என்னைக் கேட்டால்..

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் விளையும்
எண்ணங்கள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
விண்ணில் தோன்றும்
விந்தைகள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
கற்றுக் கொண்ட
பாடங்கள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் என்னைத்
தொலைத்தேன் என்பேன்

Continue Reading →

ஆய்வு: புறநானூற்றில் வறுமையில் செம்மை

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை! வறுமை மனிதனுடன் நீங்காத தொடர்புடையது. இத்தொடர்பு மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும். சற்றுக் காலங்கடந்து மனிதன் பக்குவமடைந்து உயர்வு தாழ்வு பேணும்போதுதான் வறுமையின் முழுப்பொருளாழம் கடைநிலை மக்களைத் தாக்கி உணர வைத்தது. குறிப்பாகச் சங்க இலக்கியக் காலத்தில் வறுமையின் தாக்கத்தை இலக்கியங்களின் வழியாக வெளிப்படுத்திய மனிதக் குலம் இன்றுவரை வறுமையைத் தீர்க்கப் போராடியும் வருகின்றது.

வறுமை மிகக் கொடியது
 இன்றைய காலக்கட்டத்தைப் பொறுத்த வரையில் வறுமையின் காரணமாக ஒருவன் தவறான செயலில் ஈடுபடச் சமூகம் அவனைத் தூண்டி விடுமானால் சில நேரத்தில் அச்செயலைப் பொறுத்து அவன் எடுக்கும் முடிவுகள் தவறில்லை என்பதாகவும் கருதி விடுகின்றனர். வறுமை என்பது மனிதனுக்கு இழைக்கப்படும் கொடுமையென்று மற்றவர்களும் உணரும் தேவை ஏற்பட்டபோது அதனைத் தீர்க்க மற்றவர்கள் முன்வராத நிலையில் வறுமைக்கு உள்ளானவன் எடுக்கும் முடிவு தவறானதாயினும் சரியாகவே கருதப்படும். தவறான முடிவாக இருக்குமானால் அம்முடிவிற்கும் பாடபேதம் கற்பிக்கும் நிலை இக்காலச் சூழலில் உள்ளது. ஒருவனின் வளர்ச்சியில் மற்றவனின் பங்கு இருப்பதைப் போலவே அவனுடைய வறுமைää தாழ்விலும் மற்றவரின் பங்கு இருக்கின்றது என்பதை உணர்ந்ததினாலேயே வறுமை ஒழிப்பிற்கு அனைவராலும் குரல் கொடுக்க முடிகின்றது. வறுமை தற்காலிகமானதுää இதனைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையினால்தான் வறுமைக்கு எதிராகப் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். வறுமை என்பது மனிதக் குலத்திற்கு எதிரானது என்ற கருத்தில் பிளவு இருக்க முடியாது. இதனை எதிர்ப்பதில் உள்ள சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் சமூகம் அவனை எதிர்கொள்கின்றது. வறுமை மிகக் கொடியது. வறுமையிலும் இளமையில் கொல்லும் வறுமையானது மிகவும் கொடுமையானது என்பது ஒளவையின் வாக்கு. இவ்வுலகத்தில் பிறந்து மகிழ்ச்சியாகவும் இயற்கையாகவும் சுற்றித் திரியும் இளமைப் பருவத்தில் இவ்வறுமை நமக்கு ஏன் வருகின்றது என்பதை அறியாமலே அதனில் உழன்று தலைமீது சுமந்து வாழும் இளமையான வாழ்க்கையானது கொடுமையானது என்பதை ஒளவை உணர்த்தி இருக்கின்றார். நீதியையும் அறநெறியையும் போதிக்கும் இலக்கியங்கள் வறுமையை எதிர்த்துள்ளன. வறுமையினால் மற்றவரிடம் இரந்து உயிர்வாழும் நிலை ஏற்படின் இவ்வுலகமே கெட்டழியட்டும் என்று வறுமையை உருவாக்கக் காரணமான சமூகத்தையே சாடுகின்றார் வள்ளுவர்.

Continue Reading →

ஆய்வு: இலங்கையில் இரு மொழியம்

ஆய்வுக்கட்டுரை!பொதுவாக இன்றைய சமுதாயம் இரு வேறுபட்ட இனங்கள் அல்லது பல்வேறுபட்ட இனங்கள் இணைந்து வாழும் சமுதாயமாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக இந்தியாவை எடுத்து நோக்குகின்ற பொழுது நூற்றுக் கணக்கான இனங்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பல இனங்கள் வாழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழ் நாட்டிலே தமிழர்களோடு கேரள மாநிலத்தவர்கள், கர்நாடக மாநிலத்தவர்கள், ஆந்திர மாநிலத்தவர்கள் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இலங்கையிலே சிங்கள இனம் பெரும்பான்மை இனமாகவும் தமிழர்கள், முஸ்லிம்கள், வேடர்கள், மலேசியர்கள், பேகர்கள், காப்பிலியர்கள் போன்றோர் சிறுபான்மை இனமாகவும் குறிப்பிடப்படுகின்றார்கள். அவ்வாறு பல இனங்கள் இணைந்து வாழ்கின்ற பொழுது அவ்வினங்களுடையே இடைத்தொடர்பு (Intraction) ஏற்படுவதால் கலை, கலாசாரங்கள், பண்பாடு, மொழி போன்றவை இனங்களுக்கிடையே உள்வாங்கப்படுகின்றன. அவற்றுள் மொழியே மிக இலகுவாக உள்வாங்கப்படுகின்றது. அதற்குக் காரணம் இனங்கள் தமக்குள் இடைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு முதன்மைக் காரணியாக மொழியைப் பயன்படுத்திக்கொள்கின்றமையாகும். தமது எண்ணங்கள், விருப்பு, வெறுப்புகள் என நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்;துவதற்கும் மொழியே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு கருத்துப் பரிமாற்றத்திற்காக மொழியைப் பயன்படுத்துகின்ற பொழுது ஓர் இனம் அல்லது சமூகம் ஏனைய இனத்தின் அல்லது சமூகத்தின் மொழியை மிக இலகுவாகக் கற்றுக் கொள்கின்றது. தொடக்க நிலையில் பேச்சு வழக்கு மொழியைக் கற்றுக் கொண்டு தேவை கருதி எழுத்து வழக்கினையும் கற்றுக் கொள்கிறார்கள். இதற்கமைய ஒரு சமுதாயம் இரு மொழிச் சமுதாயமாயின் இரு மொழிகளும் பன்மொழிச் சமுதாயமாயின் பல மொழிகளும் கற்றுக் கொள்ளப்படுகின்றன.

Continue Reading →