மீறப்பட்ட வாக்குறுதிகள்

– ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த 14ம் திகதி அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம். 14  மார்ச்சு 2012 –

R. Sampanthan, Leader, Tamil National Allianceஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கை  அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கான ததேகூ இன் பதில்

1.      உண்மையைக் கூறுவது மற்றும்  தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கை அரசாஙகத்துக்கு தீவிரப் பிரச்சனைகள் உள்ளன

1.1    2011  செப்டெம்பர் 12ஆம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் (ஐநாமஉபே) 18  ஆவது கூட்டத்தொடரில் அமைச்சர் மகிந்தா சமரசிங்கா ஆற்றிய உரையை அடுத்து,அந்த உரையின் தவறுகளைத் திருத்தியும்;; “இலங்கையின் நிலவரத்தை அனைத்துலகச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும்போது  நேர்மையாகவும் உண்மையாகவும”;  இருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியும் அதற்கடுத்த நாளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஓர் அறிக்கையை வெளியிட்டது. துரதிஸ்டவசமாக, தற்போது நடைபெறும் ஐநாமஉபே இன்  19ஆம் கூட்டத்தொடரிலும் அரசாங்கம் அனைத்துலகச் சமூகத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது.

Continue Reading →

இலங்கையும், இந்தியாவும் , ஐநாவின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானமும்!

இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொலைநோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. இலங்கையை உடனடியாக வற்புறுத்தாது விட்டாலும், நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கைக்கான தீவிரமானதொரு எச்சரிக்கை. மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசானது தங்களது நோக்கில் இலங்கைத் தமிழர்களது உணர்வுகளை, உரிமைகளைக் கவனத்திலெடுக்காது தொடர்ந்தும் தமிழர்களை இராணுவ ஆட்சிக்குள் அடிமைப்படுத்தியவாறு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை வடகிழக்கில் அதிகரித்தவண்ணமிருக்குமானால், நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய பூரண விசாரணை நடத்தாமல் தாமதிக்குமானால் இன்னும் சில வருடங்களில் இத்தீர்மானத்தை ஆதாரமாக வைத்து சர்வதேச சமூகம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஏனைய அமைப்புகளின் வாயிலாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த தீர்மானம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொலைநோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. இலங்கையை உடனடியாக வற்புறுத்தாது விட்டாலும், நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கைக்கான தீவிரமானதொரு எச்சரிக்கை. மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசானது தங்களது நோக்கில் இலங்கைத் தமிழர்களது உணர்வுகளை, உரிமைகளைக் கவனத்திலெடுக்காது தொடர்ந்தும் தமிழர்களை இராணுவ ஆட்சிக்குள் அடிமைப்படுத்தியவாறு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை வடகிழக்கில் அதிகரித்தவண்ணமிருக்குமானால், நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய பூரண விசாரணை நடத்தாமல் தாமதிக்குமானால் இன்னும் சில வருடங்களில் இத்தீர்மானத்தை ஆதாரமாக வைத்து சர்வதேச சமூகம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஏனைய அமைப்புகளின் வாயிலாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த தீர்மானம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

Continue Reading →

பி.பி.சி: இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது

 22 மார்ச், 2012 - இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்களாகவே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.– 22 மார்ச், 2012 – இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்களாகவே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், பிரேரணை நிறைவேறத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையாக 24 நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்திருக்கின்றன.

Continue Reading →

Human Rights Watch: UN Rights Council: Sri Lanka Vote a Strong Message for Justice Broad International Support for Resolution Seeking Accountability

Human Rights Watch: UN Rights Council: Sri Lanka Vote a Strong Message for Justice Broad International Support for Resolution Seeking Accountability(Geneva, March 22, 2012) – The United Nations Human Rights Council’s adoption of a resolution on Sri Lanka demonstrates strong international support for accountability for abuses committed in Sri Lanka’s armed conflict, Human Rights Watch said today.  The resolution passed the council by a vote of 24 to 15, with 8 abstentions.  Member countries voting for the resolution included India, Nigeria and the United States. “The Human Rights Council’s vote demonstrates broad international dissatisfaction with Sri Lanka’s accountability efforts in the three years since the end of the war,” said Juliette De Rivero, advocacy director at Human Rights Watch in Geneva. “Many countries have recognized that this resolution is an important first step toward serious action to investigate the many abuses by both sides during the conflict.” The resolution calls upon the Sri Lankan government to fulfill its legal obligations toward justice and accountability, and to expeditiously provide a comprehensive action plan to implement the recommendations of its Lessons Learnt and Reconciliation Commission and also to address alleged violations of international law. It also encourages the Office of the UN High Commissioner for Human Rights and other UN human rights envoys to assist Sri Lanka in implementing these steps.

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் 12

12-ம் அத்தியாயம்: மொட்டைக் கடிதம்

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிபத்மாவின் தோழி தங்கமணியை நாம் ஏற்கனவே பம்பலப்பிட்டி எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரிலும், பல்கலைக் கழகத்துக்கு முன்னாலிருக்கும் நிழல் படர்ந்த பஸ் தரிப்பிலும், பல்கலைக் கழக இரசாயன ஆய்வு கூடத்திலும் சந்தித்திருக்கிறோம். இன்று வத்தளையிலுள்ள அவள் வீட்டில் அவளைச் சந்தித்து வருவோமா? தங்கமணி வசித்த வீடு வத்தளை மெயின் வீதியில் பஸ்தரிப்புக்குச் சமீபமாக அமைந்திருந்தது. அவள் அவ்வீட்டில் தன் தாய், தந்தையருடன் வசித்து வந்தாள். அவளது ஒரே தம்பியான சிங்காரவேல் வவுனியாக் கச்சேரியில் இலிகிதனாகக் கடமையாற்றினான். அப்பா கொழும்பில் ஏதோ கம்பெனியில் வேலை. வீட்டில் அம்மாவைத் தவிர, பேச்சுத் துணைக்கு ரெஜினா இருந்தாள். ரெஜினா கொழும்பில் ஒரு வியாபாரத் தலத்தில் சுருக்கெழுத்து – தட்டெழுத்து வேலை செய்பவள். தங்கமணி வீட்டில் பணம் செலுத்தி “போர்டராக” இருந்தாள். ரெஜினாவுக்கும் தங்கமணிக்கும் நல்ல சிநேகிதம். பொழுது போகாத நேரங்களில் பேசிக் கொண்டிருப்பதற்கும் விடுமுறைத் தினங்களில் சினிமாவுக்குப் போய் வருவதற்கும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தார்கள்.

Continue Reading →

Sri Lanka Guardian:Broken promises ; TNA response to the position of the Government of Sri Lanka at the 19th session of the UN Human Rights Council

March 20, 2012, Colombo, Sri Lanka Guardian) 1. The Government of Sri Lanka has serious issues with regard to telling the truth and keeping its promises

R. Sampanthan, Leader, Tamil National Alliance1.1. In response to Minister Mahinda Samarasinghe’s statement to the 18th Session of the United Nations Human Rights Council [UNHRC] on 12 September 2011, the Tamil National Alliance [TNA] issued a statement the very next day correcting the record and urging the Sri Lankan government “to be more forthright and honest in its representation of the situation in Sri Lanka to the international community.” Unfortunately, the government continues to mislead the international community at the ongoing 19th Session of the UNHRC sessions as well.

1.2. As Sri Lanka approaches the three-year mark since the end of the war, which lasted almost three decades, and though nearly six decades have lapsed since the commencement of exclusionary policies targetting the Tamil people, various pledges made by the Government of Sri Lanka with regard to human rights, accountability and evolving a political settlement have not been fulfilled. The post-independence history of Sri Lanka contains stark reminders of the disturbing ramifications of broken promises and recurring violence.

Continue Reading →

பி.பி.சி: “இலங்கையில் ராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம்”

[மார்ச் 16, 2012] இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் ராணுவமயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்த பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதோடு, எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று இண்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் என்கிற சர்வதேச நெருக்கடிகளை ஆராயும் குழு தெரிவித்திருக்கிறது. ஐசிஜி என்று பரவலாக அறியப்படும் சர்வதேச நெருக்கடிகளை ஆராய்வதற்கான குழுமம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த குழுமன் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்ட விரிவான அறிக்கையின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. இன்றைய அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மை உரிமைகள் என்பது முதல் பகுதி. இரண்டாவது பகுதி வடக்கில் ராணுவத்தின் கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் பற்றி பேசுகிறது.[மார்ச் 16, 2012] இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் ராணுவமயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்த பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதோடு, எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று இண்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் என்கிற சர்வதேச நெருக்கடிகளை ஆராயும் குழு தெரிவித்திருக்கிறது. ஐசிஜி என்று பரவலாக அறியப்படும் சர்வதேச நெருக்கடிகளை ஆராய்வதற்கான குழுமம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த குழுமன் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்ட விரிவான அறிக்கையின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. இன்றைய அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மை உரிமைகள் என்பது முதல் பகுதி. இரண்டாவது பகுதி வடக்கில் ராணுவத்தின் கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் பற்றி பேசுகிறது.

Continue Reading →

பாரதம்: அகிலேஷ் யாதவின் ஆட்சி உ.பியின் புதிய தொடக்கத்துக்கு விதை போடுமா….

உத்திரப்பிரதேச மாநிலத்தேர்தல் நடந்து முடிந்தது. ஐந்து வருட மாயாவதி ஆட்சிக்கு பிற்பாடு தற்சமயம் நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் முலாயம்சிங் யாதவின் சமாஜ;வாதிகட்சி உ.பியின் ஆட்சி நாற்காலியை பிடித்திருக்கிறது. அவருடைய மகன் அகிலேஷ் யாதவை கட்சிக்காரர்கள் முதலமைச்சர் பதவிக்காக தேர்ந்தெடுத்தார்கள். மார்ச் பதினைந்தாம் தேதி ஆளுனர் பவனில் 38 வயதுடைய அகிலேஷ்யாதவ் முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். இளைய தலைமுறை அகிலேஷ் யாதவின் கைகளில் உ.பியின் கடிவாளம் கொடுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி கொஞ்ச நேரம்கூட எடுக்கவில்லை, அதற்குள்ளே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சித்தொண்டர்கள,; நீண்டநாட்களாக தூங்கிக் கொண்டிருந்த அராஜகங்களை தட்டி எழுப்பினார்கள், அதாவது அடிதடி, கலவரம், கடையடைப்பு, உள்ளூர் பேருந்துகளுக்கு[ தீப்பிடிக்க வைத்தல் ஆகியவைகளை வெற்றிகரமாக நடத்தினார்கள்உத்திரப்பிரதேச மாநிலத்தேர்தல் நடந்து முடிந்தது. ஐந்து வருட மாயாவதி ஆட்சிக்கு பிற்பாடு தற்சமயம் நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் முலாயம்சிங் யாதவின் சமாஜ;வாதிகட்சி உ.பியின் ஆட்சி நாற்காலியை பிடித்திருக்கிறது. அவருடைய மகன் அகிலேஷ் யாதவை கட்சிக்காரர்கள் முதலமைச்சர் பதவிக்காக தேர்ந்தெடுத்தார்கள். மார்ச் பதினைந்தாம் தேதி ஆளுனர் பவனில் 38 வயதுடைய அகிலேஷ்யாதவ் முதலமைச்சர் பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். இளைய தலைமுறை அகிலேஷ் யாதவின் கைகளில் உ.பியின் கடிவாளம் கொடுக்கப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதலமைச்சராகி கொஞ்ச நேரம்கூட எடுக்கவில்லை, அதற்குள்ளே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சித்தொண்டர்கள,; நீண்டநாட்களாக தூங்கிக் கொண்டிருந்த அராஜகங்களை தட்டி எழுப்பினார்கள், அதாவது அடிதடி, கலவரம், கடையடைப்பு, உள்ளூர் பேருந்துகளுக்கு தீப்பிடிக்க வைத்தல் ஆகியவைகளை வெற்றிகரமாக நடத்தினார்கள். முன்னாள் முதலமைச்சர் மாயாவதியை  ஆதரித்து வந்த கிராம தலித்தலைவர்களை உருட்டுக்கட்டையால் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினார்கள். பல தலைவர்கள் படுகாயம்பட்டு மருத்துவமனையில் தாமாகவே சேர்ந்தார்கள், அவர்களுள் ஒருவர் உயிரிழந்தார்.

Continue Reading →

திண்ணை.காம்: அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்

அண்மையில் மறைந்த எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான தி.சு.சதாசிவம் அவர்களின் நினைவாக எழுத்தாளர் பாவண்ணனால் எழுதப்பட்டு , திண்ணை இணைய இதழில் பிரசுரமான கட்டுரையிது. - பதிவுகள்[அண்மையில் மறைந்த எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான தி.சு.சதாசிவம் அவர்களின் நினைவாக எழுத்தாளர் பாவண்ணனால் எழுதப்பட்டு , திண்ணை இணைய இதழில் பிரசுரமான கட்டுரையிது. – பதிவுகள்] எண்பதுகளின் பிற்பகுதியில் கொப்பள என்ற ஊரிலிருந்து கதக் என்னும் ஊர்வரைக்கும் கேபிள் புதைக்கும் வேலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். இரண்டு ஊர்களுக்கும் இடையில் லக்குண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. பருத்தியும் சோளமும் விளையும் கரிசல் மண்ணைக் கொண்ட சிற்றூர். ஊருக்கு நடுவில் அழகான ஏரியொன்றும் சமணக்கோவில் ஒன்றும் உண்டு. அதையொட்டித்தான் நாங்கள் எங்களுடைய கூடாரத்தை அமைத்திருந்தோம். பொழுது சாய்ந்தபிறகுதான் வேலையிலிருந்து திரும்புவோம். பிறகு ஒரு குளியல். அதற்கப்புறம் நண்பர்களோடு பேசியபடியே ஒரு நடை. எளிய இரவு உணவு. உணவை முடித்ததுமே நண்பர்கள் மீண்டுமொரு நடைக்குத் தயாராவார்கள். நான் எனது கூடாரத்துக்குள் சென்றுவிடுவேன். லாந்தர் விளக்கெரியும் ஒரு சிறிய எழுத்துமேசையின் முன்பு அமர்ந்து படிக்கவோ அல்லது எழுதவோ, அக்கணத்தின் மனநிலைக்குத் தகுந்தபடி செய்வேன். அந்த ஊரில் இருக்கும்போதுதான் பெங்களூரிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த காவ்யா பதிப்பகத்தின் தொடர்பு கிடைத்தது. இங்கே இன்று என்னும் இதழையும் வேறு சில சிறுகதைத்தொகுதிகளையும் நாவல்களையும் காவ்யாவிடமிருந்து வரவழைத்துப் படித்தேன். அவற்றுள் ஒன்று சம்ஸ்காரா என்னும் கன்னட நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பு.

Continue Reading →