திருகோணமலையில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி!

– பேரன்புடையோர்க்கும், ஊடக நண்பர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும், இனமான செயல்பாட்டாளர்களுக்கும்! நீங்கள் பணியாற்றும் – நீங்கள் அறிந்த தெரிந்த ஊடகங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், பரிச்சயமானவர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். -நன்றி- நாங்கள் இயக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் போரின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல், குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மூதூர் கிழக்கில், கடற்கரைச்சேனை மற்றும் சேனையூர் கிராமங்களைச்சேர்ந்த பத்து மாணவர்களுக்கு பாடசாலைக்கற்றல் உபகரணங்களும், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள ஐந்து குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான நிதி ஆதாரமும், மூதூர் தெற்கில், வன்செயல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெருவெளி கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் பத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Continue Reading →

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!1. வர்ணத்தின் நிறம்

முதலில்
நிறத்தில்
வர்ணம்
தெரிகிறதாவெனத்
தேடுகிறோம்

நெற்றியில் தெரியவில்லையெனில்
சட்டைக்குள் தெரியலாம்
சில பெயர்களிலும்
வர்ணம் பூசியிருக்கலாம்

வார்த்தையிலும்
சில நேரம்
வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்

நான்கு மூலைகளில்
மஞ்சள் தடவிய
திருமண அழைப்பிதழ்களில்
முந்தைய தலைமுறையின்
வால்களில்
வர்ணங்கள் தெரிகின்றன

Continue Reading →

வேதனைத் தழும்பு !

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கவி யாற்றலை  வளமுடைத்  தாக்கி !
தமிழினை உயர்த்திட கவிபாடிடும் கூட்டம்
வஞ்சகப் போட்டியாளர் பொறமை தனத்தினை
சொற்களால் எரிந்து மகிழ்ந்து விளையாடும்
பொல்லா மனசு இருந்திடல் கண்டு
நல் லுள்ளங்களில் வேதனைத் தழும்பு !

நண்பர் கொடுமை கவிதைப் போராட்டம் !
சரித்து வீழ்த்திச் சாபமிடும் மன வெறி
உயிர் தமிழ் மொழி அழிந்து கவிமனம்
பொறாமை தளையிடை வேதனைப்படுந்துயர்
ஊதிப் பெருத்திட ஆற்றலை அழித்திட
கவி உள்ளத்தில் வேதனை நெருப்பு !

Continue Reading →

ஏங்குகின்ற ஏழைகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அன்று     கப்பலிலே ஏறிவந்து- இலங்கைக்
                 கரைசேர்ந்த முப்பாட்டன் சோற்றுக்காய்
                 காடுவெட்டி தேயிலைநாட்டி-வெள்ளைக்
                 காரனுக்காய் உழைத்தாரே.

எட்டு       அடிகொண்ட லயமென்று -நீண்ட
                அடுத்தடுத்தக் குடிசைக்குள்ளே -கொத்து
                அடிமைபோல் வாழ்ந்தேதான் -சொந்த
                அறிவுமங்கிக் கிடந்தாரே.

Continue Reading →