சிறுகதை: யாரொடு நோவோம்?

“வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார்.

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -இதை அவர் நூறாவது தடவையாகச் சொல்கிறார் என்று சொல்லலாம். அம்மா அதற்குக் காது கொடுத்தமாதிரித் தெரியவில்லை. சுவரோடு சாய்ந்திருந்த என்னிடம் “எழும்படி…போ!… அடுப்பை மூட்டு!” என்றாள். தம்பி அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பால்மா கரைப்பதற்குச் சுடுத்தண்ணீர் தேவை. அதற்காகத்தான் அடுப்பை மூட்டச் சொன்னாள். நான் எவ்வளவு முயன்றும் அடுப்பு மூளாது புகைந்து கொண்டிருந்தது. அம்மா என் காதை பிடித்துத் திருகி இழுத்தாள். “இஞ்சாலை விட்டிட்டுப் போ!.. ஏழு வயசாகுது இன்னும் அடுப்படி வேலை செய்யத் தெரியாது!” எனத் திட்டினாள். பிறகு தானே அடுப்பை மூட்டப் போனாள். ஷெல் அடிச்சத்தம் கேட்க, விறாந்தையில் இருந்த தம்பி வீரிட்டுக் குளறினான். அம்மா விறாந்தைக்கு ஓடினாள். இரவு முழுவதும் யாரும் உறங்கவில்லை. ஆமி மூவ் பண்ணி வருகிறதாம் சனங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் ஆரவாரம் ரோட்டில். குண்டுச்சத்தங்கள்.. அப்பா ரோட்டுக்கு ஓடுவதும் வீட்டுக்கு வருவதுமாக ஒரு நிலையின்றித் தவித்துக்கொண்டிருந்தார். “எல்லாச் சனங்களும் வெளிக்கிட்டிட்டுதுகள். நாங்கள் மட்டும் இருக்கிறம்…. வெளிக்கிடுங்கோ போவம்!” என அடிக்கடி சொன்னார்.

Continue Reading →

மெல்பனில் சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சி

மெல்பனில் சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சி அவுஸ்திரேலியா  தமிழ்   இலக்கிய    கலைச்சங்கம்    கடந்த   சில மாதங்களாக  இலக்கியத்துறையில்   அனுபவப்பகிர்வு     நிகழ்ச்சிகளை  நடத்தி  வருகிறது. அதன்    தொடர்ச்சியாக    இந்நாட்டில்  குடியேறிய   ஏனைய  இனத்தவர்களின்   வாழ்வு     அனுபவம்   தொடர்பான சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியையும்   எதிர்வரும் 16-08-2014   திகதி   சங்கம்   நடத்தவிருக்கிறது.  அவுஸ்திரேலியா    ஒரு  குடியேற்ற நாடாகவும்     பல்தேசிய கலாசார நாடாகவும்    விளங்குகின்றமையினால்    ஏனைய   இனத்தவர்களின் வாழ்வனுபவங்களையும்     தெரிந்துகொள்ளும்வகையில்     இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நாட்டில்   வதியும்   தமிழ்ப்படைப்பாளிகள் –    கலைஞர்கள்   பிற இனத்தவர்களின்    வாழ்வு    அனுபவங்களை    நேரடி  உரையாடல்களின் மூலம்    தெரிந்துகொள்வதன்    ஊடாக    தமது   படைப்பு    இலக்கியம்     மற்றும்    கலைத்துறைகள்   தொடர்பான    சிந்தனைகளையும்    பார்வையையும்     மேலும்    விரிவுபடுத்திக்கொள்ள முடியும். முதற்கட்டமாக  இலங்கையர்    மற்றும்   தென் ஆசிய நாட்டைசேர்ந்த     பல்தேசிய    இனத்தவர்களும்   பங்கேற்கும்   வகையில் வடிவமைக்கப்படவுள்ள    இந்த    சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியில்  கலந்துகொள்ளவும்   பார்வையாளராகவும்    பங்கு   பற்றுவோராகவும்  கலந்து கொள்ளவும்    வருமாறு    அவுஸ்திரேலியா     தமிழ்   இலக்கிய   கலைச்சங்கம்  அனைவரையும்   அன்புடன்    அழைக்கின்றது. மேலும் இந்த நிகழ்வில்   சிறந்த  கதை  சொல்பவருக்கு   $ 50     வெள்ளி    பரிசும்   காத்திருக்கிறது.    

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: தனது தொப்புள்கொடி நாவல் வெளியீட்டு நிகழ்வைக்காணமலேயே தொப்புள்கொடி உறவைத்தேடிச்சென்ற படைப்பாளி நித்தியகீர்த்தி!

திரும்பிப்பார்க்கின்றேன்: தனது தொப்புள்கொடி நாவல் வெளியீட்டு நிகழ்வைக்காணமலேயே தொப்புள்கொடி உறவைத்தேடிச்சென்ற படைப்பாளி நித்தியகீர்த்தி! முருகபூபதிஅவுஸ்திரேலியாவில்    இலக்கியத்துறையில்  ஈடுபாடுள்ள எழுத்தாளர்களையும்   கலைஞர்களையும்   ஊடகவியலாளர்களையும் தனிப்பட்ட  விருப்பு வெறுப்புகளுக்கு  அப்பால்  வருடாந்தம்  ஒன்று கூடச்செய்யும்   தமிழ்  எழுத்தாளர்  விழாவை  2001  ஆம்  ஆண்டு  மெல்பனில்  நான்   ஒழுங்குசெய்து  அதற்கான   பூர்வாங்க  வேலைகளில்  ஈடுபட்டிருந்தபோது,    சிட்னியிலிருந்து  நண்பர்    கலாமணி    ( தற்பொழுது    யாழ்ப்பாணத்திலிருந்து   ஜீவநதி   மாத  இதழை  வெளியிடும்  அதன்  ஆசிரியர்   பரணீதரனின்   தந்தையார்)     தமது  குடும்பத்தினருடன்   வந்து  எமதில்லத்தில்    தங்கியிருந்தார். கலாமணி    தமது   பூதத்தம்பி    இசைநாடகத்தை   எழுத்தாளர் விழாவில்   மேடையேற்றுவதற்காகவும்  விழாவில்   நடந்த  இலக்கிய கருத்தரங்கில்  உரையாற்றுவதற்காகவும்   வருகைதந்திருந்தார். கலாமணி   தற்பொழுது  யாழ். பல்கலைக்கழகத்தில்   விரிவுரையாளராக  பணியிலிருக்கிறார். 2001 ஆம்  ஆண்டு  முதலாவது  எழுத்தாளர்  விழா  அழைப்பிதழ்களுக்கு   முகவரிகளை    எழுதி   முத்திரைகளை ஒட்டிக்கொண்டிருந்தபொழுது  ஒரு  தொலைபேசி  அழைப்பு  வந்தது. நண்பர்   கலாமணிதான்    எடுத்தார்.

Continue Reading →

சரித்திர நாவல் அறிமுகம்: பழைய வேதக் கோயில்!

எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம்.- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது. மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது. நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது. அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.

Continue Reading →

சிறுகதை: வழிப்பாதையின்…….

– சிவானந்த கக்கோட்டி, இந்திய  ஸ்டேட் வங்கியின் அதிகாரி. முக்யமான அஸ்ஸாமிய எழுத்தாளர். மறைந்து வரும் மனித விழுமியங்களையும் அதன் அக்கறையும் கிராம மக்களின் வாழ்வனுபவங்களோடு சொல்பவர். இவரின் கதைகள் . மூன்று சிறுகதைத் தொகுதிகளும், ஒரு நாடகமும் பதிப்பிததுள்ளார். 2000ம் ஆண்டில் மதிப்பிற்குரிய மும்மின் பர்கடகி விருதைப் பெற்றவர். –

சுப்ரபாரதிமணியன்நிலாவெளிச்ச முற்றத்தில் மெல்ல வினோதமான  மெளனம் விரைவாகப் பரவியது. முற்றத்தின் மத்தியில் வலது புறத்தில் பரவியிருந்த பாயின் கடைசிப் பகுதியிலிருந்து அய்டா மட்டும் பேசிக்கொண்டிருந்தான். பராமா, டெய்து ராஜன்,  பகுல், மைனா மற்ற  பக்கத்து வீட்டு சிறுவர்கள் அய்டாவை மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டியின் உதடுகளிலிருந்து இந்த நேரத்தில் கதைகள் கசிந்து கொண்டிருக்கும். இருட்டின கொஞ்ச நேரத்திற்குப்பிறகு விலாசமான முற்றத்தில் பெரும்பாலும் எல்லா  குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விடுவர்.  பராமா அவனின் மூத்த சகோதனுடன் கொஞ்சம் தாமதமாக வருவான். அவர்களின் தினசரி படிப்பு வேலைகள் முடிந்தபின் அவர்கள் வருவர். அவர்கள் வெகு ஆர்வத்துடன் வருவர். அவர்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளித்தான் இருந்தனர்.. அவள் அவர்களுடைய சொந்த பாட்டியல்ல. ஆனால் குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகள் பொதுவாக கடைபிடிக்கப்படும் குழுவைச் சேர்ந்தவள். அவர்கள் அவசரப்படுவதில்லை.அய்தா எப்போதும் பாராமாவுக்குக்காக மற்ற குழந்தைகளுக்காகவும் காத்திருப்பான். சில வருடங்களுக்கு முன்பு வரை பாராமா  பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டே இந்த முற்றத்தில் கதை கேட்டுக் கொண்டிருப்பான். வளர்ந்தபின்னும் கூட அவள் மடியிலேயே அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருப்பான்.  இந்த கதி பிகு திருவிழா நாளில் அவனுக்கு பனிரெண்டு வயது நிறைவடைந்தது பதிமூன்று வயது தொடங்கியது. அந்நாள் அம்மா பிராத்தனைகள் செய்து கடவுளுக்கு பிரசாதம் சமர்ப்பிப்பாள். அவன் வளர்ந்தாலும் அய்தாவின் கதைகள் தொடர்கின்றன.  அனைத்திற்கும் மேலாக, அவள் கதைக் களஞ்சியமாக இருந்தாள்.

Continue Reading →

கலை வழியே ஒரு கலகப் பயணம் – காசா மக்களுக்கு சமர்ப்பணம்…

தமிழ் ஸ்டுடியோ குறுந்திரையரங்கம் – ஆகஸ்ட் மாத படங்கள் பட்டியல்…  மனிதத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் திரையிடல்…

பேசாமொழி 18 வது இதழ் வெளிவந்துவிட்டது....நாள்: 01-08-2014 முதல் 29-08-2014 வரை, தினமும் மாலை 7.00 மணிக்கு, தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில். தொடர்புக்கு: 9840698236

நண்பர்களே, தொடர்ச்சியாக இன அழிப்பும், இன துவஷமும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நிலவியல் கூறுகள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கிடையேயான இன துவேஷம் எல்லா இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு போருக்கும் பின்னும், இன அழிப்பிற்கும் பின்னும் இருக்கும் நுட்பமான வல்லரசுகளின் அரசியலை நாம் சூழ்நிலைகேற்ப மறந்துவிடுகிறோம். மொழி, இனம், மதம், கலாச்சாரம், என எல்லாவற்றையும் தாண்டி, நம் போற்றவேண்டியதும், பாதுகாக்க வேண்டியதும் மனிதம். மனித மனதில் இருக்கும் கொஞ்சம் ஈரமும் காய்ந்துக்கொண்டே இருக்கிறது. சக மனிதன் மீது, பரிவு ஏற்படாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் சக மனிதன் மீது நமக்கு காழ்ப்புணர்வும், குரோதமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் மனிதத்தை வலியுறுத்த வேண்டியது படைப்புகளின் கடமை. காசாவில் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான இன அழிப்பை எதிர்க்கும் விதமாகவும், காசாவில் வசிக்கும் ஒவ்வோவருக்குமான ஆதரவை தெரிவிக்கும் பொருட்டும், தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரையரங்கத்தில் இந்த மாதம் முழுவதும் மனிதத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படவிருக்கிறது.

Continue Reading →

மாயா ஏஞ்சலோ கவிதைகள் / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

மாயா ஏஞ்சலோ (1928 – 2014)

1_maya_angelou5.jpg - 5.97 Kb1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர். தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.

Continue Reading →