அருண். விஜயராணி நேர்காணல் – புரிதலும் பகிர்தலும்: ” ஒரு பெண் குழந்தையைப் படிப்பித்தலே ஒரு நாடு செய்யக்கூடிய சிறந்த மூலதனம்” ” நம் மரபு பற்றி நமக்கே ஒரு பெருமை இருக்க வேண்டும் “

அருண். விஜயராணி–  இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழின் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்கு 1999 இல் அருண். விஜயராணி வழங்கிய நேர்காணல். புரிதலும் பகிர்தலும் நேர்காணல் தொகுப்பில் வெளியானது. 16-03-1954 ஆம் திகதி இலங்கையில் உரும்பராயில் பிறந்த விஜயராணி செல்வத்துரை  இலக்கியவாதியானதன்  பின்னர், அருணகிரி அவர்களை மணந்து  அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதிவந்தவர். கடந்த 13-12- 2015 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் மறைந்தார். இன்று  13 ஆம் திகதி  அவரது ஓராண்டு நினைவு அஞ்சலி காலத்தில் இந்த நேர்காணலும் பதிவாகிறது. –

கேள்வி:   இலங்கையிலும்  இங்கிலாந்திலும்  வாழ்ந்து  தற்போது அவுஸ்திரேலியாவில்  குடியேறியிருக்கிறீர்கள்.  இம்மூன்று நாடுகளிலும்  தங்கள் வாழ்வு அனுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில்  எவ்வாறு அமைந்துள்ளன ?

பதில்:   ”  இலங்கை  விஜயராணியே  நான்  ரசிக்கும்  எழுத்தாளர்.  கன்னிப் பெண்ணாக  இருந்து  படைத்த  படைப்புகள்  தைரியமானவை.  போலித்தனம்   இல்லாதவை.   யாருக்கும்  பயப்படாமல்  எழுதிய  எழுத்துக்கள்.    திரும்பிய  பக்கம்  எல்லாம்  இலக்கியம்  பேச  மனிதர்கள் இருந்தார்கள்.   கருத்துச்  சுதந்திரம்  இருந்தது.   (சில  அரசாங்கக் கட்டுப்பாடுகளைத்   தவிர)   மாற்றுக்  கருத்துக்கள்  பலவற்றை  பகிர்ந்து கொள்ளக்கூடிய   சந்தர்ப்பங்களும்,    அவற்றை  முன்வைக்க  மாறுபட்ட கருத்துடைய   பல  பத்திரிகைகள்,  சஞ்சிகைகள்,  வானொலி, தொலைக்காட்சி   என்று  அங்கு  ஓர்  இலக்கிய  உலகமே  இருந்தது.   எனவே நாம்   சுழல  விரும்பாத  உலகத்தை  ஒதுக்கி  விட்டு  இலக்கிய  உலகில் மூழ்கித்   திளைக்க   அது   வசதியாக   அமைந்தது.

Continue Reading →

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

கவிதை படிப்போமா? கவிப்புயல் இனியவன் கவிதைகள்.1. அனாதையாகி விடுவேன்……

நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ….
அப்படியில்லை இதுதான்…..
உண்மை காதலின் ……
அடையாளம்….!!!

வாழ்க்கையில் ….
எல்லாம் இழந்துவிட்டேன்…..
உன் நினைவையும் இழந்தால்……
அனாதையாகி விடுவேன்……

Continue Reading →

வேதா இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்-

1. அஞ்சலி: அனலில் நடந்தாள்…(மறைந்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா நினைவாக)

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!  அனலில் நடந்த அங்கயற்கண்ணியவள்
அகண்ட அறிவு, அழகுடையாள்.
அதிகார ஆட்சியில் அமர்ந்தாள்
இதிகாசமானாள் சந்தனப் பேழையுள்.
திருமதி ஆகாமலே ஜெயலலிதா
பெறுமதி அம்மாவென ஆகியவள்.
வருமதியாம் பாத வணக்கத்தால்
சிறுமதியோவெனும் இகழ்வைப் பெற்றாள்.

மாளிகைச் செல்வியிறுதி நகர்வு
மாபெரும் மக்கள் திரளோடு.
மாதுரியமான மொழி அறிவோடு
மாணிக்கப் பரலானாள் இந்தியாவிற்கு.
வறியோருக்கு இரங்கி உதவினாள்.
செறிவான புகழும் பெற்றாள்.
குறியான போராளி அவள்.
அறிவாய் உன்னையெவரும் மறக்கார்.

Continue Reading →