தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் ( 20, 21, 22 & 23 )

அத்தியாயம் 20 :  நீதிமன்றம்
                
வே.ம.அருச்சுணன் – மலேசியாகணவரின் முகம் கவலையால் மேலும் வாடிப்போகிறது. வாய்ப்பேசமுடியாத  ஊமையாய்த் திகிலுடன் அமர்ந்திருக்கிறார். மிகுந்த பணச்செலவில் அமர்த்தப் பட்ட நாட்டிலுன் பிரபல வழக்கறிஞர்களின் வாதத்திறமையால் மகன் தப்பினால்தான் ஆச்சு.  அமர்த்திய வழக்கறிஞரின் வாதத் திறமைகளைத் தினகரன் மிகவும் உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.  பத்து நாட்கள் கோட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து நடந்து உடலும் உள்ளமும் தினகரனுக்கு அலுத்து போயிருந்தது. அம்பிகை ஒரு மன நோயாளியாகவே மாறிவிட்டிருந்தார்.  நீதிமன்றம் வழக்கத்திற்கும் மாறாகப் பார்வையாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். கடந்த பத்து நாட்களாக நடந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் நாள் இன்று! அதிகாலையிலேயே அம்பிகை கொயிலுக்குச் சென்று மகன் விடுதலையாக இறைவனிடம் வேண்டிக் கொண்டு முழு நம்பிக்கையுடன் தீர்ப்பைக் கேட்க கணவருடன் வந்திருந்தார்.  பார்த்திபன் நீதிபதி முன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறான்.நீதிபதி சில வினாடிகளில் சொல்லப் போகும் தீர்ப்பைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் பார்த்திபன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததால், இறுதியில் பார்த்திபன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது.
 

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை – அத்தியாயம் 16 && 17

அத்தியாயம் 16

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்மெல்பேனின் தெற்கேயும் தென்கிழக்கேயும் இருக்கும் டன்டினோங் மலைத்தொடர் ஒரு விதத்தில் நகரின் எல்லைச் சுவராக செல்கிறது. மெல்பேனின் வடக்கு, மேற்குப் பகுதிகள் சமவெளியாக பல கிலோமீட்டர் தூரம் செல்கின்றன. மெல்பேனின் கிழக்கில் மலையடிவாரங்களில் பல புற நகர்கள் அமைந்துள்ளன. மலையடிவாரங்களில் ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என காணிகளில் வீடுகட்டி வாழ்வது பலரது இலட்சியமாக இருப்பதால் டண்டினோங் மலைப் பகுதியில் பல புறநகர்கள் தோன்றியுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நகரின் சந்தடிகளில் இருந்து ஒதுங்கி வாழ விரும்புவர்கள்,  சிறிய தோட்டங்களை உருவாக்கி அதன் நடுவே  தங்கள் மூதாதையாரால் தொலைத்துவிட்ட கிராமிய வாழ்கையை மீண்டும் தேடுபவர்கள், குதிரை, பசு ,ஆடு என மிருகங்களை வளர்க்க விரும்புவர்கள். இதைவிட கண்களுக்கு ரம்மியமான காட்சிகள் தேடும் வேறு சாரரரும் இந்த மலைப் பகுதிகளைத் தேடுகிறார்கள்.

Continue Reading →

மேக்ஸ்மிலியன் ரொபேஷ்பியர் : வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சி

மேக்ஸ்மிலியன் ரொபேஷ்பியர் :வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சிஇலண்டனில் யமுனா ராஜேந்திரனின் மூன்று நூல்கள் விமர்சன, விவாத அரங்கு!வரலாறு எழுதுதல் எனும் செயல்பாடு கடந்த காலம் பற்றியதாயினும் அது எப்போதுமே எழுதுபவன் வாழும் நிகழ்காலம் குறித்ததாகவே இருக்கிறது. வாசுதேவன் தனது சமகால மனநெருக்கடியிலிருந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி குறித்த அவரது வரலாற்று நூலை முன்வைத்து ரொபேஷ்பியர் முதல் பிரபாகரன் வரையிலான ஆயுதப் பேராட்டத்திற்குத் தலைமையேற்ற ஆளுமைகளின் நம்பிக்கைகள், நடைமுறைகள், அதீதங்கள் என ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்ளமுடியும்.  வாசுதேவனின் நூலுக்கு அறிமுகம் எழுதுகிற இந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு 225 ஆண்டுகள் நிறைகிறது. 1989 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறு ஆண்டு நிறைவு விழா பிரான்சில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது இவ்வாறானதொரு நூல் எழுதும் ஆதர்ஷம் தனக்கு ஏற்பட்டது என்கிறார் வாசுதேவன்.  வாசுதேவனுக்கு நிச்சயமாக இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி எதிர்கொண்ட கருத்தியல் மற்றும் நடைமுறைக் கேள்விகள் அனைத்தையும் எதிர்கொண்ட ஒரு விடுதலைப் போராட்டமாக அவரது பூர்வீக நிலம் சார்ந்த ஈழவிடுதலைப் போராட்டம் இருந்தது என்பதுதான் அந்தக் காரணம். பிரெஞ்சுப் புரட்சி குறித்துப் பேசும், நிறைந்த தமிழ்ப் புதுச்சொல்லாக்கங்களும் கவித்துவ மொழியும் கொண்ட இந்த நூலில் ‘போராளிகளின் தற்கொடை, மாவீரர்’ போன்ற சொற்கள் வாசுதேவனிடமிருந்து இயல்பாக வந்து விழுகின்றன.

Continue Reading →

மொழிபெயர்ப்புச் சிறுகதை: ஆசிரியர்:டெஸ்மோண்ட் எல். கார்மாவ்பலாங் [ தமிழில்: சுப்ரபாரதிமணியன் ]

– டெஸ்மோண்ட் எல். கார்மான்பலாங் கவிஞர், நாட்டுப்புற கதைகளை எழுதுபவர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் காசி மற்றும் ஆங்கிலத்திலும் இரண்டு மொழியிலும் எழுதுகிறார். ஷில்லாங்கிங்,கின் வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகத்தின் வாழ்வியல் மற்றும் கலாச்சார படிப்பினையின் படிப்பவராக உள்ளார். –
 
சுப்ரபாரதிமணியன்திரு.கே.வின் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன. காரின் ஜன்னலில் தன் பார்வையை பதித்துக் கொண்டு, தெருவில் வரிசையாக இருந்த வீடுகளை பார்த்துக் கொண்டே வந்தார். மக்கள், தனியாக செல்பவர்கள், தோழமை முக பாவத்துடன் இருப்பவர்கள், சிலர் சாலையில் நடந்து கொண்டு, சிலர் கார்களில், தன் கண்களின் முன்னால் நடந்து செல்பவர்களைப் போல் தன் வாழ்க்கையில் நடந்து விஷயங்கள் திரைபோல் ஓடின. நிம்மதியில்லாமல். தன்னுடைய சொகுசான காரில், மெதுமெதுப்பான இருக்கையில் சௌகரியமில்லாமல் முணு முணுத்தபடியே அமர்ந்திருந்தார். வாகன ஓட்டுனர், அவரை நன்கு புரிந்து கொண்டவர் போல் வண்டியின் வேகத்தை குறைத்து, ‘என்ன, சார்?’ எனக் கேட்டார். ‘ஒன்றுமில்லை’ என பதிலளித்த திரு.கே- மநதிரிசபையில் இரண்டரை ஆண்டுகளாக அமைச்சராக உள்ளார். ‘பெண் நாய்’ என திட்டினார். இஸபெல்லால் எப்படி இதை செய்யமுடிந்தது. என்னுடைய நிலைமை அவன் உணரவில்லையா? ஒருவேளை அதனால் நடந்தால் என்ன ஆகும்… கடவுளே நினைத்துக் கூட பார்க்க முடியாது! மணல் வெளியில் மென்மையாக அந்தக் கார் சென்று கொண்டிருக்கையில் திரு.கே பின்னோக்கி கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். மதிக்கப்பட்ட தலைமையாசிரியராக அவர் பணியாற்றிய பள்ளி இருந்த கிராமத்தின் அந்தப் பகுதி எம்.எல்.ஏ 5வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் சமயத்தில் மட்டுமே நினைவு கூர்வார். திரு.கே- பக்கத்து கிராத்தைச் சேர்த்ததுடிப்பான மற்றும் கடின உழைப்பாளி, வலிமையான கைகளையும் எப்போதும் புன்னகையையும், கொண்ட இளைஞன்.
 

Continue Reading →