சௌந்தர மகாதேவன் கவிதைகள் சில!

1. மரப்பாச்சி

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்தங்கக்கடைகளிலும் குழந்தைகள்
விரும்புவது வண்ணமயமான பலூன்களைத்தான்.
பொருட்காட்சி மைதானத்தில் சின்னவனுக்கு
சோட்டாபீம் பொம்மை பிடித்துப்போனது.
பெரியவனுக்கு அத்தனை
வெளிநாட்டுக்கார்ப்பெயர்களும் அத்துப்படி
நிசான் வாங்கவேண்டுமென்றான்
நிசமாக ஓர் நாளேன்றான்.
குழந்தைகள் விளையாடவென்று
முன்பே அம்மா சேர்த்துவைத்த
மரப்பாச்சியும் செப்புச்சாமான்களும்
சாக்குக்குள் விளையாடிக்கொண்டிருக்கின்றன
ஒன்றோடொன்று.

Continue Reading →

அகஸ்தியரின் பார்வை: கலை இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும்!

– பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 88வது (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய இக்கட்டுரை பிரசுரமாகின்றது… –       

அமரர் அகஸ்தியர்கிராமியப் பாடல், நாட்டுக் கூத்து , இசை, நடனம், கவிதை, நாடகம், சினிமா, இசைக்கருவி என்னுங் கலை வடிவங்கள் விஞ்ஞானம், வரலாறு, மனித உழைப்பு, ஆய்வு, விமர்சனம், பகுப்பாய்வு ஆகிய வகைப்படுத்தலால் சிறப்படைகின்றன. எல்லயற்ற ஆய்வுக்கு மனிதனால் அனைத்தும் உட்படும்போது உன்னதமடைகின்றன. கலை இலக்கிய உலகில் இந்த உன்னதமும் ஓர் எல்லையற்றிருக்கிறது.  பூமி, சந்திரன், சூரியன், வெள்ளி ஆகிய சகல கோளங்களும் சுழற்சி ஓசையினூடு லய பாவத்துடன் சுருதி கலந்து இயங்குவதுபோலவே, ஒலி, ஒளி, காற்று என்பனவும் லய சுருதியோடு இயங்குகின்றன. ஜடப்பொருட்களின் இயக்கத்தில் மாத்திரமின்றி , சகல உயிரினங்களின் இயக்க முறைமைகளும் நாடித்துடிப்புகளும் அவ்வாறே பிசகின்றி இயல்பாகவே இவ்வாறு சுருதி லயப் பிசகின்றி இயங்குவதாலேயே அனைத்தும் எதிலும் துவைச்சல் பெருக்கெடுத்துக் குமுறுகிறது. கடல் வடுப் பெயர்ந்து அடங்கிக் குமுறுகிறது. அடங்கி, எழுந்து, சீறி, உயர்ந்து, தாழ்ந்து, சமமாகும் தன்மை ஜடப்பொருட்களிலும் லய பாவத்தோடு நிகழ்கின்றன.

Continue Reading →