மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (24 & 25)

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (24)

- வெங்கட் சாமிநாதன் -பன்றியாக மாறி வாழ்ந்து அந்த வாழ்க்கையில் சுகம் காணும் இன்றைய பன்றி முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்த  கதையைச் சொன்ன போது அதை மறுத்தவர் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. அல்லது மறுத்தவர்களின் வாதங்களையும் பெயர்களையும் அருண் தணிக்கை செய்துவிட்டாரோ?. அப்படி இராது என்று தான் நினைக்கிறேன். பன்றிக்கு பன்றியாக சுகமே வாழ்வதில் மறுப்பிராது .ஆனால் அதைப் பன்றி என்று நாம் அழைத்தால் அது கட்டாயம் அதன் வழியில் சீறும். ஏனெனில் அதற்கு தான் முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்தது நினைவில் இருக்கக் கூடும். . சுகம் கண்டாயிற்று. இதுதான்  சுகம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாயிற்று. அது ஆழமாகப் பதிந்தும் போய்விட்டது. பில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து, அவ்வப்போது உலகத் திரைப்பட விழாவுக்கெல்லாம் தவறாமல் போய் வந்தும், தமிழ்த் திரைப்படங்களை தராசில் எடை போட வரும்போது ஹாசினிக்கு தமிழ் சினிமாக் கலாசாரமும் அதில் தான் வாழ்வேண்டிய நிர்ப்பந்தங்களும் தான் அழுத்துகின்றன. அழுத்துகின்றன என்று சொல்வது கூட தவறு என்று நினைக்கிறேன்.

Continue Reading →

மீள்பிரசுரம்: ஆனந்தபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கேற்பட்ட இராணுவத் தோல்வியின் பகுப்பாய்வு!

விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்][விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்]
 
– இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10,2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது புதுப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் தற்போதைய தலைப்புடன் வெளியிடப்படுகிறது.அது மீண்டும் இங்கே வெளியிடப்படுவது, ஏப்ரல் 5,2009ல் ஆனந்தபுரத்தில் முடிவுற்ற தீர்க்கமான போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக. அப்போது நான் எழுதியிருந்தது, ஆனந்தபுர யுத்தம் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணோட்டத்தில் தற்போது நடைபெறும் யுத்தத்தைப் பற்றிய கணிப்பினை தீர்மானிப்பதற்கு ஏற்ற ஒரு தருணம் என்று.   – டி.பி.எஸ்.ஜெயராஜ் –

Continue Reading →