பயணியின் பார்வையில் – 05

முருகபூபதி-அற்றைத்திங்கள்  அவ்வெண்ணிலவில்
அலையோர   வெண்மணலில்
நாம்  பதித்த  கால்   தடங்கள்
இல்லாத   இடங்கள்  இல்லை

விஜயலட்சுமி சேகர் நெய்தலில் கடலின் நடுவே போர்ட் சிட்டி – குறிஞ்சியில் மலையடிவாரத்தில் லயன் சிட்டி கடல் மட்டும்  மாறிவிடாத   காலிமுகம் \கடலும்    கடல்  சார்ந்த  பிரதேசமும்    நெய்தல்  என்று   சங்க இலக்கியம்     கூறுகின்றது.    இலங்கையில்     ஐந்து            திணைகளும் ( குறிஞ்சி,   நெய்தல்,   மருதம்,  முல்லை,  பாலை )    இருக்கின்றனவா…? என்று   ஆராய்ந்தால்  பாலை    ( எதுவும்  பயிரிட  முடியாத  நிலம் ) இல்லையா    என்று    நாம்  யோசிப்போம்.  . ஆறாம்    திணை    நவீன    தமிழ்  இலக்கியத்தில்   பிறந்துள்ளது. நான்   பிறந்த  நீர்கொழும்பும்  இலங்கைத்தலைநகரும்  நெய்தல் நிலப்பிரதேசங்கள்.   எங்கள்  ஊரில்  கடலின்  ஓயாத அலையோசையை   கேட்டவாறே  பிறந்து –  தவழ்ந்து –  வளர்ந்து வாழ்ந்தமையினால்  கடலின்    மீது   தீராத  காதல். ஆனால்   –  சுனாமி  கடற்கோள்  வந்தபொழுது  எனக்கு  கடல் மீது கடுமையான   வெறுப்பு  தோன்றியது.    அவ்வாறே   1978  இல் கிழக்கில் சூறாவளி  வந்தபொழுது  காற்றின்  மீது வெறுப்புத்தோன்றியது.    மலையகத்தில்  மண்  சரிவுகளும் வெள்ளப்பெருக்கும்   ஏற்படும்  வேளைகளில் தண்ணீர்  மீது  ஆத்திரம் வருகிறது.

Continue Reading →

ஓவியா பதிப்பக வெளியீடாக , எழுத்தாளர் முல்லை அமுதன் தொகுத்தளித்த ‘எழுத்தாளர் விபரத்திரட்டு’ தொகுப்பு நூல் தமிழகத்தில் வெளிவந்துள்ளது.

book_writers5.jpg - 16.36 Kbபுலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய ‘எழுத்தாளர் விபரத்திரட்டு’ தொகுப்பு நூல் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. ‘காற்றுவெளி’ இதழின் ஆசிரியரும், இலக்கியப்பூக்கள் தொகுதி ஒன்று, இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டுஆகிய இரு தொகுப்பு நூல்களின் தொகுப்பாசிரியரான எழுத்தாளர் முல்லை அமுதனே இத்தொகுப்பு நூலினைத் தொகுத்துள்ளவருமாவார்.

புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய முறையான , சரியான புரிதலுக்கு, அறிதலுக்கு இது போன்ற தொகுப்பு நூல்கள் முக்கிய ஆவணங்களாக விளங்கும் சிறப்பு மிக்கவை. இத்தொகுப்பு நூல்களைத் தனியொருவராகத் தொகுத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியிருக்கும் எழுத்தாளர் முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர்.

இத்தொகுப்பு நூல் மீள்பதிப்புகளாக வெளிவரவேண்டும். அவ்விதம் வெளிவரும்போது மேலும் மேலும் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.  இந்நூலினைப் பெற விரும்புவோர் ஓவியா பதிப்பகத்துடன் தொடர்புகொள்ளுங்கள். விபரங்கள் வருமாறு:

ஓவியா பதிப்பகம்
17-16-5 ஏ, கே.கே.நகர்,
வத்தலக்குண்டு – 624 202
திண்டுக்கல் மாவட்டம்.

Continue Reading →

‘காந்தளகம்’ வெளியீடாக இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டு வெளிவந்துள்ளது.

காந்தளகம் வெளியீடாக 916 பக்கங்களில் வெளிவந்துள்ளது இலக்கியப்பூக்கள் தொகுதி இரண்டு தொகுப்பு நூல். இத்தொகுப்பு நூலில் 56 ஈழத்து இலக்கிய ஆளுமைகள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே இலக்கியப்பூக்கள் தொகுதி ஒன்று தொகுப்பு நூலினைத் தொகுத்தளித்த எழுத்தாளர் முல்லை அமுதனே இந்நூலின் தொகுப்பாசிரியராகவுமிருக்கிறார். அமரர்களான ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் விபரங்களைத் தொகுத்து இரு தொகுப்புகளை வழங்கியுள்ள முல்லை அமுதன் பாராட்டுக்குரியவர். இவ்விரு தொகுப்பு நூல்களும் ஆவணச்சிறப்பு மிக்கவை. இந்நூலில் இடம் பெற்றுள்ள இலக்கிய ஆளுமைகளின் விபரங்களும், அவர்களைப்பற்றி எழுதியுள்ள கட்டுரையாசிரியர்கள் பற்றிய விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன. இந்நூலினை வாங்க விரும்புபவர்கள் காந்தளகம் பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு:

காந்தளகம்
4, முதல் மாடி, இரகிசா கட்டடம்,
68, அண்ணா சாலை, சென்னை – 600 002.

தொ.பே.: 0091 – 44 – 2841 4505
மின்னஞ்சல்:
tamilnool@tamilnool.com
மின்னம்பலம்: www.tamilnool.com

Continue Reading →