திரும்பிப்பார்க்கின்றேன்: நடமாட முடியாத காலத்திலும் நடமாடும் நூலகமாகத் திகழ்ந்த இரசிகமணி கனகசெந்திநாதன் இலக்கியத்தையும் இனிப்பையும் நேசித்தார்.

1_kanaka-senthinaathan.jpg - 7.27 Kbமுருகபூபதிசிட்னியிலிருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வானொலியில்  எழுத்தும் எழுத்தாளரும் என்ற  நிகழ்ச்சிக்காக ( நேரடி  ஒலிப்பதிவு – நேரடி ஒலிபரப்பு )   என்னை   பேட்டிகண்ட   குறிப்பிட்ட வானொலி ஒலிபரப்பு ஊடகவியலாளர் நண்பர்   செ.பாஸ்கரன்   பேட்டியின்    இறுதியில்  ஒரு   கேள்வி – ஆனால் ஒரே  பதில்  தரவேண்டும் என்றார். கேளுங்கள்   என்றேன். உங்களுக்குப் பெரிதும் பிடித்தமான   தமிழ்   எழுத்தாளர்   யார்?  –   இதுதான் கேள்வி. என்னை மிகவும்  தர்மசங்கடத்திற்குள்ளாக்கிய   கேள்வி.   உடனடியாக  பதில்   சொல்ல   சற்று   தயங்கினேன். கருத்துமுரண்பாடுகளுக்கு அப்பாலும்   எனக்குப்பிடித்தமான   பல எழுத்தாளர்கள்    இருக்கிறார்கள்.எனது  திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரில் இடம்பெறும் பல எழுத்தாளர்கள்   எனக்கு   பிடித்தமானவர்கள்தான். ஆனால் – எனக்குப்பிடித்த   ஒரு   எழுத்தாளரின்   பெயரையும்  ஏன்   அவரை  எனக்குப்பிடித்தது  என்றும்   சொல்ல  வேண்டும்.  சில கணங்கள்  யோசிக்கவைத்த  கேள்வி  அது. எனது  மௌனத்தைப்பார்த்துவிட்டு  மீண்டும்  –  உங்களுக்குப்பிடித்தமான   தமிழ்   எழுத்தாளர்   யார்?  சொல்லுங்கள்   என்றார்     பாஸ்கரன். எனக்குப் பெரிதும் பிடித்தமான  எழுத்தாளர்   குரும்பசிட்டி  இரசிகமணி கனகசெந்திநாதன்    எனச்சொன்னேன். உடனே  அவர்  தனக்குப்பிடித்தமான  எழுத்தாளர்  மு. தளையசிங்கம் என்றார். எனக்கும்   அவரை  நன்கு  பிடிக்கும்   என்றேன்.

Continue Reading →