வந்துகொண்டேயிருக்கிறது [நவீன] விருட்சம்!

அழகியசிங்கர்லதா ராமகிருஷ்ணன்மீண்டும் வருகிறது கணையாழி என்ற கட்டுரையைப் படித்தவுடன் ஏற்பட்ட மனநிறைவோடு தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக நண்பர் அழகியசிங்கர் – கவிஞர், சிறுகதையாசிரியர், விருட்சம் வெளியீடு பதிப்பாளர் – இலக்கியம் மீதுள்ள ஆர்வம் காரணமாய் வெளியிட்டுவரும் நவீன விருட்சம் (காலாண்டுச்) சிற்றிதழ் பற்றிய நினைவும் தவிர்க்க முடியாமல் வரவானது. அசோகமித்திரன், க.நா.சு, ஐராவதம், காசியபன், நகுலன், கோபிகிருஷ்ணன், ஸ்டெல்லா ப்ரூஸ் முதல் இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை பலருடைய எழுத்தாக்கங்களையும் தாங்கி வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கியச் சிற்றிதழ் நவீன விருட்சம். ரா.ஸ்ரீனிவாசன், பெருந்தேவி, கிருஷாங்கினி, பிரம்மராஜன், வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், லாவண்யா, பாவண்ணன், ஜெயமோகன் என நவீன தமிழ்க்கவிஞர்கள்/படைப்பாளிகள் பலரும் விருட்சம் இதழ்களில் பங்களித்திருக்கிறார்கள். ரா.ஸ்ரீனிவாசன், என்.எம்.பதி போன்ற சிலருடைய தரமான படைப்பாக்கங்களை விருட்சம் இதழ்களில் மட்டுமே பரவலாகக் காணப்படுபவை. விருட்சம் இதழில் ஒரு சில எழுத்தாளர்களே விருட்சம் இதழ்களில் திரும்பத்திரும்ப இடம்பெறுகிறார்கள் என்று சிலர் குறைகூறுவதுண்டு. இது எல்லா இதழ்களுக்கும் பொதுவான ஒரு அம்சம் தான் என்று சொல்லமுடியும். இது குறித்து அழகியசிங்கரிடம் கேட்டபோது சிலர் நட்புக்காகவும், இலக்கிய ஆர்வம் காரணமாகவும் தொடர்ந்த ரீதியில் தம்முடைய எழுத்தாக்கங்களை அனுப்பித் தருகிறார்கள். அவற்றை வெளியிடுகிறேன். சிலரால் தொடர்ந்த ரீதியில் படைப்புகளைத் தர முடிவதில்லை. சிலர் விருட்சத்திற்குப் படைப்புகளைத் தர ஆர்வங்காட்டுவதில்லை. என்னைப் பொறுத்தவரை தரமான படைப்புகள் யாருடையதாக இருந்தாலும் நான் வெளியிட்டுவந்திருக்கிறேன். நீங்களும் படைப்புகளைத் தொடர்ந்து அனுப்பிவையுங்கள் நான் வெளியிடுகிறேன்” என்றார். எனக்குத் தான் தொடர்ந்த ரீதியில் அனுப்பிவைக்க இயலவில்லை.

Continue Reading →