மீள்பிரசுரம்: காவல்கோட்டம்!

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் நாவலான 'காவல் கோட்ட'த்திற்கு 2011ற்கான 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்துள்ளது. இதனையொட்டி 'காவல் கோட்டம்' நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதிய நீண்ட விமர்சனத்தின் முதற்பகுதி ஒரு பதிவுக்காக நன்றியுடன் மீள்பிரசுரமாகிறது. - பதிவுகள்எழுத்தாளர் சு.வெங்கடேசன்[எழுத்தாளர் சு.வெங்கடேசனின் நாவலான ‘காவல் கோட்ட’த்திற்கு 2011ற்கான ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்துள்ளது. இதனையொட்டி ‘காவல் கோட்டம்’ நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதிய நீண்ட விமர்சனத்தின் முதற்பகுதி ஒரு பதிவுக்காக நன்றியுடன் மீள்பிரசுரமாகிறது. – பதிவுகள்] வரலாற்றுப் புனைக்கதை என்றால் என்ன என்பதை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன். வரலாறு என்பது ஒரு மாபெரும் மொழிபு (Narration) அந்த மொழிபு தொடர்ச்சியாக பல்வேறு மனிதர்களால் பல்வேறு காலகட்டமாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. அத்தனை மனிதர்களையும் அவர்களுக்குப் பொதுவானதாக இருக்கக்கூடிய ஒரு தர்க்க அமைப்பு உள்ளது. அந்தத் தர்க்க அமைப்பின் விதிகளின்படியே வரலாற்று உண்மைகள் நிரூபிக்கப்படுகின்றன. வரலாற்று உண்மைகள் பொய்ப்பிக்கவும் படுகின்றன.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க!

தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க!

நாள்: டிசம்பர் 30, வெள்ளிகிழமை, 2011 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
இடம்: திம்பம் & தெங்கு மரகடா
கட்டணம்: 2200/-

வணக்கம் நண்பர்களே, புது ஆண்டுக் கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை என்பதாலும், ஆண்டின் எல்லா இரவுகளின் அமைதியையும் அந்த ஒரே நாள் இரவில் அதகளப்படுத்தும் மனிதர்களின் பேராற்றல் கண்டு நடுங்குவதைவிட, கடுங்குளிரில், வனவிலங்குகளைக் கண்டு அந்த அடர்த்தியான இரவில் நாம் நடுங்கிப் போவதே மேல். ஆதாலால் தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி, வெள்ளிகிழமை இரவு தமிழகத்தின் மிக அடர்த்தியான வனப்பகுதியான சத்தியமங்கலத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திம்பம், மற்றும் தெங்கு மரகடா பகுதிகளில் தொடங்கவிருக்கிறது.

Continue Reading →