அக்டோபர் புரட்சி பற்றி அறியாத முற்போக்குக் கருத்துடையோர் இருக்க முடியாது. இது ரஷ்யப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும்.1917ம் ஆண்டில் நடந்தது. இரண்டாவது அக்டோபரில் நிறைவுற்றது. முதலாவது 1917 பெப்ரவரியில் நிகழ்ந்தது. மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சி இதுவாகும். 1922ல் சோவியத் ஒன்றியம் உருவாவதற்கு முன்னோடியாக அமைந்தது இதுவெனலாம். இந்த மகத்தான நிகழ்வின் நினைவாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின ஆதரவில் பேருரையும் நூல் வெளியீடும் நடைபெற்றன.மகத்தான அக்டோபர் புரட்சி நினைவாக பேருரை செல்வி திருச்சந்திரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
சென்னை, நவ. – 9 – எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் பிரன்ட்ஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல்…
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஆதரவில் இன்று , நவம்பர் 5, 2011, ‘டொராண்டோ’ வில் எழுத்தாளர் நரசய்யாவுடனொரு சந்திப்பு நடைபெற்றது. நான் சென்றபோது கூட்டம் தொடங்கிவிட்டது. நரசய்யா ஆரம்பகாலக் கடற்படைப் பொறியியலாளராகப் பணியாற்றிய தனது அனுபவத்தையும், ஆனந்தவிகடனுக்குக் கதைகள் எழுதிய அனுபவத்தையும் விபரித்துக்கொன்டிருந்தார். தனது முதற் சிறுகதையே விகடனில் முத்திரைக் கதையாக வெளிவந்த அனுபவத்தையும் நினைவு கூர்ந்தார். – சுற்றிவரப் பார்த்தேன். எழுத்தாளர்களான என்.கே.மகாலிங்கம், அ.முத்துலிங்கம், செழியன், டானியல் ஜீவா, க.நவம், திருமாவளவன், சுமதி ரூபன், ‘காலம்’ செல்வம் எனப் பலர் சமூகமளித்திருந்தனர். – முனைவர் செல்வா கனகநாயகம் அவர்களின் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இடம்: Mid Scarborough Community centre, 2467 Eglinton Av, Scarborough; காலம்: 13 November 2011; 4.30 – 8.30 PM
திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில்இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை. குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த் இருப்பில் இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை .இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.
முற்குறிப்பு : இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக தோற்றமளிக்கலாம். ஆனால் இது சம்பந்தமான ஆர்வமுள்ள மறுசாராருக்கு ஒரு புதுச்சிந்தனை ஓட்டத்தை தூண்டிவிடுவதாக இருக்குமென்பதுடன் இக்கட்டுரை ஒரு விருந்தாகக்கூட அமையலாம். அவையெல்லாம் அவரவர்கள் கொண்ட அறிவையும் அதில் ஊற்றெடுக்கும் சிந்தனைகளின் பரிமாணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு நான் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டு என்று அவற்றின் இருப்பை நிறுவ வரவில்லை. இக்கட்டுரை அத்தளத்தினை தாண்டி அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பைப்பற்றி ஆதாரங்களுடன் விபரிக்க முற்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் எமது சிற்றறிவுகொண்டு இப்பரந்த முடிவற்ற பிரபஞ்சத்திலே வேற்றுக்கிரக உயிரினங்களின் இருப்பை மறுப்பது இப்பூமியிலே மனிதனது இருப்பை மறுப்பதற்கு ஒப்பானது.
[‘பதிவுகள்’ மற்றும் நந்தா பதிப்பகத்தாரின் (கனடா) ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுடன் 2004இல் சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தியது. அப்போட்டியின் நடுவர்களாக பிரபல எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம் ஆகியோர் இருநது பரிசுக்கதைகளைத் தேர்ந்தெடுத்தனர். அது பற்றிய விபரங்களையும், பரிசுக் கதைகளையும் ஒரு பதிவுக்காக மீள் பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்]
[கதாசிரியர் பற்றி: மணிமேகலை சதீஷ்குமார் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார். அவர் மொழிபெயர்த்த (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து) அன்டன் செகாவ்வின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றான இச்சிறுகதை மகனை இழந்த குதிரையோட்டி ஒருவரின் துயரத்தினை விபரிப்பது.] அது ஒரு மங்கலான மாலை நேரம். அப்பொழுதுதான் ஏற்றப்பட்டிருந்த தெரு விளக்குகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது ஈரமான பனி. வீடுகளின் மேற்பகுதியிலும் குதிரைகளின் பின்புறத்திலும் மெல்லிய பனி அடுக்குகள் படர்ந்திருந்தன. அந்தப் பகுதி மக்களின் தோள்களையும் தொப்பிகளையுங் கூடப் பனிப்படலம் விட்டு வைக்கவில்லை. குதிரை வண்டியோட்டி ஐயோனா பொட்டாப்பாவ் வெளுத்திருந்தார். அவர் பார்ப்பதற்கு ஒரு பேயைப் போலிருந்தார். ஒரு மனித உடலை எவ்வளவுக்கெவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தன் உடலை வளைத்திருந்தார் ஐயோனா. அவர் தன் பெட்டியின் மீது அமர்ந்திருந்தார். அவரிடம் எந்த அசைவும் இல்லை. பனிக்குவியலே அவர்மீது நிறைந்தாலும் அதை அசைத்து உதிர்த்து விடத் தேவையில்லை என்பது போல் அமர்ந்திருந்தார். அவருடைய சிறிய குதிரையும் வெண்மையாயிருந்தது.
ஹருகி முரகாமியின் புதிய சிறுகதையான ‘பூனைகளின் நகரம்’ (Town of Cats), ஒரு தந்தையிற்கும் மகனிற்கும் இடையினான உறவையும் விலகலையும், விடை காணமுடியா சில கேள்விகளையும் முன்வைக்கிறது. மிக ஏழ்மையில் வாழ்ந்த தகப்பன் தன் மகனையும் ஏழ்மை தெரிந்து வாழவேண்டும் போல வளர்க்கின்றார். தகப்பன் ஒரு ஜப்பான் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, அவர்களின் வாடிக்கையாளரின் வீடுகளுக்குச் சென்று சேவைக்கான பணத்தை சேகரிக்கும் தொழிலைச் செய்கின்றார். எல்லோரும் விடுமுறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வீடுகளைத் தட்டி பணத்தை அறவிடுகின்றார். ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலை இல்லாததாலும், சிறுவன் பிறந்த சில மாதங்களிலே தாய் இறந்துவிட்டதால் வீட்டில் ஒருவரும் இல்லையென்றபடியாலும், மகனையும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன் வேலைக்குத் தகப்பன் கூட்டிச்செல்கின்றார்.
[October 29, 2011] Years after Sri Lanka’s bitter civil war ended in a bloodbath, we still don’t know the half of what went on in the final horrific days. According to the United Nations, “tens of thousands” died in 2008-2009 as government forces crushed a Tamil Tiger rebellion. The army “systematically” shelled UN facilities, areas where 330,000 civilians were huddled, hospitals and food lines, a UN panel found. The rebels, in turn, used civilians as shields. There are “credible allegations,” the UN said, of point-blank executions, torture, rape and other war crimes by both sides. Nor has President Mahinda Rajapaksa’s triumphalist government held a credible probe, or honoured promises to give Tamils “substantive” regional autonomy, stronger minority rights and a fair share of jobs in the civil service and military. A “deeply flawed” postwar reconciliation commission is a sham, the UN concluded.