சிறு குறிப்பு: ‘டொராண்டோ’வில் எழுத்தாளர் ‘கடலோடி’ நரசய்யாவுடனொரு சந்திப்பு!

நரசய்யாதமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஆதரவில் இன்று , நவம்பர் 5, 2011, ‘டொராண்டோ’ வில் எழுத்தாளர் நரசய்யாவுடனொரு சந்திப்பு நடைபெற்றது. நான் சென்றபோது கூட்டம் தொடங்கிவிட்டது. நரசய்யா ஆரம்பகாலக் கடற்படைப் பொறியியலாளராகப் பணியாற்றிய தனது அனுபவத்தையும், ஆனந்தவிகடனுக்குக் கதைகள் எழுதிய அனுபவத்தையும் விபரித்துக்கொன்டிருந்தார். தனது முதற் சிறுகதையே விகடனில் முத்திரைக் கதையாக வெளிவந்த அனுபவத்தையும் நினைவு கூர்ந்தார். – சுற்றிவரப் பார்த்தேன். எழுத்தாளர்களான என்.கே.மகாலிங்கம், அ.முத்துலிங்கம், செழியன், டானியல் ஜீவா, க.நவம், திருமாவளவன், சுமதி ரூபன், ‘காலம்’ செல்வம் எனப் பலர் சமூகமளித்திருந்தனர். – முனைவர் செல்வா கனகநாயகம் அவர்களின் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

Continue Reading →

கனடா: காலம் இதழின் ஆதரவில் ஊடறு & விடியல் வெளியீடாக ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ – போராடிய பெண்களின் எழுத்துகள்’ – கவிதை நூல் வெளியீடு!

இடம்: Mid Scarborough Community centre, 2467 Eglinton Av, Scarborough; காலம்: 13 November 2011; 4.30 – 8.30 PM

Continue Reading →