படித்தோம் சொல்கின்றோம்: வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ கதை. அகதியாக தஞ்சம் கோருபவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரித்த தன்வரலாற்று நாவல்.

முருகபூபதி -

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நான் மெல்பனில் வாடகைக்கு இருந்த அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எனது வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. முதல் நாள் மாலை  வேலைக்குச்சென்று,  அன்று  அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பி,  ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை,  இந்த நேரத்தில் யார் வந்து  கதவு தட்டி எழுப்புகிறார்கள்…? எனது கட்டிலுக்கு அருகில் மற்றும் ஒரு படுக்கையில் உறங்கிய அந்தத் தமிழ் இளைஞர் காலை வேலைக்குச்சென்றிருந்தார். சென்றவர்தான் எதனையும் தவறவிட்டுச்சென்று,  மீண்டும் வருகிறாரோ…? அல்லது வீட்டின் சாவியை விட்டுச்சென்றுவிட்டாரோ…? அந்தக் காலைவேளையில் எவரும் வரமாட்டார்கள். ஆனால், யாரோ கதவை அடித்துத்  தட்டுகிறார்கள். போர்த்தியிருந்த  போர்வையை விலக்கிக்கொண்டு கதவைத்திறக்கின்றேன். வெளியே இரண்டு அவுஸ்திரேலியர்கள் தாம் குடிவரவு திணைக்களத்திலிருந்து வந்திருப்பதாக தமது அடையாள அட்டையை காண்பித்தார்கள். தயக்கத்துடன் கதவைத்திறந்தேன். நன்றி சொன்னார்கள்.  ” என்ன விடயம் ? ” எனக்கேட்கிறேன். வந்தவர்கள் எனது கேள்விக்கு உடனடியாக பதில் தராமல் வீட்டின் ஹோல், அதனோடிணைந்த சமையல்கட்டு , நான் உறங்கிய அந்த ஒற்றைப்படுக்கையறை யாவற்றையும் கழுகுப்பார்வை பார்த்துவிட்டு, சீராக இருந்த மற்ற கட்டிலைப்பார்த்து, ” இதில் படுத்திருந்தவர் எங்கே…?” எனக்கேட்டார்கள்.

” அவர் தனது நண்பரை பார்க்கச்சென்றிருப்பார்” என்று பொய் சொன்னேன்.

” நண்பரைப்பார்க்கச்செல்லும்போது பாணில் சாண்ட்விஷ்ஷ_ம் செய்து எடுத்துச்செல்வரா…?” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு நான் பதில்சொல்லத்தெரியாமல் விழித்தேன். மற்றவர் கையிலிருந்த வோக்கி டோக்கியில் ஏதோ பேசினார்.

சில நிமிடங்களில் ஒரு பெண் அதிகாரி தனது அடையாள அட்டையை காண்பித்தவாறு எனது அறையிலிருந்து வேலைக்குச்சென்ற  அந்த இளைஞருடன் வாசலில் தோன்றினார். எனக்கு  யாவும்  அந்தக்கணமே  புரிந்துவிட்டது.

வீட்டில்  முன்னர்  இருந்துவிட்டு வேறு  இடங்களில் வேலைதேடிக்கொண்டு விடைபெற்றுவிட்ட  மூன்று பேருக்கு ஊரிலிருந்து வந்த கடிதங்களை ஒரு அதிகாரி கைப்பற்றினார்.

Continue Reading →

என் .ஜெயராமசர்மா (மெல்பேண், . அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

1. பொலிந்துவிட வா !

புத்தாண்டே! வருக!

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இரண்டாயிரத்துப் பதினேழே
இன்முகத்துடனே எழுந்தோடிவா
இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா
வறுமையொடு பிணியகல
வரம்கொண்டு வா
வளங்கொளிக்கும் வாழ்வுவர
மனங்கொண்டு வா
அறியாமை இருளகல
அறிவொளியாய் வா
அரக்ககுணம் அழித்துவிட
அஸ்த்திரமாய் வா
நிலையாக தர்மெங்கும்
நிறுத்திவிட வா
நிம்மதியாய் வாழ்வுவர
நீநினைந்து  வா !

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ : புத்தாண்டு கலந்துரையாடல் @ பியூர் சினிமா புத்தக அங்காடி

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ : புத்தாண்டு கலந்துரையாடல் @ பியூர் சினிமா புத்தக அங்காடி
31-12-2016, சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 12 மணி வரை.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
சந்திப்பு 1 : 5.30 மணிக்கு.

இயக்குனர் ஞானராஜசேகருடன் கலந்துரையாடல்

தமிழில் இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பான ஒரு விரிவான கலந்துரையாடல் நடைபெறவே இல்லை. தமிழ் சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ வெவ்வேறு துறை சார்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதில் முக்கியமாக திரைப்படத் தணிக்கை துறை மண்டல அதிகாரியாக இருந்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை மாலை கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. திரைப்பட தணிக்கைத் துறை (Censor) தொடர்பான ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக இதனை மாற்றிக்கொள்வது நண்பர்களின் பொறுப்பு.

Continue Reading →

வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) கவிதைகள்!

1. புதிய ஆண்டினை….(2017)

புத்தாண்டே! வருக!வேதா இலங்காதிலகம்பண்டிகை நாட்கள் அனைவருக்கும்
இண்டிடுக்கு சந்துகளிலும் இன்பம்
கொண்டிருத்தல் ஆறுதல் ஆரோக்கியம்.
உண்டி உடையுடன் மகிழ்வும்
ஒண்டியற்ற உல்லாச அனுபமும்
கண்டிடல் தென்றலெனும் கொடுப்பனவு.

வண்டினமாய் ரீங்காரித்து நந்தவனத்தில்
சண்டித்தனமின்றித் தேனருந்தி மயங்கி
மண்டியிடாது நிமர்ந்து முரண்களை
முண்டியடித்துத் தள்ளி வெற்றித்
தண்டிகையில் வாழ்வு பயணித்து
துண்டில்  தோப்பாக இசைக்கட்டும்.

நொண்டிச் சாக்கு போக்கின்றி
வண்டில் வண்டிலாகப் பரிசின்றியும்
வெண்டிரை (கடல்) அலையான மகிழ்வுடன்
பண்டிகை களை கட்டியது.
அண்டியோருடனும் மகிழ்ந்து கூடி
கண்டிருப்போம் புதிய ஆண்டினை.

* துண்டில்  – மூங்கில்

Continue Reading →