வாசிப்பும், யோசிப்பும் 106: கவிஞர் இந்திரனின் கவிதை கவிஞர் ஜெயபாலனின் பெயரில்….

வாசிப்பும், யோசிப்பும் 107: கவிஞர் இந்திரனின் கவிதை கவிஞர் ஜெயபாலனின் பெயரில்....பிரபல கலை , இலக்கிய விமர்சகரும் கவிஞருமான இந்திரன் அவர்கள் தனது முகநூல் குறிப்பில் தனது ‘மியூசியம்’ என்னும் கவிதையினை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதையாகக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டத்தினால் தேர்வு செய்யப்பட்டு, தொகுத்தளிக்கப்பட்ட ”In Our Translated World” என்னும் ஆங்கிலமொழிபெயர்ப்பில் வெளியான கவிதைத்தொகுப்பில் சேர்த்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இது பற்றி இதுவரையில் பலரிடம் முறையிட்டுள்ளதாகவும் ஆனால் பயன் எதுவுமில்லையென்றும் வருத்தப்பட்டிருக்கின்றார்.

இது பற்றிய குற்றச்சாட்டினை இப்பொழுதுதான் முதல் முதலாக நான் அறிகின்றேன். Ontario Trillium Foundation அமைப்பின் நிதி உதவியுடன் வெளியான நூலிது. இதில் இவ்விதம் தவறு ஏற்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. எவ்விதம் இவ்விதமானதொரு தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று சிந்தித்துப்பார்க்கிறேன். ஏன் இது பற்றி இதுவரையில் கவிஞர் ஜெயபாலன் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றொரு கேள்வியும் எழுகிறது.

இந்த நூலின் மீள்பதிப்பு விகடன் பதிப்பாகவும் வெளியாகியிருப்பதாகவும் இந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தப்பிரச்சினைக்குரிய சரியான தீர்வு இந்த ஆங்கில நூலினை மீண்டும் தவறினைத்திருத்தி, தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் வெளியிடுவதுதான். அத்துடன் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் பகிரங்கமாகவும் தனது தவறுக்காகவும், கவிஞர் இந்திரனுக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காகவும் வருத்தம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 105 : மேலும் சில முகநூல் குறிப்புகள்!

-*முகநூலில் அவ்வப்போது எழுதிய குறிப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றன. – வ.ந.கி. –

1. செர்கய் ஐஸன்ஸ்டினும் இலக்கியமும்.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

அண்மையில் சென்னை ஃப்லிம் சொஸட்டி / சவுத் ஏசியன் புக்ஸ் இணைந்து வெளியிட்ட நூலான திரைப்பட மேதை செர்கய் ஐஸன்ஸ்டின்’ நூலினை வாசித்தேன். சிஸன்ஸ்டினின் கட்டுரைகள் சிலவற்றை (எழுத்தாளர் நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பில்) உள்ளடக்கிய நூலிது. நூலுக்கு ‘அமரக் கலைஞன் ஐஸன்ஸ்டின்’ என்றொரு அணிந்துரையினை கே.ஹரிகரன் எழுதியிருக்கின்றார். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அதற்கொப்ப அமைந்துள்ள நூலிது. நூல் சிறியதானாலும் கூறும் பொருளில் பெரியது , சிறந்தது என்பேன்.

இத்தொகுதியிலுள்ள ஐஸன்ஸ்டினின் கட்டுரைகள் வருமாறு:

1. ஐஸன்ஸ்டினின் முன்னுரை
2. நான் இயக்குநர் ஆனது எப்படி?
3. வண்ணம் திரைக்கு வந்த கதை
4. தொழிலாளர் – திரைப்படங்களைத் தயாரிப்பது எப்படி?
5. இலக்கியத்திலிருந்து சில பாடங்கள்.
6. பொட்டம்கின் படக்கட்டமைப்பின் ஒருங்கிணைவும் உணர்வெழுச்சியும்

Continue Reading →

கவிதை: காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (2)அதிகாரம் 110: குறிப்பு அறிதல்.

- பிச்சினிக்காடு இளங்கோ பாவைக்கு இரண்டுபார்வை’

இந்தப்பாவையின் கண்களுக்கு
இரண்டு பார்வை

ஒரு பார்வை
காதலினால் உயிர்குடிக்கும்
நோய் பார்வை

மறுபார்வை
அதுதீர்த்து
உயிர்தளிர்க்கும் மருந்துபார்வை

கணநெரமே கண்களிடை
பார்வை பண்டமாற்றம்
ஆனால்
அதன்
ஆழமும் பொருளும்
அளவற்றவை

Continue Reading →

கவிதை: நாள் தூரமில்லை!

கவிதை வாசிப்போம் வாருங்கள்1

 பெருகிவரும் மக்கள்தொகை பீதியூட்ட, தேவைகளும்
  பெருக்கெடுக்கும் காலமொன்று பேதலிப்பை ஏற்படுத்த
எரிசக்தி நீர்வளங்கள் நிலவளங்கள் பற்றாக்குறை
  ஏற்படுத்தப் போகின்ற எதிர்கால விபரீதம்
உருகிவரும் பனிமலைகள் ஒழுகிடவே ,கடல்மட்டம்
  உயர்வடைந்து நிலம்குறைந்து மழைவெள்ளம், இடிமின்னல்
ஒருபோதும் இல்லாத வகையினிலே பயங்கரமாய்
  உலகத்தை ஆட்டிவைக்கும் நிலைவரும்நாள் தூரமில்லை.

Continue Reading →

க.பிரகாஷ் கவிதைகள்!

1. புனல் வாதம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!கவிதை எழுத தெரிந்த எனக்கு
அதை வெளியிடத் தெரியவில்லை
இதுவரை எழுதிய எனது கவிதையை
வைகை ஆற்றில் – காகிதக் 
கப்பலாக ஓடவிட்டேன்

தன்னைச் சுடும்
கரையில்லாக் கடல்
இவ்வுலகுக்குப் பாழ்
கறையுள்ள மனித மனம்
மனிதகுலத்துக்கே பாழ்

மனமில்லை
மல்லிகைக்கு – நல்ல
மனமுண்டு – அதை
நுகரும் மனிதனுக்கோ
மனமும் இல்லை
மானமும் இல்லை

Continue Reading →

அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

சென்ற வெள்ளிக்கிழமை யூலை மாதம் 24 ஆம் திகதி 2015 அன்று செல்வி அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கனடா  றிச்மன்ஹில் சென்ரர் அரங்கில்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைமன்றத்தின் அதிபர் நர்த்தன நாயகி, மானித மாதங்கி ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் மாணவியான செல்வி அபர்னாவின் அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினர்களாக எழுத்தாளர் திரு குரு அரவிந்தன், திருமதி மாலினி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி. பூங்கோதை பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். சுதர்சன் துரையப்பா அவர்கள் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.சென்ற வெள்ளிக்கிழமை யூலை மாதம் 24 ஆம் திகதி 2015 அன்று செல்வி அபர்னா செல்வராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கனடா  றிச்மன்ஹில் சென்ரர் அரங்கில்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைமன்றத்தின் அதிபர் நர்த்தன நாயகி, மானித மாதங்கி ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு அவர்களின் மாணவியான செல்வி அபர்னாவின் அரங்கேற்றத்தில் பிரதம விருந்தினர்களாக எழுத்தாளர் திரு குரு அரவிந்தன், திருமதி மாலினி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருமதி. பூங்கோதை பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். சுதர்சன் துரையப்பா அவர்கள் அரங்கேற்ற நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.

இந்த அரங்கேற்ற நிகழ்வின் இசைக் கலைஞர்களாக ஸ்ரீமதி நிரஞ்சனா சந்துரு, கார்த்திகேயன் இராமநாதன், கல்யாணி சுதர்சன் ஆகியோருடன் இளம் கலைஞர்களான ஐஸ்வரியா சந்துரு, அனுஷன் மோகனராஜ், அபிநயா சந்துரு ஆகியோர் மிகவும் சிறப்பாக இசை வழங்கினர். முக்கியமாகத் தெலுங்குக் கீர்த்தனங்களில் மட்டும் தங்கியிராமல், பார்வையாளர்களால் புரிந்து கொள்ளக்கூடிய மொழியான தமிழ் மொழிப் பாடல்களையும் தெரிவு செய்து தமிழ் மொழியை இந்த மண்ணில் தக்கவைக்க அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டப்பட வேண்டும்.  ‘அன்னமே அருகில்வா அந்தரங்கம் ஒன்று சொல்வேன்,’ ‘விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன்’ போன்ற பாடல்கள் இடம் பெற்ற போது புரிந்த மொழியாகையால் அபர்னாவின் ஒவ்வொரு அசைவும் பார்வையாளர்களின் கரவொலி மூலம் பாராட்டுப் பெற்றது குறிப்பிடத் தக்கது.

Continue Reading →