பி.பி.சி (தமிழ்ச்சேவை): சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா

தமிழக முதல்வரும் அ இஅதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இதுவரை தனது உடன்பிறவா சகோதரி என அழைத்து வந்த சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். சசிகலாவின் கணவர் எம் நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட மேலும் 13 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்படுவதாகவும், கட்சித் தொண்டர்கள் எவரும் அவர்களுடன் தொடர்புவைத்துக் கொள்ளவேண்டாமென்றும் ஜெயலலிதா பெயரில் வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. தமிழக முதல்வரும் அ இஅதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இதுவரை தனது உடன்பிறவா சகோதரி என அழைத்து வந்த சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். சசிகலாவின் கணவர் எம் நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட மேலும் 13 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்படுவதாகவும், கட்சித் தொண்டர்கள் எவரும் அவர்களுடன் தொடர்புவைத்துக் கொள்ளவேண்டாமென்றும் ஜெயலலிதா பெயரில் வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. தொடர்புடைய விடயங்கள்ஜெயலலிதா, அதிமுக ஆனால் ஏனிந்த நடவடிக்கை என்பது பற்றி அவ்வறிக்கையில் விளக்கமில்லை. வழக்கமாக நீக்கப்படும்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும். ஆனால் அது கூட இப்போது இல்லை.

Continue Reading →

குறுநாவல்: ‘தூதர்கள்’

-1-

ஆசி கந்தராஜாடிஸ்கோ பண்டா, பேர்ளின் சுரங்கவண்டி நிலைய வாங்கொன்றில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் நிறை வெறியில் சில்வா! டிஸ்கோ பண்டாவின் வாயிலிருந்தும் அல்ககோல் நெடி வீசியது. அவன் போதையில் தடுமாறவில்லை. நிதானமாகவே புகையை உள்ளுக்கு இளுத்து வளையம் வளையமாக வெளியே ஊதிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரதும் வாழ்க்கை தடம்மாறி, தள்ளாட்டத்துடன் உருண்டு கொண்டிருப்பதை அவர்களுடைய தோற்றங்கள் வெளிப்படுத்தின. இருவரும் ஒரு காலத்தில் என்னுடன் படித்த கலாசாலை மாணவர்கள். ஜேர்மனியில் படித்த காலத்திலே டிஸ்கோ பண்டா எனக்கு அறிமுகமானான். ஜேர்மனி, கிழக்கும் மேற்குமாக இரண்டு நாடுகளாகப் பிரிந்திருந்த காலத்தில் இது நடந்தது. பண்டா அப்போது கிழக்கு ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். இடையில் ஒரு வரலாற்றுக் குறிப்பு! 1949 ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி தொடக்கம், 1989 நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிவரை நாலு தசாப்தங்கள் ஜேர்மனியின் கிழக்குப்பகுதி, கம்யூனிச ஆட்சியின்கீழ், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயருடன் விளங்கிற்று. அந்தக் காலங்களில், வளர்முக நாடுகளிலுள்ள கம்யூனிசக் கட்சிகள,; தங்கள் ஆதரவாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசுகள் வழங்கி கம்யூனிச நாடுகளுக்கு அனுப்பிவைத்தன.

Continue Reading →