ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் நாவலுக்குக் கரிகாலன் விருது

ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் நாவலுக்குக் கரிகாலன் விருதுதஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது. 2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார். அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம். நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடல் – பகுதி 3

33. உத்தமபுத்திரன் - டி.ஆர். சுந்தரம்நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நடக்கும் இந்த திரையிடலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அதுப் பற்றிய விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நாட்களும் திரையிடல் மாலை 6 மணிக்கு தொடங்கும்.  இந்திய சினிமா நூற்றாண்டை தமிழ்நாட்டில் கொண்டாடுவதால், தமிழ் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடபடுகிறது. தவிர இந்த எல்லா தமிழ் திரைப்படங்களும் வெவ்வேறு வகையில் முக்கியமான ஒரு பதிவை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி சென்றவை.

தொடங்கும் நாள்: 30-11-2013, சனிக்கிழமை.
இடம்: தியேட்டர் லேப், முனுசாமி சாலை, புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், மேற்கு கே.கே. நகர், சென்னை.
தினசரி நேரம்: மாலை 6 மணிக்கு.

Continue Reading →

தமிழ் இலெமுரியா -கார்த்திகை 2044 இதழ்(நவம்பர் 2013)

தமிழ் இலெமுரியா -கார்த்திகை 2044 இதழ்(நவம்பர் 2013)அன்புடையீர், தமிழ் இலெமுரியா கார்த்திகை  2044 ( 15 நவம்பர்  2013) இதழ் நம் இணையத் தளத்தில் வண்ணப் பக்கங்களுடன் வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது. www.tamillemuriya.com மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளைத் தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ். தாங்கள் “தமிழ் இலெமுரியா” இணையத் தளத்தில்  இலவசமாகப் பதிவு செய்து கொண்டு முந்தைய இதழ்களையும் வாசித்துப் பயன் பெற வேண்டுகின்றோம். தமிழும் நாமும் வேறல்ல, தமிழே நம் வேர். தங்களின் ஆதரவிற்கு நன்றி,  வாசித்து மகிழ்க!  www.tamillemuriya.com நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யவும்.

Continue Reading →

திரும்பிப் பார்க்கின்றேன்: சிவாஜி முதல் சிவாஜி வரையில் எழுதி ஓய்ந்த சுஜாதா

சுஜாதாஎழுத்தாளர் முருகபூபதிஇலக்கியப்படைப்புகள்  எழுதத்தொடங்குவதற்கு  முன்னர்  குமுதம்    இதழ்களில்    சுஜாதாவின்     எழுத்துக்களைப்    படித்திருந்த   போதிலும்    தொடர்ந்து படிப்பதற்கு    ஆர்வமூட்டாத    எழுத்துக்களாக அவை  என்னை   சோர்வடையச்செய்திருந்தன.  நான்  படித்த  சுஜாதாவின்  முதலாவது   தொடர் நைலான் கயிறு. அதுவும்  மர்மக்கதைதான். எனினும் அவரது   பாலம்   என்ற   சிறுகதை மாத்திரம்   நீண்ட   நாட்கள்   மனதில்  தங்கி   நின்றது.  அச்சிறுகதை   உளவியல்   சார்ந்து   வித்தியாசமாக   எழுதப்பட்டிருந்தது. நான்   தீவிரமாக   வாசிக்கத்தொடங்கிய  1970   காலப்பகுதியில்     சுஜாதாவின் பெரும்பாலான   கதைகள்  மர்மக்கதைகளாக  இருந்ததனாலோ   என்னவோ   பின்னர் அவற்றிலிருந்த    ஆர்வம்   குறைந்துவிட்டது. ஒருநாள்   இந்திராபார்த்தசாரதியின்   தந்திரபூமி   நாவலைப்படித்தபொழுது அந்நாவலுக்கு   சுஜாதா   எழுதியிருந்த   முன்னுரை  என்னைப்பெரிதும்   கவர்ந்தது.   அந்நாவலின்  நாயகன்   கஸ்தூரியின்   தோல்வியை   ஜூலியசீஸரின்  வீழ்ச்சிக்கு   ஒப்பானது   என    சுஜாதா  எழுதியிருந்தார். பின்னர்  மீண்டும்   அவரது எழுத்துக்கள்    மீது   ஆர்வம்   தோன்றியது.   சுஜாதாவின்    பாணியில்    இலங்கையில்   எழுதிய  ஒரு  எழுத்தாளரும்  எனது  இனிய   நண்பர்தான்.    அவர்தான்  தெளிவத்தை  ஜோசப்.     சுஜாதா   சங்கர் –  கணேஷ்   என்ற  இரட்டையர்களை  தமது  தொடர்கதைகளில்  துப்பறியும்   நிபுணர்களாக    படைத்திருந்தார்.  தெளிவத்தை  ஜோசப்  ரமேஷ் -ரவிந்திரன்   என்ற  புனைபெயரில்  சில  கதைகளை  சுஜாதாவின்   பாணியில்   எழுதிப்பார்த்தார்.   பிறகு  தொடரவில்லை.  இப்படி  சுஜாதாவின்   பாதிப்புக்குள்ளான    பல எழுத்தாளர்கள்   தமிழகத்திலும்  இலங்கையிலும்  மட்டுமல்ல   அவுஸ்திரேலியாவிலும்     இருக்கிறார்கள்.

Continue Reading →

வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு: வாசிப்பினை நேசிப்போம்! வாசிப்பினை சுவாசிப்போம்!

வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு: வாசிப்பினை நேசிப்போம்! வாசிப்பினை சுவாசிப்போம்!நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

Continue Reading →

International Conference on Tamil Diaspora and the Preservation of Tamil Culture (Mauritius, 16, 17 & 18th July, 2014) Organised Jointly by the Institute of Asian Studies, Chennai and the Mahatma Gandhi Institute, Mauritius

International Conference on Tamil Diaspora and the Preservation of Tamil Culture (Mauritius, 16, 17 & 18th  July, 2014) Organised Jointly by the Institute of Asian Studies, Chennai and the  Mahatma Gandhi Institute, Mauritius“Diaspora” is the term for a group of persons with a common group identity, unique in culture and language, dispersed or scattered in various parts of the world. A diaspora maintains and nurtures its own civilizational and cultural identity and its aspirations are linked with their country of origin, as well as with the diaspora worldwide, making it a global unity with global identity. The Jewish, Chinese and Indian diasporas are some of the vibrant diasporas with a presence all over the world. The Tamil diaspora is a demographic group of Tamil people, of Indian and Sri Lankan origin, who have settled in various parts of the world. Among the Indian diasporas, the Tamil diaspora is a very strong and vibrant community whose presence has been in Asia and Europe from age-old days, when the Tamil people developed commercial ties with various countries all over the world. Tamils are a sea-faring race and their trade with the western and eastern worlds has been documented from the pre-Christian era. This early commercial trade, followed by the travel of Buddhist monks and Saivite and Vaishnavite saints to East and Southeast Asia, then the conquering of the later Chola kings of Southeast Asia all resulted in early Tamil settlements in various countries.

Continue Reading →