தோழர் சண்முகலிங்கம் [ 23.06.1944 – 22.02.2013] மறைவு!

தோழர் சண்முகலிங்கம்முகநூலில் சண்முகலிங்கம் அவர்கள் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அறிந்தேன். அவரின் மறைவு பற்றிய விடயத்தையும் பின்னர் முகநூல் மூலம் அறிந்தேன். உண்மையிலேயே துயரமாகவிருந்தது. நல்லதொரு மனிதர். தன்னைப்பற்றி தம்பட்டம் அடிக்காத,அமைதியாகத் தன் பங்களிப்பினை வழங்கியவர்.  தோழர் பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்களைச் சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன. நான் நினைத்தேன் அவர் இன்னுமொரு நகருக்குச் சென்று விட்டதாக. ‘காந்தியம்’ அமைப்புடன் பணியாற்றியவர். அதன் காரணமாகச் சிறைவாசமும் அனுபவித்தவர். அவரைச் சந்திக்கும் நேரங்களிலெல்லாம் அவரது அனுபவங்களை எழுத்தில் கொண்டுவரும்படி கூறுவதுண்டு. அதற்கவர் சிரித்துக்கொண்டு ‘ஓம்! ஓம்’ என்று தலையாட்டுவார். அவரைச் சந்திக்காமலிருந்தாலும் அவர் பற்றி அவ்வப்போது நினைப்பதுண்டு. ஒரு நாளாவது அவரைப் புன்னகை தவழாத முகத்துடன் பார்த்தது கிடையாது. அவரது மறைவால் துயருறும் நண்பர்கள், உறவினர்களுடன் நானும் தனிப்பட்டரீதியிலும், ‘பதிவுகள்’ இணைய இதழ் சார்பிலும் கலந்துகொள்கின்றேன். அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:

Continue Reading →

இன்று கணையாழி விருது விழா: தீபச்செல்வன். பேரா. க.பஞ்சாங்கம், செங்கை ஆழியான் ஆகியோருக்கு விருது!

இன்று கணையாழி விருது விழா!கணையாழி விருது விழா அழைப்பிதழ்

Continue Reading →

மலேசியா: மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் படைக்கும் பொங்கல் கலாசார விளையாட்டுப் போட்டி

சங்கத்தலைவர் திரு.வே.ம.அருச்சுணன் தலைமையில் எதிர்வரும், 24.2.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 வரையில் ஷா ஆலாம்,செக்‌ஷன்7, மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மைதானத்திலும்,…

Continue Reading →

வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவல் பற்றி…

குடிவரவாளன் பற்றிச் சில குறிப்புகள்……

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா ‘எயார் லைன்ஸ்’ எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவல் வெளியீடு பற்றி…

குடிவரவாளன் பற்றிச் சில குறிப்புகள்……

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'[வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவல் இந்த வருட இறுதிக்குள் தமிழகத்தில் வெளிவரவுள்ளது. அதனையொட்டி இக்கட்டுரை, ஓர் அறிமுகத்துக்காகப் பிரசுரமாகின்றது. – பதிவுகள்-] இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா ‘எயார் லைன்ஸ்’ எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.

Continue Reading →

(4) – சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மலரும் மணமும் என்ற தலைப்பு என்று நினைவு, அதைப்  படித்திருக்கிறேன். அதில் நிறையப் பேர்களால் பாராட்டப் பெற்ற நக்ஷத்திரக் குழந்தைகள் என்ற கதையில் குழந்தையின் கேள்வியும் அதன் துக்கமும் மிகவும் செயற்கையாகத் தோன்றியது. எந்தக் குழந்தை, ”நக்ஷத்திரம் விழுந்துடுத்து, யாரோ பொய் சொல்லீட்டா அதனாலே தான்”, என்று அழும்? ஆனால் அவர் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் அதில் மற்ற எவரையும் விட அதிகம் சாகஸம் காட்டக் கூடியவர் என்பதில் எனக்கு பிரமிப்பு. மணிக்கொடிக்கால எழுத்தாளர் எவரையும் விட அக்கால மோகமான சினிமாவில் அதிகம் தன் சாமர்த்தியத்தைக் காட்டியவர். ஜெமினியின் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சினிமாவைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. பிச்சமூர்த்தி, வ.ரா பி.எஸ் ராமையா, ச.து.சு. யோகியார் எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாரகள் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன். ஏதோ சொன்னதை, தனக்குத் தெரிந்ததைச் செய்வதற்கும் மேலாக அந்தத் துறையே தனக்கு அத்துபடி ஆகிவிட்டது போல ஒரு புத்தகமே எழுதும் சாகஸம் பி.எஸ் ராமையாவின் ஆளுமையைச் சேர்ந்தது தான். ஆனந்த விகடனோ இல்லை குமுதமோ நினைவில் இல்லை, ஒரு தொடர் கதை எழுதச் சொன்னால் அதற்கும் அவர் ரெடி. குங்குமப் பொட்டு குமாரசாமி என்ற அந்த தொடர்கதை ஒரு வருட காலமோ என்னமோ வந்தது. கதைக்கான பாத்திரங்களையும் சம்பவங்களையும் கணக்கின்றி கற்பனை செய்து கொள்வதில் மன்னன் தான். மாதிரிக்கென்று அவர் கதைகள் சில படித்திருக்கிறேன். அப்போது அவர் வாரம் ஒரு கதை எழுதித் தருகிறேன் என்று சொல்லி ஒரு வருடத்துக்கும் மேலாக தவறாது வாரம் ஒரு கதை எழுதித் தந்தவர். அந்தக் கதைகளில் நான் மாதிரிகென்று ஒரு சில படித்ததில் அவரது ஒரு கதையில் நாலு கதைகள் பிய்த்து எழுதத் தேவையான சம்பவங்களும், திருப்பங்களும், தேவையான கதா பாத்திரங்களும் இருக்கும்.

Continue Reading →

சே குவேராவும் யாசர் அரபாத்தும் காட்டிய ஹாலிவுட் சினிமா

யமுனா ராஜேந்திரன் -பிப்ரவரி 18 ஆம் திகதி இரண்டு கட்டுரைகள் வாசிக்க முடிந்தது. கட்டுரைகளின் காலப்பொருத்தம் உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. இலண்டன் த இன்டிபென்டன்ட் பத்திரிக்கையில் நெஞ்சை அறுக்கும் வலி கொண்டதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்த கோரமான படம் வெளியாகி இருந்தது. புகைப்படம் தொடர்பாக ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார். ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைத் திரைப்பட விழா நிகழ்வில் திரையிடப்படும் ஹாலும் மக்ரேவின் நோ பயர் சோன் ஆவணப்படத்தில் இடம்பெறும் புகைப்படங்களே த இன்டிபென்டட்டில் வெளியாகியிருந்தது. மகிந்த அரசின் ‘கருணை அரசியலுக்கு’ சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை நடத்தப்பட்ட முறை ஒரு சான்று. இதே 18 ஆம் திகதி குளோபல் தமிழ் நியூஸ் தளத்தில் நிலாந்தனின் படம் பார் பாடம் படி கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நிலாந்தனுக்;கு ஹாலும் மக்ரேவின் ஆவணப்படமும் கூட ஹாலிவுட் சினிமாவின் அங்கமாகத்தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.

Continue Reading →

STATEMENT BY THE PRIME MINISTER OF CANADA ON THE ESTABLISHMENT OF THE OFFICE OF RELIGIOUS FREEDOM

Prime Minister Stephen Harper delivered the following remarks announcing the establishment of the Office of Religious Freedom:

Prime Minister Stephen Harper Thank you very much. Thank you, first of all, Jason, for that kind introduction, and also for the work you’ve been doing, I know Jason has been a very passionate advocate for the initiative that we’re announcing today. Thank you as well to our master of ceremonies today, our host because he’s the Member of Parliament for this area, the Honourable Julian Fantino who has been a great addition to our team in Ottawa. I also want to thank all of my colleagues from both Houses of Parliament who have come to be here with us today for this very important announcement. Special greetings to Member of Parliament Bev Shipley who moved the motion in the House of Commons to get a vote to establish the Office of Religious Freedom. And thank you as well to our host here today, National General Secretary Dr. Aslam Daud and National President Lal Khan Malik of the Ahmadiyya Muslim Jama’at Canada, thank you. Distinguished guests, ladies and gentlemen, I’d like to start today by expressing my gratitude, to join with Jason to express my gratitude, to the Ahmadiyya Muslim community here in Vaughan. I’m grateful for your generous hospitality but even more I’m grateful for the outstanding example that you set. This community has experienced, as Jason mentioned, the terrible cruelty of persecution, persecution on the basis of religion. In spite of that, your belief in tolerance and harmony endures. In this you make an inspiring contribution to our values. You strengthen Canada’s commitment to diversity and pluralism. And you remind your fellow Canadians that the freedoms we enjoy are precious, and must never be taken for granted. So as your Prime Minister, I thank you on behalf of all Canadians for strengthening and enriching the fabric of our country.

Continue Reading →

The Hindu.Com: The killing of a young boy

CHILLING DETAILS: Digital image analysis by an expert for Channel 4 has confirmed that this photograph showing 12-year-old Balachandran Prabakaran before and after he was shot dead, were taken with the same camera.New photographs of LTTE chief Velupillai Prabakaran’s son just before he was shot dead, obtained by Channel 4 TV, leave more questions for Sri Lanka to answer about war crimes.

It is a war that has produced some truly terrible images, but this one is particularly disturbing. A young boy sits looking distressed, like a child who has been lost in a supermarket. He has been given a biscuit or some kind of snack. In the second photograph, he is looking anxiously up, as though hoping to see someone he recognises. The boy is Balachandran Prabakaran, the 12-year-old son of Tamil Tiger leader Velupillai Prabakaran. These photographs, which we are releasing today, form part of the new evidence in the forthcoming feature documentary “No War Zone: The Killing Fields of Sri Lanka,” the culmination of three years of research which will be shown for the first time next month in Geneva, to coincide with the U.N. Human Rights Council meeting. The new evidence in the film is certain to increase pressure on the Indian government not only to support a resolution on Sri Lanka and accountability, but also to ensure that it is robustly worded, and that it outlines an effective plan for international action to end impunity in Sri Lanka.

Continue Reading →

வந்தவாசியைச் சேர்ந்த மாணவிக்கு மாநிலச் சிலம்பாட்டப் போட்டியில் மூன்றாம் பரிசு

தமிழக முதல்வரின் 65-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக திருநெல்வேலியில்  வந்தவாசி, .பிப்.04.  – தமிழக முதல்வரின் 65-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக திருநெல்வேலியில்  பிப்ரவரி 2,3 ஆகிய இரு நாட்கள் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில்  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மு.வெ.அன்புபாரதி சப்-ஜூனியர் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் பரிசினை பெற்றிருக்கிறார். இவர் அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகேஷ், வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அ.வெண்ணிலா ஆகியோரின் இளைய மகளாவார்.செய்யாறு விவேகா இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இவர், சென்ற வருடம் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டவர். பள்ளி அளவிலும், மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பலமுறை பரிசுகளைப் பெற்றுள்ளார். நேற்று நெல்லையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பாராட்டுச் சான்றிதழையும், நினைவுப் பரிசினையும் அன்புபாரதியிடம் வழங்கினார்.விழாவில், அகில இந்திய சிலம்பாட்டக் கழகத் தலைவர் டாக்டர் மு.ராஜேந்திரன், மாநிலச் சிலம்பாட்டக் கழகப் பொதுச் செயலாளர் ஆற்காடு கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading →