வாசிப்பும், யோசிப்பும் 161 : நவகாலத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இணைய இதழ்கள்!

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!நவகாலத்தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் முனைவர்கள் பலர் தமக்குக் கிடைக்கும் நூல்களை மையமாக வைத்தே பெரும்பாலும் எழுதுவது வழக்கம். இதனால் நவகாலத்தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பினை அவர்கள் பலரின் எழுத்துகள் காட்டத்தவறிவிடுகின்றன. இணையத்தில் குறிப்பாக இணைய இதழ்களில் வெளியாகும் பல படைப்புகளை இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட முனைவர்கள் பலர் தவற விட்டு விடுகின்றார்கள்.  ஆனால், அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது.

முனைவர் நா.சுப்ரமணியன், முனைவர் இ.பாலசுந்தரம் போன்றவர்கள் கனடாத்தமிழ் இலக்கியம் பற்றிய தமது கட்டுரைகளுக்கு ‘பதிவுகள்’ போன்ற இணைய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை, படைப்புகளை மையமாக வைத்து ஆய்வினைச்செய்திருப்பது அவதானிப்புக்குரியது. இணைய இதழ்களின் இலக்கியப்பங்களிப்பினை இவர்கள் புரிந்து கொண்டிருப்பது நல்லதொரு விடயம்.

அண்மைக்காலமாக இணைய இதழ்களில் வெளியாகிய பல்வகைப்படைப்புகள் நூலுருப்பெற்று வெளிவருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள் பல (நீலக்கடல் நாவல் உட்பட) திண்ணை இணைய இதழில் வெளியாகிப்பின் நூலுருப்பெற்றவைதாம். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் இவரது இலக்கியக் கட்டுரைகள், பிரெஞ்சுப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியாகியுள்ளன. எழுத்தாளர் இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’ ‘திண்ணை’ இணைய இதழில் வெளியாகி நூலுருப்பெற்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் அவர்களின் அறிவியற் கட்டுரைகள் பல திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது இலக்கியப்படைப்புகள் பல திண்ணை இணைய இதழில் வெளியாகி நூலுருபெற்றுள்ளன. இவை தவிர நடேசன் (ஆஸ்திரேலியா) அவர்களின் ‘அசோகனின் வைத்தியசாலை’ ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகிப்பின்னர் நூலுருப்பெற்றதையும், அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவல் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றது என்பதையும் மறந்து விட முடியாது. மேலும் அண்மையில் வெளியான தமிழினியின் ‘போர்க்காலம்’ கவிதைத்தொகுதி ‘பதிவுகள்’ மற்றும் தமிழினியின் முகநூல் பக்கம் ஆகியவற்றில் வெளியாகிப்பின்னர் நூலாக வெளிவந்ததும் கவனத்திற்கொள்ள வேண்டியதொன்று.

Continue Reading →

மெய்யியல் கற்றல் கற்பித்தல் பாகம் 6.

லுட்விக் விற்கிஸ்ரைன்ற்- ஆதவன் கதிரேசர்பிள்ளை (பிரான்சு) -சிலபோதுகளில் ஏன் மெய்யியலைக் கற்கவேணும் இதனால் என்ன பயன் என்கிற கேள்விகளைப் பலர் கேட்பர். மெய்யிலுக்கான பயன்பாடு என்ன? தத்துவத்தால் என்ன பயன்..? பயன்பாட்டு வாதம் ஒரு புறமிருக்கட்டும்.

லுட்விக் விற்கிஸ்ரைன்ற் எனும் மொழியியல் மெய்யியலாளரிடம் போகலாம். அவர் சொன்னார்- ஒரு போத்தலுக்குள் ஒரு ஈ அகப்பட்டுவிட்டது அந்த ஈ ஐ எவ்வாறு விடுவிக்கலாம்- இதுவே மெய்யியல். எல்லோரும் அகப்பட்டுவிட்ட ஈ ஆ மெய்யியல்?

அவர் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மெய்யிலாளர் என்பது என் கணிப்பு. பாரிய பிரச்சினைகளை அவர் தீர்த்தார்.

1) தனியன் ஒன்றைச் சுட்டும் பொழுது அது வெறுமனே தனியனைச் சுட்டுகிறதா.? அல்லது பொதுவைச் சுட்டுகிறதா..? உதாரணமாக – மரம் – எனும் தனியனை நாம் சுட்டும் பொழுது.. அந்த மரம் இந்த மரம் எனச் சொல்கிறோம். ஆனால் –மரம்- என்பது எதைச் சுட்டுகிறது ? பொதுக் கருத்து என்பது என்ன..? பொதுவிலே ஒரு கருத்து இருக்கமுடியுமா..? -அழகு- என்பது தனிச்சொல்லா..? பொதுச் சொல்லா..?

இப்படியாகப் பல கேள்விகளை அவர் கேட்டார். ஈற்றில் சொல்= அர்த்தம்= பயன்பாடு என்கிற சமன்பாட்டை நிறுவினார்.

இவருக்கு முன்னோர்கள் சொல்=அர்த்தம் என்பதுடன் நின்றுவிட்டனர். இவரே உலகிற்கு முதன்முதலில் சொன்னார் சொல்லுக்கு அர்த்தம் மட்டுமில்லை அதற்கொரு பயன்பாடும் இருக்கிறதென்று.

-கூப்பிடுதொலை- இந்தச் சொல்லின் அளவீடு என்ன..? எத்தனை மீற்றர்.

Continue Reading →