சிறுகதை: வீடு

சிறுகதை: வீடு தமிழ்க்கிராமங்களில் பொதுவாக  வாடகைவீடு  பெறுவது  சிரமான  காரியம். அருமையாகப் படித்தவர்கள்,   கொழும்புக்கு வேலை கிடைத்துப் போற போது, சிலவேளை   தம்   குடும்பத்தையும் கூட்டிச் சென்றால், அவர்கள் இருந்த வீடு காலியாகும். நடுத்தர வருவாய்யைக் கொண்டவர்கள்  அப்படியெல்லாம் செய்ய  மாட்டார்கள். பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த மத்திய அரசு, இன பேதத்தை பாராட்டுற போது  எம்மவர்களிற்கு அங்கே பாதுகாப்பு இருக்கவில்லை. கலவரங்களில் ‘கரியான ..அனுபவங்கள் தானே தொடர்கதையாய் தொடர்கின்றன.  தவிர, சொந்த வீடு ,நிலம் இல்லாதவர்கள் இங்கும்  இருக்கவே  செய்கிறார்கள்.  பலர், தங்கு வேலைக்குப் போய் வருவது போலவே கொழும்புக்கும் போய் வருகிறார்கள்.

     சித்ரா ரீச்சர் வவுனியாவில்  பத்து வருசமாக ஆசிரியையாய்  குப்பை கொட்டி அலுத்து விட அவருக்கு ஒரு மாற்றம் தேவையாக இருந்தது. சொந்தப் பகுதியில் ஏதாவது கிராமத்து  பள்ளிக்கூடத்திற்கு மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.  இந்த கிராமத்திலே .. வேலை கிடைத்திருக்கிறது.  நகரத்தில்,. வசிக்கிற பெரியண்ணை வீட்டிலிருந்தே  போய் வந்து  கொண்டிருக்கிறார். அவருக்கு கிராமமே பரிச்சம் இல்லாதது.  வீடு’ எல்லாம் பார்க்க அந்த இந்துக்கல்லூரியில் படிப்பிக்கிற ஆசிரியர்களையே… நாடினார்.

Continue Reading →

திருப்பூர் மத்திய அரிமா விருதுகள் -2014!

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ‘சக்தி’ விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது.  கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம்,  குறும்படம் குறித்த புத்தகங்களின் இரு பிரதிகளை திருப்புர் மத்திய அரிமா சங்கத்துக்கு அனுப்பலாம்.

Continue Reading →

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் மீவியல் புனைவுகள்

books554.jpg - 8.33 Kbசெவ்வியல் வரிசையில் மூவேந்தர்களின் வரலாற்றினை திறம்படவெளிக்காட்டுவது முத்தொள்ளாயிரம். சேரன்,  சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை அகம் – புறம் வாயிலாகக் கூறுவதோடு ‘முடியுடை’ மன்னர்கள் எனும் சிறப்பினையும் இந்நூல் பெறுகிறது. புறத்திறட்டில் நூற்று எட்டு பாடல்களும் பழைய உரைகளில் இருபத்திரெண்டு பாடல்களும் சேர்த்து பனுவலாகப் படைக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் இன்னாரென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. வெண்பா யாப்பில் அமைந்துள்ள பாக்கள் இனிமையும் கருத்துச்செறிவும் மிக்கனவாக மிளிர்கின்றன. இந்நூல சேரன்,  சோழன் , பாண்டியன் என்னும் மூவேந்தர்களின் கொடைச்சிறப்புகள்,  வெற்றி, புகழ்,  போர்த்திறம்,  உலாவருதல்,  அவனைக் கண்டு காதல் மகளிர் காதல் கொள்ளுதல்,  பேய்களின் செயல்பாடுகள்,  போர்க்களச் செய்கைகள்,  புலவர்களின் கற்பனை,  சொல்லாச்சித் திறன் மக்கள்களின் வாழ்வியல் நிகழ்வுகள்,  வெறியாட்டு சடங்குகள் இவை போன்ற களங்களில் மூவேந்தர்களின் வாழ்வியலைத் தடம்பதித்துள்ளனர் புலவர்கள். அதனை திறம்பட வெளிக்காட்டுவதோடு புலவர்களின் மீவியல் புனைவுகளையும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

Continue Reading →

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் மீவியல் புனைவுகள்

books554.jpg - 8.33 Kbசெவ்வியல் வரிசையில் மூவேந்தர்களின் வரலாற்றினை திறம்படவெளிக்காட்டுவது முத்தொள்ளாயிரம். சேரன்,  சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை அகம் – புறம் வாயிலாகக் கூறுவதோடு ‘முடியுடை’ மன்னர்கள் எனும் சிறப்பினையும் இந்நூல் பெறுகிறது. புறத்திறட்டில் நூற்று எட்டு பாடல்களும் பழைய உரைகளில் இருபத்திரெண்டு பாடல்களும் சேர்த்து பனுவலாகப் படைக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் இன்னாரென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. வெண்பா யாப்பில் அமைந்துள்ள பாக்கள் இனிமையும் கருத்துச்செறிவும் மிக்கனவாக மிளிர்கின்றன. இந்நூல சேரன்,  சோழன் , பாண்டியன் என்னும் மூவேந்தர்களின் கொடைச்சிறப்புகள்,  வெற்றி, புகழ்,  போர்த்திறம்,  உலாவருதல்,  அவனைக் கண்டு காதல் மகளிர் காதல் கொள்ளுதல்,  பேய்களின் செயல்பாடுகள்,  போர்க்களச் செய்கைகள்,  புலவர்களின் கற்பனை,  சொல்லாச்சித் திறன் மக்கள்களின் வாழ்வியல் நிகழ்வுகள்,  வெறியாட்டு சடங்குகள் இவை போன்ற களங்களில் மூவேந்தர்களின் வாழ்வியலைத் தடம்பதித்துள்ளனர் புலவர்கள். அதனை திறம்பட வெளிக்காட்டுவதோடு புலவர்களின் மீவியல் புனைவுகளையும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

Continue Reading →

அக்டோபர் 2014 கவிதைகள்!

மலையுச்சிப் பூவின் தியானம்

–  எம்.ரிஷான் ஷெரீப் –

அக்டோபர் 2014 கவிதைகள்!

கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை
அந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

Continue Reading →

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும் (1 & 2)

(1)  பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!- வெங்கட் சாமிநாதன் -எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் படித்ததும் அது தன்னையே பரிசுக்கு உயர்த்திக்கொண்டது, பரிசும் கிடைத்தது. எல்லாம் சரி. அது படித்தாக வேண்டும். காலச்சுவடு பதிப்பித்தது தான் என்றாலும் ஏதோ சுற்று வழியில் தான் என் கவனத்திற்கு வந்து சேர்ந்தது தற்செயலாக. பின் அதைத் தவறவிடுவார்களா?  நாகரத்தினம்மா கேள்விப்பட்ட பெயர் தான். பங்களூரிலிருந்து வந்த ஒரு தேவதாசி. சங்கீதம் தெரிந்தவர். தியாகராஜரிடம் அதீத பக்தி கொண்டவர். பிருந்தாவனம் என்று சொல்லப்பட்டாலும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர் என்ற அளவுக்குத் தான் எனக்கு அவர் பற்றிய விவரங்கள் தெரியும். 

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 61: பல்லவராயன் கட்டில் ஒரு பொழுது….

வாசிப்பும், யோசிப்பும் 61: பல்லவராயன் கட்டில் ஒரு பொழுது....‘பொல’ ‘பொல’வென்று பொழுது விடியும் சமயம்.. ‘மாசிப்பனி மூசிப்பெய்துகொண்டிருக்கும். புலரும் பொழுதினை வரவேற்றுப்பாடுபவவை .. சேவல்களா? இல்லை.. பின்.. மயில்கள்தாம். மயில்கள் அகவிக் காலையினை வரவேற்கும் பாங்கினை ‘முழங்கா’விலில்தான் காணலாம். முழங்காவில் என்றதும் ஞாபகம் வருபவை.. முழங்காவிற் சந்திக்கோவில், தேநீர்க்கடை, குழாய்க்கிணறுகள், பெண்கள் குடியேற்றத்திட்டம்… இவைதாம். இவை எண்பதுகளின் ஆரம்பகாலகட்டத்து நினைவுகள். மன்னார்ப்பகுதிக்கும் சங்குப்பிட்டிக்கும் இடையில் அமைந்துள்ள முழங்காவிற் கிராமத்தின் முதற் பஸ் தரிப்பிடம் ‘பல்லவராயன் கட்டு’ என்று அழைக்கப்படும் பகுதியிலுள்ளது.

என் நண்பனொருவன் ‘சிறீ’ (மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் தொழில்நுட்பத்துறையில் படித்திக்கொண்டிருந்வன்) குழாய்க்கிணறுத்திட்டத்தில் பயிற்சிக்காகச்  சேர்ந்திருந்த சமயம், அவனது அழைப்பின்பேரில் அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வூர் மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியது. அச்சந்திப்புகளின்போது அறிந்த சில தகவல்களை பகிர்ந்துகொள்வதுதான் இப்பதிவின் நோக்கம். அத்துடன் நனவிடைதோய்தலும் இதனுள் அடக்கம்.

Continue Reading →

இணையத்தள அறிமுகம்: அறிஞர் க. பூரணச்சந்திரன் படைப்புகளுக்கான இணையத்தளம்!

1_pooranachnadran_k.jpg - 18.37 Kbஅன்புடையீர் வணக்கம், அறிஞர் க.பூரணச்சந்திரன் அவர்கள் எங்களைப்போன்ற பல தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும், முனைவர் பட்ட ஆய்வரிஞர்களையும் உருவாக்கியவர். அவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஈபர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.  புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர். 2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. பத்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். அவற்றில் சில கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன. அறிஞர் க. பூரணச்சந்திரன் அவர்களின் சமூகம் சார்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், கேள்வி – பதில் பகுதிகள், நூல் ஆரிமுகம் – மதிப்புரைகள், உலக திரைப்பட அறிமுகங்கள், மொழியியல் கொள்கை என பல்வேறு தலைப்புகளை சமூகம் சார்ந்து எழுதப்பட்டுவரும் அனைத்தும் ஒரு தொகுப்பாகக் கிடைக்கும்படி எங்களைப்போன்ற மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அறிஞர் பூரணச்சந்திரன் அவர்களும் அவரது மகா திரு. செவ்வேள் அவர்களும் இசைவு தந்து, இன்று ஒரு இணைய தளமாக http://www.poornachandran.com வடிவம் பெற்றுள்ளது. இந்த இணையதளம் அறிஞர் க.பூரணச்சந்திரன் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் உள்ளதனால், தமிழர்கள், தமிழ் மாணவர்கள், புலம் பெயர் தமிழர்கள் என அனைவரிடமும் இந்த இணையதளம் சென்றடைந்தால், மொழி வளர்ச்ச்சி குறித்த சிந்தனையாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கருதி இந்த மினஞ்சலை தங்களுக்கு அனுப்புகின்றேன். இதனைத் தங்கள் நட்பு வட்டத்தில் அனுப்பி அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

Continue Reading →