அமரர் வெங்கட் சாமிநாதன் இணையம் மூலம் என்னுடன் தொடர்புகொண்டு நெருங்கிப் பழகிய இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர். ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை மறைவதற்கு ஓஇரு நாள்கள் வரையில் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவர் ‘பதிவுகள்’ இணைய இதழ்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர்களிலொருவ்வர் அவர். திரு.வெ.சா அவர்கள் கனடா வந்திருந்தபொழுது நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அது பற்றி அவர் அடிக்கடி மின்னஞ்சல்களில் குறிப்பிட்டு வருந்தியிருப்பார். அவ்விதமானதொரு மின்னஞ்சலில் அவர் “மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை” என்று எழுதியிருந்தார். இப்பொழுது அதனை நினைத்தால் சிறிது வருத்தமாகவுள்ளது. பொதுவாகக் கனடாவுக்கு வரும் பல இலக்கிய ஆளுமைகளை அழைத்திருக்கும் அமைப்புகளுடன் செலவழிப்பதிற்கே அவர்களது நேரம் சரியாகவிருக்கும். இவ்விதமான சூழ்நிலையில் நானும் அவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பதில்லை. உண்மையில் நான் கனடா வந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலரைத்தான் தனிப்பட்டரீதியில் சந்தித்து , நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் சோமகாந்தன், எழுத்தாளர் ‘நந்தலாலா’ ஜோதிக்குமார் (‘தேடல்’ நண்ப்ர் குமரன் ஏற்பாட்டில்) , கலை, இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் (எழுத்தாளர் தேவகாந்தன் ஏற்பாட்டில், அவரது இல்லத்தில்) மற்றும் ‘உயிர்நிழல்’ கலைச்செல்வன் (அமரர் கவிஞர் திருமாவளவன் இருப்பிடத்தில், அவரது ஏற்பாட்டில்). வேறு பலரை அவர்களுடனான சந்திப்புகளில் கூட்டத்திலொருவனாகக் கலந்து, அவர்தம் உரைகளைச் செவிமடுத்திருக்கின்றேன். ஆனால் தனிப்படச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் சுந்தர ராமசாமி வந்திருந்தபொழுது அவருடன் நடைபெற்ற கலந்துரையாலின் இடைவேளையொன்றில் அவருடன் சிறிது நேரம் உரையாடியிருக்கின்றேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்தாளர்கள் பலருடன் நான் நேரில் சந்தித்திருக்காவிட்டாலும் இணையத்தினூடு தொடர்புகளைப்பேணி வருகிறேன்.
‘தமிழ்க்கவி பற்றிய சர்ச்சை சம்பந்தமாக நான் ‘பதிவுகள்’ இணைய இதழில் பதிவு செய்திருந்தேன். அதற்கு எழுத்தாளர் ஆற்றிய எதிர்வினை இது. நன்றி முருகபூபதி. அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு…
“அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” ‘பதிவுகள்’ இணைய இதழுக்குப் படைப்புகள் அதிக அளவில் வருவதால் உடனுக்குடன் பிரசுரிப்பதில் சிறிது சிரமமிருப்பதைப் புரிந்து கொள்வீர்களென்று கருதுகின்றோம். கிடைக்கப்பெறும் படைப்புகள்…
கவியரசு கண்ணதாசனைத்தேடி தொலைதூரத்திலிருந்து அவரது அபிமான ரசிகர் வந்துள்ளார். ” எதற்காக இவ்வளவு தூரத்திலிருந்து என்னைத் தேடிவந்தீர்கள்…?” என்று கண்ணதாசன் அவரைக்கேட்டதும், ” உங்கள் பாடல்களும் அதிலிருக்கும் கருத்துக்களும் என்னை பெரிதும் கவர்ந்தன. எனது வாழ்நாளுக்குள் உங்களை நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்.” எனச்சொன்னார் அந்த ரசிகர்.
” தம்பி… மரத்தைப்பார். அதில் பூக்கும் மலர்களையும், காய்க்கும் கனிகளையும் பார். அவற்றை ரசி, புசி. ஆனால், அந்த மரத்தின் வேரைப்பார்க்க முயற்சிக்காதே… மரம் பட்டுவிடும். அதுபோன்று, ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச்சென்றால், சாப்பிட்டுவிட்டு அதற்குரிய பணத்தை கொடுத்துவிட்டு போய்விடவேண்டும். நீ சாப்பிட்ட உணவு தயாரிக்கும் ஹோட்டலின் சமையலறைப்பக்கம் சென்றுவிடாதே. பிறகு நீ எந்த ஹோட்டலிலும் சாப்பிடமாட்டாய்” என்றார் வாழ்க்கைத்தத்துவப்பாடல்களும் எழுதியிருக்கும் கவியரசர்.
இந்தத்தகவலை எழுதும் எனக்கும் எழுத்தாளர்களை தேடிச்சென்று பார்க்கவேண்டும், அவர்களுடன் உறவாடவேண்டும் என்ற ஆசை எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதலே தொடருகின்றது. நான் எனது வாழ்நாளில் பல எழுத்தாளர்களை அவர்களின் இருப்பிடம்தேடிச்சென்று நட்புறவை ஏற்படுத்திகொண்டவன். தமிழ்நாடு இடைசெவல் கரிசல் காட்டில் கி. ராஜநாராயணன், குரும்பசிட்டியில் இரசிகமணி கனகசெந்திநாதன், அளவெட்டியில் அ.செ. முருகானந்தன், தலாத்து ஓயாவில் கே. கணேஷ், மினுவாங்கொடையில் தமிழ் அபிமானி ரத்னவன்ச தேரோ, திருகோணமலையில் நா. பாலேஸ்வரி, தொண்டமனாறில் குந்தவை, மாஸ்கோவில் விதாலி ஃபுர்னிக்கா, சென்னையில் ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரில் கோவை ஞானி ….. இவ்வாறு பலரைத் தேடிச்சென்றிருக்கின்றேன். ஆனால், என்றைக்கும் என்னால் சந்திக்கமுடியாமல் மறைந்துவிட்ட, அடிக்கடி நான் நினைத்துப்பார்க்கும் ஒருவர்தான் பல பெயர் மன்னன் தருமுசிவராம். அவர் இன்றிருந்தால் அவருக்கு 78 வயது ( பிறந்த திகதி 20 ஏப்ரில் 1939).
தமிழ்க்கவியின் கிளிநொச்சியும், மலையகத்தமிழரும் -தமிழ்க்கவி’ என்ற கட்டுரை வாசித்தேன். நல்லதோர், ,அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. நல்லதோர் ஆய்வுக்கட்டுரையாக வந்திருக்க வேண்டிய கட்டுரை மேலும் பல தகவல்களை உள்ளடக்காமல் போனதால் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளிலொன்றாக வரமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக வட, கிழக்கில் பெருமளவு மலையகத்தமிழர்களை எழுபதுகளில் குடியேற்றிய காந்திய அமைப்பு பற்றி எந்தவிதத்தகவல்களுமில்லை.
அது தவிர கட்டுரை சிறப்பானதொரு கட்டுரை.
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழுள்ள விடயங்களுக்காக இணையத்தில் பலர் தமிழ்க்கவியைத் தாக்கி வருகின்றார்கள்.
1. “மலையகத்தில் இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறோம். என்ன அங்கை குளிர் இங்கை வெயில். அவ்வளவுதான் என்றார் ஒரு முதியவர். இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங் கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும் பத்தில் பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத் தாட்சி இல்லை என்றபோது அப்பிள்ளை களின் தாய், தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.
எழுத்தாளர் கடல்புத்திரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் 1984 -1987 வரையிலான காலப்பகுதியில் வடக்கு அராலிப்பொறுப்பாளராக இயங்கியவர். இவரைப்போல் பல இளைஞர்கள், சிறுவர்கள் அக்காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் போராளிகளாக யாழ்ப்பாணத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இயங்கியவர்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் படிப்படியாக போராட்டம் சென்று கொண்டிருந்த வேளை அது. இருந்தாலும் வடகிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் இவர்களைப்போன்றவர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சின்னமெண்டிஸின் மறைவு வரை மட்டும் இயங்கிப் பின் முற்றாக இயக்க நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் மனத்தளர்ச்சியுடன் போராட்டத்திலிருந்து அமைதியாக ஒதுங்கிப்போனவர்களில் இவருமொருவர்.
அண்மையில் இவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன் ” நீங்கள் ஏன் உங்கள் காலகட்ட இயக்கச் செயற்பாடுகளை எழுதி ஆவணப்படுத்தக் கூடாது ” என்று. இவரைப்போல் பின் தளத்தில் இறுதிவரை இயங்கிய போராளிகள் யாரும் தம் அனுபவங்களைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. இதுவரை பதிவு செய்தவர்கள் அனைவரும் பல்வேறு இயக்கங்களிலும் முன்னணியில் இருந்த ஆரம்பக்காலத்தைச் சேர்ந்தவர்களே (எல்லாளன் ராஜசிங்கத்தின் போராட்ட அனுபவக்குறிப்புகள் தவிர) என்று நினைக்கின்றேன்.
இவரைப்போன்றவர்கள் பதிவு செய்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்வருமாறு பட்டியலிடலாம்:
அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை நண்பர் ரதன் அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒரு நீள்படத்தை விட இக்குறும்படம் விளங்கியது. அம்புலி மீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறும்படமான ‘அருவி’ இன்றைய சூழலில் புகலிடச்சூழலில் வாழும் தமிழ்ப்பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
இக்குறும்படம் டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளதையும், நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் உத்தியோகபூர்வத் தேர்வு விருதினையும் மற்றும் டொரோண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினையும் பெற்றுள்ளதையும் குறும்படத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
பணம், பணம் என்று ஓடி அலையும் பலர் குழந்தைகளை, அவர்களது விருப்பு வெறுப்புகளைக் கவனிக்கத்தவறுகின்றார்கள். குழந்தைகளின் திறமைகளைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொண்டும் அவை பற்றிக்கவனத்திலெடுக்காமல், தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப குழந்தைகளை வளர்க்க முற்படுகின்றார்கள். தம் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மேல் திணிக்கின்றார்கள்.
எம் இனிய ‘பதிவுகள்’ வாசகர்கள், படைப்பாளிகள். அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துச்சொரிவதாக. சின்னஞ்சிறு இலங்கைத்தீவில் இச்சித்திரைப்புத்தாண்டிலாவது இனங்களுக்கிடையில் கூடிய புரிந்துணர்வு…
எண்பத்தி ஏழு ஆண்டுகால விருட்சம் வீரகேசரி, எத்தனையோ காலமாற்றங்களை சந்தித்தவாறு தனது ஆயுளை நகர்த்திக்கொண்டிருக்கிறது. வீரகேசரி துளிர்விட்ட வருடம் 1930. விருட்சமாக வளரும்போது எத்தனைபேர் அதன் நிழலில் இளைப்பறுவார்கள், எத்தனைபேர் அதற்கு நீர்பாய்ச்சுவார்கள், எத்தனைபேர் அந்த நிழலின் குளிர்மையை நினைத்துகொண்டு கடல் கடந்து செல்வார்கள் என்பதெல்லாம் அதற்குத்தெரியாது. வீரகேசரி ஒரு வழிகாட்டி மரமாக அந்த இடத்திலேயே நிற்கிறது. பின்னாளில் அதன்வழிகாட்டுதலில் வந்தவர்களில் ஒருவர் அது துளிர்த்து சுமார் ஐந்துவருடங்களில் பிறந்தார். அவருக்கு தற்பொழுது 82 வயதும் கடந்துவிட்டது. அவர்தான் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம். அவருக்கு கடும் சுகவீனம் என்று அவருடைய நீண்ட கால நண்பரும் பல வருடங்கள் வீரகேசரியில் அவருடன் இணைந்து பணியாற்றியவருமான வீரகேசரியின் முன்னாள் விநியோக – விளம்பர முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் நேற்று 12 ஆம் திகதி, தொலைபேசியில் சொன்னார். அவருடன் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு வந்து எனது கணினியை பார்த்தேன் நண்பர் செல்லத்துரை மூர்த்தி கனடாவிலிருந்து அதே செய்தியை மிகுந்த கவலையுடன் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் மூத்தபிரஜைகளை பராமரிக்கும் இல்லமொன்றில் எங்கள் முன்னாள் ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் தங்கியிருப்பதாகவும் தற்பொழுது கவலைக்கிடமாக இருப்பதாகவும் அடுத்தடுத்து தகவல் வந்தததையடுத்து, அவரைப்பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன. ஆசிரியர் சிவப்பிரகாசம், இவரது இனிய நண்பர்களினால் செல்லமாக ‘சிவப்பி ’ என்றே அழைக்கப்படுபவர். அந்நாட்களில் வீரகேசரியில் இரண்டு ‘சிவப்பிகள்’ இருந்தனர். ஒருவர் க.சிவப்பிரகாசம் என்ற எமது முன்னாள் ஆசிரியர். மற்றவர் து.சிவப்பிரகாசம் என்ற வீரகேசரியின் முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர். இவர்கள் இருவரையும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர், 2007 ஆம் ஆண்டு இறுதியில், கனடாவில் தமிழர் செந்தாமரை இதழின் ஆண்டுவிழா இராப்போசன விருந்தில் எதிர்பாராதவிதமாக சந்திக்கநேர்ந்தது. அந்தப்பயணத்தில் இணைந்திருந்த அவுஸ்திரேலியா நண்பர் நடேசனும் நானும் அந்த விருந்தில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
ஈழத்தமிழ் இலக்கியத்தை (புகலிட / புலம்பெயர் இலக்கியத்தையும் உள்ளடக்கி) ஆவணப்படுத்திவருபவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள். இவரது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய ஆய்வு நூல் அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்த நூல். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் அவ்வப்போது எழுதி வருவதுடன், ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகும் படைப்புகள் பற்றியும் அவ்வப்போது தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்பவர். அண்மையில் முகநூலிலும் , ‘பதிவுகள்’ இணைய இதழிலும் ‘தாயகம்’ இதழ் பற்றி எழுதிய எனது குறிப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் அவர் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவற்றை உங்களுடன் நானிங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.
அன்ப!
பதிவுகள் தளத்தை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் குறிப்பாக வாசிப்பும் யோசிப்பும் என்ற தலைப்பிலமையும் பகுதியிலே இடம்பெறும் தங்களுடைய வாசிப்பநுபவப் பதிவுகளில் தனிக்கவனம் செலுத்திவருகிறேன். அவற்றில் குறிப்பாகக் கனடாவின் தமிழிலக்கிய வரலாறு சார்ந்த பதிவுகளில் முக்கியமானவை என நான் கருதுபவற்றைச் சேமித்துக்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வகையில் ஏப்ரல் 7 திகதியிட்ட தங்களுடைய வாசிப்பும் யோசிப்பும் -229 என்ற பதிவிலே எழுத்தாளர் ஜோர்ஜ் இ. குருஷேவ் அவர்களின் தாயகம் இதழ்பற்றிய தகவல்களைக் கண்டபோது பெரிதும் மகிழ்ந்தேன்.-சேமித்துங்கொண்டேன்.