அஞ்சலி: கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் !

கலாபூஷணம்  பீ.எம்.புன்னியாமீன்இலங்கையின்  பிரபல  எழுத்தாளரும்  கல்வியாளருமான  கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்  (10.03.2016 ) வியாழக்கிழமை  கண்டியில்  காலமானார். கடந்த  ஆண்டிறுதியில்  புனித உம்ராஹ்  கடமையை  நிறைவேற்றுவதற்காக  ஹஜ்  யாத்திரையை,  துணைவியார்  மஸீதா புன்னியாமீனுடன்  மேற்கொண்டிருந்த  இவர்,  புனிதக்கடமையை நிறைவுசெய்தபின்  நாடு  திரும்பும்  வேளையில்  29.12.2015    அன்று  திடீர் சுகவீனம்  காரணமாக  விமானத்திலிருந்து  இறக்கப்பட்டு  துபாய்  ராஷீட் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரு  மாத  தீவிர  சிகிச்சைகளின்  பின்னர்  29.1.2016   அன்று   இலங்கை திரும்பிய  அவர்,  மேலதிக  வைத்தியத்துக்காக  மீண்டும்  பல்லேகல ஆயுர்வேத   வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு  நோயினால்  நீண்டகாலம்  பாதிக்கப்பட்டிருந்த  புன்னியாமீன், அதன்  தீவிர  பாதிப்பினால்  இறுதியில்  தாயக  மண்ணிலேயே எம்மை  விட்டுப்  பிரிந்தமை  அவரது  சுற்றுவட்டத்தினரை  கடும் துயரில்  ஆழ்த்தியுள்ளது.

ஆசிரியராகவும்,  சிறுகதை  எழுத்தாளராகவும், நூல்வெளியீட்டாளராகவும்,   ஊடகவியலாளராகவும்  பல்வேறு பரிமாணங்களிலும்  அறியப்பெற்ற  பீர்முகம்மது  புன்னியாமீன் 11.11.1960   இல் பிறந்தவர்.  கண்டி  மாவட்டத்தின்  கட்டுகஸ்தொட்ட பிரசேத்தில்  உள்ள  உடத்தலவின்ன  என்ற  சிற்றூரில்  பிறந்து, வளர்ந்து,   செழிப்புற  வாழ்ந்து  மறைந்தவர்.

அங்கு  அவர்  நிறுவிய  சிந்தனை வட்டம்  என்ற  அறிவுசார் நிறுவனத்தின்  மூலம்  பல  நூல்களை  எழுதியும்  பலரது  நூல்களை வெளியிட்டும்,  புலமைப்பரிசில்  பரீட்சை  சார்ந்த  பல  கல்விப் பணிகளையாற்றியும்  சிறப்புற்ற  அவர்,  உடத்தலவின்ன  என்ற சிற்றூரின்   பெயரை  உலகளாவிய ரீதியில்  பலரையும்  உச்சரிக்க வைத்ததுடன்,  ஈழத்து  இலக்கியத்  தோட்டத்திற்கு  மௌனமாகப் பொழிந்த  மாமழையாக  நின்று  பணியாற்றியவர்.

2004  முதல்  2009  வரை  இவர்  இலங்கை  முஸ்லிம்  எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின்  விபரத்தொகுப்பொன்றை கட்டுரைகளாக  எழுதித் தொகுத்து  15  தொகுதிகளில்  அவற்றை வெளியிட்டுவைத்திருக்கிறார்.   புகலிடப்  படைப்பாளிகளின்  வாழ்வும் பணிகளும் பற்றிய  தனியானதொரு  தொகுப்பை   வெளியிடும் நோக்கில்  லண்டன்  வந்திருந்த  புன்னியாமின்  ஒரு மாதம்  அளவில் எமதில்லத்தில்  தங்கியிருந்து  புகலிடப்  படைப்பாளிகளைச்  சந்தித்துத்  தகவல்  பெற்று  சிந்தனை  வட்டத்தின்  236 ஆவது  நூலாக அதனை  2006 இல்  வெளியிட்டிருந்தார்.

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்க மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்: “தமிழ்ச் சித்தர் இலக்கியம்”

நிகழ்ச்சி நிரல்பிரதம பேச்சாளர்  உரை:“தமிழ்ச் சித்தர் இலக்கியம்: ஒரு பார்வை” – முனைவர் மைதிலி தயாநிதி சிறப்புப் பேச்சாளர்கள் உரை:“தமிழ்ச் சித்தர் இலக்கியங்களை வகைப்படுத்தல் – ஒரு…

Continue Reading →

ஆய்வு: திருமுருகாற்றுப்படையில் சமயம் – பண்பாட்டியல் நோக்கு

 சு. குணேஸ்வரன் -அறிமுகம்
சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவமானவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னோடு சார்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வழிப்படுத்தும் பண்பினை ஆற்றுப்படை இலக்கியங்கள் கொண்டிருக்கின்றன. இக்காலத்தில் தோற்றம்பெற்ற ஆற்றுப்படை நூல்களாகிய பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியவற்றுக்கு கடவுள் வாழ்த்தாகக்  கொள்ளக்கூடியதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்திருக்கிறது.

ஆற்றுப்படை என்பது ‘ஆற்றுப்படுத்தல்’ எனப் பொருள்படும். ‘ஆறு’ என்பது வழி; ‘படுத்தல்’ என்பது செலுத்துவது;  அதாவது ஒருவர் செல்லவேண்டிய வழியைத் தெரிவித்தலாகும்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்;
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”
1

என்று தொல்காப்பிய புறத்திணையியலில் ஆற்றுப்படையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. ஒரு புரவலனிடம் சென்று பரிசில் பெற்ற பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் ஆகியோருள் ஒருவர்; பரிசில் பெறவிழைகின்ற ஒருவருக்குத் தாம் பெற்ற பெருவளத்தைக் கூறி அப்பொருள் நல்கியவரிடத்தே செல்லவேண்டிய வழி வகைகளையும் அவரின் பெருமைகளையும் எடுத்துக்கூறி வழிப்படுத்துவதாகும். இவ்வகையில் மேலே கூறப்பட்ட ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நான்கு ஆற்றுப்படை நூல்களும் பொருளை வேண்டி ஆற்றுப்படுத்தப்படுபவரின் பெயரோடு சார்ந்து அமைந்துள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை இறைவனிடம் அருளை வேண்டி ஆற்றுப்படுத்துவதாகவும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமைந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த வேறுபாடு திருமுருகாற்றுப்படையை  ஏனைய ஆற்றுப்படை இலக்கியங்களில் இருந்து தனித்துவமானதாக எடுத்துக்காட்டுகிறது.

திருமுருகாற்றுப்படை
முருகு எனவும் புலவராற்றுப்படை எனவும் அழைக்கப்படும் திருமுருகாற்றுப்படை 317 அடிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார். திருமுருகாற்றுப்படை என்பது திரு –  முருகு –  ஆற்றுப்படை என அமையும். திரு என்றால் அழகிய, முருகு என்பது முருகன், ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது. அதாவது அழகிய முருகனிடம் செல்வதற்கு ஆற்றுப்படுத்துவது எனப் பொருள்படும். “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்துவது” 2 என்று திருமுருகாற்றுப்படைக்குப் பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர். “திருமுருகாற்றுப்படை யென்பதற்கு முத்தியைப் பெற்றானொருவன் பெறுவதற்குப் பக்குவனாகிய ஓரிரவலனைப் பெறும்பொருட்டு ஸ்ரீசுப்பிரமண்ணியசுவாமி யிடத்தே வழிப்படுத்தலையுடைய பிரபந்தமெனப் பொருள் கூறுக” 3 என்று ஆறுமுகநாவலர் குறிப்பிடுவார்.

Continue Reading →

ஆய்வு: அற இலக்கியம் நாற்பது உணர்த்தும் தனிமனித நட்பு நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அறநூல் பதினொன்று, அகநூல் ஆறு, புறநூல் ஒன்று என்ற முறையில்அமைந்துள்ளன.இந்நூல்கள் பதினொன்றில் நாற்பது என்று முடியும் இரண்டு நூல்களாக இனியவை நாற்பதும், இன்னா நாற்பதும் விளங்குகின்றன.இந்நூல்களின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார், கபிலர் ஆவார். இவர்களின் கடவுள் வாழ்த்து செய்யுள் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரைப் பாடியிருப்பதால் சமயப்பொது நோக்குடையவர் என்பதை அறியமுடிகிறது.இந்நூல்களில் காணப்படும் தனிமனித நட்பு நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தனிமனிதன் என்பதன் விளக்கம்
சென்னைப் பல்கலை ஆங்கில அகராதி தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொது நோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு,உயர் நிலையாளரின் பின்னணிக்குழு,வழித்துணைக்குழு,மெய்க்காவலர்,பீடிகைநீங்கியபத்திரம்,பெரும்பான்மையளவு, உருவம்அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தனிமனிதன் என்பதற்கு one among the person> மக்களில் ஒருவர், தனியன், தனியொருவன், துணையிலி, ஆதரவற்றவன் என்று பொருள் விளக்கம் தருகிறது.

நட்பு என்பதன் விளக்கம்
நட்பு என்பதற்கு அகராதிகள் பல சொற்களை வகைப்படுத்திக் கூறியுள்ளன. நண்பன்-தோழன்,கணவன் என்று கழகத் தமிழ் அகராதி (ப.592) சுட்டுகின்றது.இதன் மூலம் கணவனும் தன் மனைவியிடம் நண்பனாக இருக்கிறான் என்பது தெளிவாகிறது.

Continue Reading →

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள்’ பாடல்கள் நூல் வெளியீட்டு விழா

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ‘மெல்லிசைத் தூறல்கள்’ பாடல் நூல் வெளியீட்டு விழா 2016, மார்ச்; 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச்…

Continue Reading →

சிட்னியில் தவில் மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி ஆவணப் படம் – புத்தக வெளியீடு

பிரபல  ஆவணப்பட   இயக்குநர்   அம்சன்குமார்  இயக்கத்தில்   உருவான ஆவணப்பட  வெளியீடும்   தவில்  மேதை தெட்சணாமூர்த்தி அறக்கட்டளை  பதிப்பித்த  தவில் மேதை  லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் …

Continue Reading →