ஒரு நினைவோட்டம்: எல்லோருக்கும் இனிய மனிதன் சிவகுருநாதன்..

சிவகுருநாதன் - முன்னாள் தினகரன் ஆசிரியர்எங்கள் வீடு ஒரு செய்தி நிறுவனம் போன்று பல்லாண்டுகள் இயங்கியது. மூத்த சகோதரர் நாவேந்தன் முதல் கடைசிச் சகோதரர் வரை எங்கள் சகோதரர்கள் யாபேருமே சுமார் நாற்பது வருடங்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவரெனக் காலத்துக்காலம் பத்திரிகை, வானொலிச் செய்தியாளர்களாகச் செயற்பட்டோம். நாவேந்தன் பதினாறு வயதில் வீரகேசரியில் ஒப்புநோக்காளராகச் சேர்ந்து சில மாதங்கள் கடமையாற்றிவிட்டு ஊருக்குத்திரும்பிச் சில வருடங்கள் வீரகேசரியின் நிருபராகச் செயற்பட்டார். துரைசிங்கம் அண்ணர் தினகரன் நிருபராக விளங்கினார். பின்னர் அக்கா ஞானசக்தி, சிவானந்தன் அண்ணர், யான், தங்கை சரோஜினி, தம்பி தமிழ்மாறன் என எல்லோருமே காலத்துக்காலம் இலங்கையிலிருந்து வெளிவந்த சகல பத்திரிகைகளுக்கும் நிருபர்களாகக் கடமையாற்றினோம். வீரகேசரி, தினகரன் குறூப், தினபதி குறூப், டெயிலி மிரர் – ஈழமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யாவற்றுக்கும் எமது வீட்டு மேசையிலிருந்து விதம்விதமாகச் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டன.

Continue Reading →

மாற்றங்கள்

கல்லுங் கத்தியாய் வாளும் வான்குண்டாய்
மனிதன் கண்டது மாற்றம்
நடையாய் நடந்தின்று நாடு கடந்து
படையாய் தொடர்வது பறக்கும் மாற்றம்
மாற்றங்கள் தொடர்கிறது உலகில் – மனிதன்
மனமாற்றம் அடையத் துடித்தாலும்
அழியவில்லை ஆரம்ப ஆச்சாரம்
துடிப்புடன் சொல்பவரும் சொந்தத்தில் மாற்றமில்லை

Continue Reading →

குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

1. நியூட்டனின் மூன்றாம் விதி

*இருவர் சந்தித்தார்கள்
*அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

Continue Reading →

இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்

இளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான இளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான கருத்துக்கள் நிலவுகின்றன. இறந்த பெண்மணி உலகமெங்கும் அறியப்பட்டவர் என்பதால் ஒருவித Myth உருவாகியுள்ளது. எதிர்பாராத எல்லா மரணங்களும் மாயைகளை கட்டமைப்பதில் வல்லவை. இறந்த உயிர்சார்ந்து மாயையின் ஆகிருதி தீர்மானிக்கப்படுகிறது. மாயையின் மைய்யப்பொருள் பெண்ணென்கிறபோது பூடகத் தகவல்களுக்குத் தடங்கலின்றி ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இளம்பெண்ணெனில் அவர் கூடுதலாகக் கவனம் பெறுவார். கற்பனைகளுக்கு கலைச்செழுமை கிடைத்துவிடுகிறது. “அற்ப ஆயுளில் போன கழுதை ஆயுசுமுடியறவரைக்கும் சுத்துவா” என்ற தமிழ் சொல்வடையை நம்பும் ஐரோப்பியர்களும் இருக்கவே செய்கிறார்கள். இருள்கவிந்த சேன் நதிகரையோரம் மென்மையும் மேட்டிமையும் கொண்ட டயானாவின் காலடிஓசை நுண்ணுணர்வு கொண்டோர்க்கு வாய்ப்பதாகக் வதந்திகள். அண்மையில்  லேடி ‘டி’யென்று விசுவாசிகளால் அழைக்கப்பட்ட டயானாவைக் கருப்பொருளாகக் கொண்டு இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன.

Continue Reading →