பேரறிஞர் சிவத்தம்பி அவர்கட்கு எமது அஞ்சலிகள்… …!

பேராசிரியர் கா. சிவத்தம்பிபண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியவர்.   
ஊடகம், கலை, இலக்கணம், பண்பாடு சார்ந்து பேராசிரியர் சிவத்தம்பி வெளிப்படுத்திய பார்வைகள் புதிய வளங்கள் கொண்டவை. தமிழியல் ஆய்வுக்குரிய அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டவை.  இன்று எம் தமிழர் மத்தியில் வாழ்ந்தவர்களுள் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவத்தம்பி.  தமிழியல் ஆய்வுச் செல்நெறியில் அவர் விட்டுச்சென்ற தடங்கள் ஆழமும் விரிவும் மிக்கவை.

Continue Reading →