூர்’ என்னும் விக்கிபீடியாக் கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

” கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.[4] தாகூரின் படைப்புகள்ஆன்மீகததை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.[5]சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.[6] இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.”  – பதிவுகள் –


காவியக் கவியோகி தாகூர் (1861-1941)

பாரத நாட்டில் இராமயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர், இதுவரைத் தாகூரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு. எண்பது ஆண்டுகள் சீருடன் வாழ்ந்த தாகூரின் அரிய காவியப் படைப்புகள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு நீடித்தன. கவிதை, நாடகம், இசைக்கீதம், கதை, நாவல், என்னும் பல்வேறு படைப்புத் துறைகளில் ஆக்கும் கலைத் திறமை கொண்ட தாகூருக்கு ஈடிணையானவர் உலகில் மிகச் சிலரே! ஏழை படும்பாடு (Les Miserables), நாட்டர் டாம் கூனன் (The Hunchback of Notre Dame) போன்ற நாவல்கள் எழுதிய, மாபெரும் பிரெஞ்ச் இலக்கியப் படைப்பாளி விக்டர் ஹூகோ [Victor Hugo (1802-1885)] ஒருவர்தான் தாகூருக்குப் படைப்பில் நிகரானவர் என்று சொல்லப்படுகிறது.

1913 ஆம் ஆண்டில் அவரது ஆங்கிலக் கீதாஞ்சலி இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்றவர் இரவீந்தரநாத் தாகூர். அவர் ஒரு கவிஞர், இசைப் பாடகர், கதை, நாவல் படைப்பாளர், ஓவியர், கல்வி புகட்டாளர், இந்தியாவிலே வங்காள மொழியில் மகத்தான பல காவிய நூல்கள் ஆக்கிய மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக் குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புத் தொடர் நூல்கள் எழுதியவர். எல்லாப் பாடல்களை எழுதி அவற்றுக்கு ஏற்ற மெட்டுகளையும் இட்டவர் தாகூரே. அத்துடன் அவரது ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Continue Reading →

பதிப்பகங்கள் அறிமுகம் (2): குமரன் புத்தக இல்லம் | குமரன் பப்ளீஷர்ஸ்

பதிப்பகங்கள் அறிமுகம்

எழுத்தாளர் செ.கணேசலிங்கன்

பதிவுகள் இணைய இதழில் பதிப்பகங்களின் அறிமுகம் இடம் பெறும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ்ப்பதிப்பகங்கள் பல நூல்களை வெளியிட்டு தமிழ் மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. உலகளாவியரீதியில் தமிழ் மக்களால் வாசிக்கப்படும் பதிவுகள் இணைய இதழில் உங்களைப்பற்றிய அறிமுகங்கள் மூலம் உலகளாவியரீதியில் உங்கள் நூல் வெளியீட்டு முயற்சிகள் பற்றித் தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பதிப்பகங்கள் தம்மைப்பற்றிய விபரங்களை அனுப்பி வைத்துப் பயனடைய வாழ்த்துகின்றோம்.  இப்பகுதிக்கு விபரங்களை அறிவிக்க விரும்பினால் பதிப்பகத்தின் பெயர், வெளியிட்ட நூல்கள், தொடர்பு விபரங்கள் போன்ற விபரங்களை உள்ளடக்கிய சுருக்கமான அறிமுகக் குறிப்பினை அனுப்பி வையுங்கள். அவை பதிவுகளின் ‘பதிப்பகங்கள் அறிமுகம்’ பகுதியில்  பிரசுரமாகும். அனுப்ப வேண்டிய முகவரி: ngiri2704@rogers.com


எழுத்தாளர் செ.கணேசலிங்கன் உருவாக்கிய பதிப்பகம் குமரன் பப்ளிஷர்ஸ். தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் இயங்க, இலங்கையில் அவரது மகன் க.குமரன் உருவாக்கிய பதிப்பகம்தான் குமரன் புத்தக இல்லம். இரு பதிப்பகங்கள் மூலமும் நாவல், கட்டுரை, நாடகம், சிறுகதை, ஆய்வு (இலக்கியம், தொல்லியல், வரலாறு என் இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளிலும் இலங்கை எழுத்தாளர்கள்,கல்விமான்கள் பலரின் நூல்களை வெளியிட்டுள்ளார்கள் இப்பதிப்பகத்தினர். இவர்களுடன் தொடர்பு கொள்வதற்குரிய விபரங்களைக் கீழே தருகின்றோம்:

Continue Reading →

பதிப்பகங்கள் அறிமுகம்: பூபாலசிங்கம் புத்தகசாலை / பதிப்பகம்

பதிப்பகங்கள் அறிமுகம்அமரர் பூபாலசிங்கம்

பதிவுகள் இணைய இதழில் பதிப்பகங்களின் அறிமுகம் இடம் பெறும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ்ப்பதிப்பகங்கள் பல நூல்களை வெளியிட்டு தமிழ் மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. உலகளாவியரீதியில் தமிழ் மக்களால் வாசிக்கப்படும் பதிவுகள் இணைய இதழில் உங்களைப்பற்றிய அறிமுகங்கள் மூலம் உலகளாவியரீதியில் உங்கள் நூல் வெளியீட்டு முயற்சிகள் பற்றித் தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பதிப்பகங்கள் தம்மைப்பற்றிய விபரங்களை அனுப்பி வைத்துப் பயனடைய வாழ்த்துகின்றோம்.  இப்பகுதிக்கு விபரங்களை அறிவிக்க விரும்பினால் பதிப்பகத்தின் பெயர், வெளியிட்ட நூல்கள், தொடர்பு விபரங்கள் போன்ற விபரங்களை உள்ளடக்கிய சுருக்கமான அறிமுகக் குறிப்பினை அனுப்பி வையுங்கள். அவை பதிவுகளின் ‘பதிப்பகங்கள் அறிமுகம்’ பகுதியில்  பிரசுரமாகும். அனுப்ப வேண்டிய முகவரி: ngiri2704@rogers.com


1. பூபாலசிங்கம் புத்தகசாலை, இலங்கை

இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்துக்குக் காலம் பதிப்பகங்கள் பல  தோன்றி மறைந்துள்ளன. அவற்றில் பல தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன. அவற்றில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குத் தனி மதிப்புண்டு. தற்போதைய அதன் உரிமையாளரான ஶ்ரீதர்சிங் அவர்களின் தந்தையாரான பூபாலசிங்கம் அவர்களுக்குத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புண்டு. இலங்கைத்தமிழர்களை, இலங்கைத் தமிழ்ச்சஞ்சிகைகளை, பத்திரிகைகளையெல்லாம் வரவேற்று ஊக்கமும் , ஒத்துழைப்புமளித்தவர் அவர். அவரைப்பற்றி இலக்கிய ஆளுமைகள் பலர் தம் நினைவுக்குறிப்புகளில் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் நிலவிய போர்ச்சுழலில் எரிக்கப்பட்டபோது மீண்டும் உயிர்ந்தெழுந்து சாதனை படைத்துள்ளது. தற்போதும் பூபாலசிங்கம் புத்தகசாலை இயங்கி வருகின்றது. புத்தகசாலையுடன் பதிப்பகமாகவும் இயங்கி நூல்களை வெளியிட்டு வருகின்றது.

Continue Reading →

வாழ்த்துகின்றோம் ‘வடலி’ பெரும் பனையாக வளர்ந்திட , உயர்ந்திட!

புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து ஒரு பதிப்பகம் எவ்வித ஆரவாரமுமின்றி உலகத்தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்குக் காரணமான இதன் உரிமையாளரான எழுத்தாளரின் தன்னடக்கம் மதிப்புக்குரியது. எழுத்தாளர் வேறுயாருமல்லர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான எழுத்தாளர் த.அகிலனே. ‘மரணத்தின் வாசனை: போர் தின்றவர்களின் கதை’ மூலம் எமக்கெல்லாம் அறிமுகமானவர். போர்ச்சூழலில் மக்கள் மரணத்துள் எவ்விதம் வாழ்ந்திருந்தார்கள் , எவ்விதம் அதனை எதிர்கொண்டார்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் கதைகளின் தொகுதி. முக்கியமான போர்க்கால இலக்கியப் பிரதிகளிலொன்று. கதை, கவிதை , கட்டுரை நூல் வெளியீடு என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்துபட்டது.

வாழ்த்துகின்றோம் ‘வடலி’ பெரும் பனையாக வளர்ந்திட, உயர்ந்திட, மேலும் பல வளங்களை வாசகர்களுக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிட வளர.

இதுவரை உருவாகிய குறுகிய காலத்திலிருந்து இப்பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் , நேர்த்தியான வடிவமைப்புடன் வெளியான தன்மை வடலிக்கு மிகப்பெரிய வளர்ச்சியினை எதிர்காலத்தில் அடைய உதவுமென்பது வெள்ளிடைமலை.

Continue Reading →

முகநூற் குறிப்புகள்: கார்ல் மார்க்ஸுடன் ஒரு நேர்காணல்

முகநூற் குறிப்புகள்: கார்ல் மார்க்ஸுடன் ஒரு நேர்காணல்நியூயார்க் வேல்ர்ட் இதழின் ஒரு நிருபர் கார்ல் மார்க்ஸை 1871 இல் முதல் சர்வதேசத்தின் குறிக்கோள்கள் மற்றும் நிறுவன முறைகள் குறித்து பேட்டி கண்டார்.

அமைப்பின் கேள்விகளுக்கு மார்க்ஸ் சிறிதளவும் எழுதவில்லை என்பதும் ‘சோசலிஸ்டுகள்’ மற்றும் ‘மார்க்சிஸ்டுகள்’ அவர்களின் குறிப்பிட்ட நிறுவன பரிந்துரைகள் மார்க்சின் கோட்பாடுகளுக்கு தர்க்கரீதியான நிரப்புதலாகும் என்று கூறுவதை எளிதாக்கியுள்ளது. 1871 ஆம் ஆண்டில் மார்க்ஸ் அளித்த ஒரு நேர்காணலை நாங்கள் இங்கு மீண்டும் உருவாக்குகிறோம், அதில் அவர் முதல் அகிலம் என்ற அமைப்பினைக் கையாளுகிறார்.

எனது வருகையின் நோக்கத்தை உடனடியாக வந்தேன். உலகம், அகிலத்தைப் பற்றி இருட்டில் இருப்பதாக நான் சொன்னேன்; அது உண்மையில் எதை வெறுக்கிறது என்பதை விளக்க முடியாமல் அது அகிலத்தை வெறுக்கிறது. ஒரு சிலர், அவர்கள் இருளில் இன்னும் ஆழமாக ஊடுருவியுள்ளனர் என்று நம்புகிறார்கள், அகிலம் ஜானஸ் தலை என்று கூறுகிறது, ஒரு முகத்தில் ஒரு தொழிலாளியின் நல்ல குணமும் நேர்மையும் புன்னகையும், மறுபுறம் சதிகாரனின் கொலைகார அம்சமும் இருக்கிறது. இந்த கோட்பாட்டை மீறும் ரகசியத்தை மார்க்ஸிடம் கேட்டேன். அறிஞர் வேடிக்கையாகச் சிரித்தார் – அதனால் எனக்குத் தோன்றியது (எங்களுக்கு அவரைப் போன்ற பயம் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தது).

அன்புள்ள ஐயா, வெளிப்படுத்த எந்த ரகசியங்களும் இல்லை, மார்க்ஸ், ஹான்ஸ்-ப்ரீட்மேன் பேச்சுவழக்கில் மிகவும் மெருகூட்டப்பட்ட வடிவத்தில் தொடங்கினார், தவிர, எங்கள் சங்கம் தனது பணியைச் செய்கிறது என்ற உண்மையை புறக்கணிப்பதில் தொடர்ந்து இருப்பவர்களின் மனித முட்டாள்தனத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். திறந்த நிலையில் அதைப் படிக்க விரும்பும் அனைவருக்கும் அதன் செயல்பாடுகளின் முழுமையான அறிக்கைகளை அது வெளியிடுகிறது.நீங்கள் எங்கள் சட்டங்களை ஒரு பென்னிக்கு வாங்கலாம், மேலும் நீங்கள் ஒரு ஷில்லிங்கை செலவிட்டால், நீங்கள் எங்கள் பிரசுரங்களை வாங்கலாம், அதில் இருந்து எங்களைப் பற்றிய எல்லாவற்றையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் எங்களுக்குத் தெரியும்.

Continue Reading →