வாசிப்பும், யோசிப்பும் 68: One flew over the cuckoo’s nest. குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்றா? அல்லது குயிற் கூட்டின் மேலால் ஒரு பறப்பா?

வாசிப்பும், யோசிப்பும் 66:  கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' தவிர்க்க  முடியாததோர் ஆவணப்பதிவு!னடாவிலிருந்து வெளியாகும் ‘உரையாடல்’ சஞ்சிகையில் கையெழுத்து என்றொரு கட்டுரையினை அ.இரவி எழுதியிருக்கின்றார். அதிலவர் குறிப்பிட்டிருந்த விடயமொன்று என் கவனத்தைக் கவர்ந்தது. ஜாக் நிக்கல்சனின் நடிப்பில் வெளிவந்து மிகுந்த பாராட்டினையும், ஐந்து ஆஸ்கார் விருதுகளையும் வென்ற ஆங்கிலத்திரைப்படமான One flew over the cuckoo’s nest திரைப்படம் பற்றிய , மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்த தனது விமரிசனத்தில் திறனாய்வாளர் ஏ.ஜே. கனகரத்தினா One flew over the cuckoo’s nest என்பதை குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்று மொழிபெயர்ப்பு செய்திருந்ததாகவும், ஆனால் ‘சரிநிகர்’ பத்திரிகையில் தான் எழுதிய கட்டுரையில் குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பதைக் குயிற் கூட்டின் மேலால் ஒரு பறப்பு என்று திருத்தி வெளியிட்டிருந்ததாகவும், இதில் எது சரி என்பதை நீங்கள் விவாதித்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

என்னைப்பொறுத்தவரையில் குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பதே சரியென்று கருதுகின்றேன். குயிற் கூட்டின் மேலால் ஒரு பறப்பு என்பது பறப்பு பற்றியதொரு பொதுவான கருத்தாகக் கருதப்படும். ஆனால் குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பது குயிற் கூட்டின் மேலால் பறந்த ஒன்று என்பது பற்றியது என்னும் கருத்தினைத்தருவதால் அதுவே பொருத்தமாக எனக்குத் தென்படுகிறது. இதுவே திரைக்கதைக்கும் பொருந்துகிறது. திரைப்படத்தில் அவ்விதம் குயிற்கூட்டின் மேலாகப் பறந்த ஒருவராக ஜாக் நிக்கல்சன் வருகின்றார்.

Continue Reading →

வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) கவிதைகளிரண்டு!

வேதா. இலங்காதிலகம்

1. மனிதர் மனிதராக இல்லை..

மனிதசாதி – மனுக்குலம் இன்று
மனிதம் மறந்து மனிதமிழந்து
மனித மிருகமாகின்றதே.
புனிதரெனப் பகட்டாக இவர்
புனைய ஓர் ஆடையெதற்கு!
மனிதர் மிருகவேட்டை யாடுவார்,
மனிதர் தலைகுனிவா யின்று
மனித வேட்டையாடுகிறாரே ஏன்!

Continue Reading →

அவுஸ்திரேலியா மெல்பனில் மறைந்த மூத்த படைப்பாளிகள் எஸ்.பொ. – காவலூர் ராஜதுரை நினைவரங்கு!

காவலூர் ராஜதுரை1_es_po5.jpg - 3.96 Kbவுஸ்திரேலியா – சிட்னியில்  அண்மையில்  அடுத்தடுத்து  மறைந்த ஈழத்தின்  மூத்த  படைப்பாளிகளான  எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  காவலூர்  ராஜதுரை  ஆகியோரின்   படைப்பிலக்கிய மதிப்பீட்டு    நினைவரங்கு  எதிர்வரும்  20  ஆம்   திகதி (20-12-2014)  சனிக்கிழமை   மாலை  5   மணிக்கு  மெல்பனில்  Preston – Darebin Intercultural Centre இல்  நடைபெறும். கலை,   இலக்கிய  ஆர்வலரும்  சட்டத்தரணியுமான  செல்வத்துரை ரவீந்திரன்  தலைமையில்    நடைபெறவுள்ள   இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவுக்கு   வருகை   தந்துள்ள  ஈழத்தின்   மூத்த இலக்கியத்திறனாய்வாளரும்   இலங்கை   வானொலி   மற்றும்    The Island  , வீரகேசரி    முதலான  நாளிதழ்களின்  மூத்த ஊடகவியலாளருமான திரு. கே.எஸ்.சிவகுமாரன்,   கண்டி  அசோக்கா வித்தியாலய    ஸ்தாபகர்   நடராஜாவின்    துணைவியார்    இலக்கிய ஆர்வலர்   திருமதி  லலிதா  நடராஜா  ஆகியோர்  அமரர்கள் எஸ்.பொ. –  காவலூர்  ராஜதுரையின்  உருவப்படங்களுக்கு விளக்கேற்றி    நிகழ்ச்சிகளை   தொடக்கிவைப்பர். கலாநிதி    கௌஸல்யா   ஜெயேந்திராவின்    வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்    இந்நிகழ்ச்சியில்     சட்டத்தரணி   ரவீந்திரன் தலைமையுரை    நிகழ்த்துவார்.

Continue Reading →

தொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்டுக்களின் உறவு

1_sathiyaraj5.jpg - 17.60 Kbட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.

பொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்டுக்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: – இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு.  ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.

Continue Reading →

காற்றுவெளி சஞ்சிகையின் டிசம்பர் இதழ் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் முல்லை அமுதனால் மாதந்தோறும் வெளியிடப்படும் இணையச் சஞ்சிகையான ‘காற்றுவெளி’ சஞ்சிகையின் டிசம்பர் இதழ் வெளியாகியுள்ளது. கவிதைகள், கட்டுரைகள்,  தொடர் நாவல் ஆகிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள காற்றுவெளி…

Continue Reading →

இலங்கு நூல் செயல்வலர் -க.பஞ்சாங்கம்-9 : எடுத்துரைப்பு படிநிலைகள்

நாகரத்தினம் கிருஷ்ணாசிமூர் சாட்மன் ஓர் அமெரிக்க இலக்கியம் மற்றும் திரைப்பட விமர்ச்கர். வட அமெரிக்காவைச் சேர்ந்த மிக முக்கியமான எடுத்துரைப்பியல் நிபுணர். பேராசியரின் எடுத்துரைப்பு படிநிலைகளைப்பற்றிய இக்கட்டுரை, இந்த அமெரிக்கரின் உண்களை முன்வைத்து பேசுகிறது.

உள்ளுறை எழுத்தாளரும் – உள்ளுறை வாசகரும்

பொதுவாகவே எடுத்துரைப்பியல் என்றதும் அதனை இயக்கும் எதிரெதிர் துருவங்களாக செயல்படுவர்களில் ஒருவர் எழுத்தாளர் மற்றவர் வாசகர் என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த அத்தியாத்தில் பேராசிரியர் சாட்மன் முன்வைத்த கருத்தியத்தின் அடிப்படையில் வேறு சில உண்மைகளைத் தெரிவிக்கிறார். அதன்படி வெகுசன அறிவு நம்பிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்- வாசகர் என்கிற செயல்பாட்டாளர்களோடு வேறுசிலரும் எடுத்துரைப்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் மொத்தம் ஆறுபேர்:  படைப்பை அளிப்பவர்கள் மூவர், படைப்பைப் பெறுபவர்கள் மூவர். அளிப்பவர் அணியில் முதலாமவர் உண்மையான எழுத்தாளர், அடுத்து வருபவர்கள் அல்லது முதல் நபருக்குத் துணைநிற்பவர்கள் உள்ளுறை எழுத்தாளர், எடுத்துரைப்பாளர். பெறுபவர் அணியில்  முதலாமவர் உண்மையான வாசகர் அடுத்து இடம்பெறுபவர்கள் உள்ளுறை வாசகர், எடுத்துரைப்பைக் கேட்பவர்.

Continue Reading →

புத்தளம்: சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட்…

Continue Reading →

பேசாமொழி 26வது வெளியாகிவிட்டது…

பேசாமொழி 26வது வெளியாகிவிட்டது...இணையத்தில் படிக்க: http://pesaamoli.com/index_content_26.html  நண்பர்களே பேசாமொழி இணைய இதழின் 26வது இதழ் வெளியாகிவிட்டது. சென்ற இதழின் தொடர்ச்சியாக சில இயக்குனர்களின் நேர்காணல் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், நேர்காணல் எடுக்க வேண்டிய இயக்குனர்கள் பலர் பட வேலையாக இருப்பதால் இயலாமல் போய்விட்டது. இந்த இதழில் இயக்குனர் சீனு ராமசாமியின் நேர்காணல் மட்டும் வெளியாகியுள்ளது. இதனை தவிர, சாரு நிவேதிதாவின் லத்தீன் அமெரிக்க சினிமா, யமுனா ராஜேந்திரனின் சத்யஜித் ரே பற்றிய கட்டுரையும், ஜான் பெர்ஜரின் காணும் முறைகள் (தமிழில்: யுகந்தர்) கட்டுரையும் நண்பர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய கட்டுரைகள்.

Continue Reading →

அமரர் எஸ். அகஸ்தியர் நினைவுச்சிறுகதை: எவளுக்கும் தாயாக…..

அமரர் எஸ். அகஸ்தியர்[ பிரபல முற்போக்கு எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியரின் 19 ஆவது ஆண்டு நினைவையொட்டி –  08.12.2014 – அவரது ‘எவளுக்கும் தாயாக’ என்ற நூலிலிருந்து இச்சிறுகதை பிரசுரமாகிறது. – பதிவுகள்-] 

நக நுனி சாடை, பிறை நிலா, ஒரு வெண் கீறு பாவி, மேக வெளி நாடி மின்வரி போட, செக்கல் கருகி இருள் அடர்ந்து கவிகிறது. பூமி முற்றாக மயான கோலம். அதிர் வேட்டுக்கள் வானமடங்க வெடித்து, நிலமதிரச் சிதறி, அவன் மனக்கண்ணுள் மின்னித் தெரிகின்றன.  கைம்பெண் போல் தன்னை அவள் காட்டிக் கொள்வதில்லை. புருஷன் சம்பளம் பென்சனாக வருகிறது. ஒரே ஆண்பிள்ளை. இரண்டு இளங் குமர்கள். பிள்ளைகள் மூவரும் சதா படிப்பில் மூழ்கியபடி.  பிள்ளைகளுக்கான படிப்புச் செலவுக்கே ‘பென்சன்’ போதாது. ஆக, அவள் மாடு, ஆடு, கோழி, கன்று, காலி, சீட்டு, சித்தாயம் என்றெல்லாம் மாய்ந்தாள்.   எதுக்கும் ஈடு கொடுக்கிற வலிச்சல் தேகம்.

‘தம்பியை எப்பிடியும் நல்லாப் படிப்பிச்சு ஒரு கரை காணவேணும்’ என்ற ஆசை, நாளாக அவளை எலும்பாக்கியது. ‘எலும்புருக்கியாக்கும்’ என்று நடைமருந்து பாவிக்கிறாள். ‘உவ்வளவு கஷ்டத்துக்க பெட்டையளைப் படிப்பிக்க வேணுமேர் பொடியனைப் படிப்பிச்சு ஆளாக்கினால் அவன் உன்னையும் தங்கச்சிமாரையும் பாக்கமாட்டானோ?’ என்று அயலட்டை சிலேடையாகச் சொல்லும். அசட்டை பண்ணி விடுவாள்.

Continue Reading →

சிறுகதை: உறவுகள் தொடர்கதை

குரு அரவிந்தன் அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் தங்கியிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி என்றால் சாவகச்சேரி வரைக்கும் அம்மா நடந்துதான் போயிருப்பாளா? விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த போது தான் அம்மா காணாமல் போயிருந்தாள். உறவுகளைப் பிரிந்து திக்குத் திக்காய் எல்லோரும் ஓடிப்போயிருந்தனர். தெரிந்த இடமெல்லாம் அம்மாவைத் தேடிப் பார்க்கச் சொல்லியிருந்தேன். யாராவது வயது போன பெண்கள் அனாதையாக இறந்து போயிருந்தால் கூட அவர்களைப் பற்றி எல்லாம் விசாரித்திருந்தேன். கனடாவில் இருந்து கொண்டு பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் எனது நாட்டில் அம்மாவைத் தேடுவதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.

அப்போதிருந்த நாட்டுச் சூழ்நிலை காரணமாக என்னால் அங்கு செல்ல முடியாமல் இருந்தது. தேவையில்லாத பிரச்சனைக்குள் ஒருமுறை மாட்டித் தப்பிவந்த எனக்கு அம்மாவைத் தேடி அங்கு செல்லவே பயமாயிருந்தது. எந்தவித நல்ல தகவலும் அம்மாவைப் பற்றி இதுவரை கிடைக்கவில்லை. அம்மா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது தான் இப்போதய எனது எதிர்பார்ப்பாகவும், துடிப்பாகவும் இருந்தது. அம்மா கடைசியாகப் போட்ட கடிதத்தில் கூட தன்னைப் பற்றிச் சொல்லாமல், ‘ராசா, பிரச்சனைகளுக்குள் அகப்படாமல், கவனமாய் இருராசா’ என்று என்னைப் பற்றித்தான் விசாரித்திருந்தாள். கடந்த காலத்தை நினைத்தபோது, எதுவும் நடக்கலாம் என்ற அம்மாவின் பயம் நியாயமானதாகவே இருந்தது.

Continue Reading →