திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன்

திருவிற்கோலம் திரியபுராந்தக ஈசன்மனிதரை மனிதர் விலக்கி வைக்கும் தீண்டாமை இழிவு தமிழ் வேந்தர் ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழக கோவில்களில், தமிழகத்தில் வழக்கில் இல்லை என்று காட்ட ஒரு கல்வெட்டைத் தன்னகத்தே வைத்து வா என்று விளக்குகின்றது கூவமான திருவிற்கோலம்.

திருவிற்கோலம் தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் திருவிற்கோலம் என்ற பெயரில் தான் இருந்தது. பின்னாளில் அங்கே கூவம் ஏரி கட்டப்பட்டதும் திருவிற்கோலம் என்ற பெயர் அருகிய வழக்காகி கூவம் என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. திருவிற்கோலம் பேரம்பாக்கம் பூந்தன்மல்லி வழியில் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருஇலம்பையன்கோட்டூர், சிவபுரம், நரசிங்கபுரம் ஆகிய கூவ ஆற்று சைவ, வைணவ தளங்கள்  3 – 4 கி.மீ. இடைவெளியில் உள்ளன. இக்கோவில் நல்ல முறையில் பேணப்படுகின்றது. இக்கோவிலில் சற்றொப்ப முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு SII XXVI / தென்னிந்திய கல்வெட்டுகள் 26 இல் அச்சாகி வெளிவந்துள்ளன.

கல்வெட்டு எண் 364 கிழக்கு சுவர்

1.   ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ ரா
2.   ஜாதிராஜ தேவற்க்கு யாண்டு ஏழாவது(1169-1170)
3.   ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணவி
4.   ற் கோட்டத்து கூவமான தியாகசமுத்திர நல்லூ
5.   ர் ஆளுடையார் திருவிற்கோலமுடையாற்கு இவ்வூர்
6.   தும்பூரன் திருவரங்கமுடையார் அகமுடையான்
7.   சங்கம்பை வைத்த திருநுந்தா விளக்கு க ஒன்றுக்கும் இக்கோ
8.   யிலில் சிவப்ராமணவாரணர் கௌஸிகன் செந்நெற்பெற்றானும், கௌத
9.   மன் உடையபிள்ளையும், கௌதமன் திருவலமுடையா
10. (னும்), காஸ்யபன் தேவப்பிள்ளையும், – – –  -கணபதி ப
11. ட்டனும் இவ்வாண்டு அப்பசி மாஸத்து இவ்வனையோமும் கை
12. க்கொண்ட அன்றாடு நற்பழங்காசு 15. இக்காசு பதினைந்து
13. ம் (பொலியூட்டாக) கைக்கொண்டு இத்திருநந்தா விளக்கு ஒன்
14. றும் சந்திராதித்தவரை செலுத்தக் கடவோமானோம் இவ்
15. வனைவோம். இப்படிக்கு கௌஸிகன் செந்நெல்
16. (ந)ற் பெற்றாந் எழுத்து இப்படிக்கு இவை கௌதமன்

Continue Reading →

தித்திக்கும் தீபாவளி திருப்பம் பல தந்திடட்டும் !

தித்திக்கும்  தீபாவளி திருப்பம்  பல  தந்திடட்டும்  ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

தீபாவளித் தினத்தில்  தித்திப்பு  உண்ணவேண்டும் 
கோபமெனும்  குணமகற்றி  கொண்டாடி  மகிழவேண்டும்
பாவமென நினைக்கின்ற செயலனைத்தும் துரத்தவேண்டும்
பக்குவமாய் ஒன்றுகூடி பாங்காக மகிழவேண்டும்

உள்ளமதில் உண்மைதனை  ஊற்றெடுக்கச்  செய்யவேண்டும்
கள்ளமுடை  எண்ணமதை களைந்தெறியச் செய்யவேண்டும்
நல்லவர்கள் ஆசிபெற்று நம்வாழ்வு சிறக்கவேண்டும்
நமக்குவாய்க்கும் தீபாவளி நல்வெளிச்சம் காட்டிடட்டும்

Continue Reading →

வைன் பொழுதுகள் (கவிதை)

கவிதை சுவைப்போமா?

கடும் சிவப்பு
திராட்சை ரசமெனும் வைன்
பலவேளைகளில்
சிலகதை சொல்லும்

காதல் என்றும்
காமம் என்றும்
இலக்கியமென்றும்
சினமாவென்றும்
ஏதேனும் சொல்லும்
சிலவேளை அரசியலும்.

வைன் பொழுதுகளில்
அதனுடன் காதலையும் காமத்தையும்
பற்றி பேசவே ஆசை கொள்வேன்.
வைன் பொழுதுகளில்
நீயும் நானும் எப்போதும் நெருக்கமானவர்களாக
இருப்போம்
உனக்கும் அவ்வாறிருக்கும்.

Continue Reading →

நோயும் நீ…! மருந்தும் நீ….! (கவிதை)

ஶ்ரீராம் விக்னேஷ்“பிணிக்கு  மருந்து  பிறமண் : அணியிழை
தன் நோய்க்கு  தானே  மருந்து”      (திருக்குறள் – 1102)

இதயத்தை  நிறைத்து  நோகும்
என்காயம்  மாற  உந்தன்,
அதரத்தின்  அழுத்தல்  அன்றோ
ஒளஷதம்  ஆகும்  கண்ணே…!
உதயத்தின்  தோன்றல்  போலே
உன்துணை  தந்து  என்னை
கதைதன்னில்  நாயக  னாக
கண்ணேநீ  ஆக்கு  ஆக்கு…!

உந்தனைக்  கண்ட  நாளாய்
உள்ளத்தால்  உருகி  நான்தான்
எந்தனை  மறந்தே  போனேன்..,
எதுமறியாப்  பித்தன்  ஆனேன்…!
வந்தெனை  அணைக்க  வேண்டும்,
வாழ்வில்நீ  கலக்க  வேண்டும்..,
சொந்தமாய்  ஆக  வேண்டும்..,
சொர்க்கத்தைக்  காட்ட  வேண்டும்…!

எத்தனையோ  பெண்க  ளோடு,
என்வாழ்வில்  பழகி  யுள்ளேன்..,
சுத்தமாய்  நெஞ்சில்  தொட்டுச்,
சுகித்தவள்  எவளும்  இல்லை…!
பித்தனாய்  ஆக்கி  என்னைப்,
பின்சுற்ற  வைத்தாய் : விந்தை..,
சொத்தென  எனக்கு  வேண்டும்..,
சொந்தமாய்  ஆகு  ஆகு…!

Continue Reading →

மகாகவிக்கு ஒரு மடல்

கால சக்கரத்தின் ஓட்டத்தில் இன்றும் நான் பார்வையாளரே

நன்மைகளை நினைவிலிருந்து எரித்தனர் நாகரிகம் என்று

நீ விதைத்த வார்த்தைகள் வளர்ந்தும் மரமாகவில்லை

இன்று நிமிர்ந்த நங்கைகள் கூட காணப்படுகின்றனர் காந்தமாக

மனமுடைந்து மரணிக்கின்றனர் நீ விளையாட சொல்லிய சிறுவர்கள்

Continue Reading →

பிறவிப்பயன் !

கவிதை சுவைப்போமா?

விழியின்
நுனியில் பார்வை பிறக்க,
உன் கருவிழி
ஓரமாய்
ஒதுங்கி நிற்க,

அசைவால் நயனிக்கும்
அந்தக் குட்டிக்
கூந்தல்..

உன் செவ்விழி
இடையே ஒலி இல்லா
இசை மீட்டியது!

Continue Reading →

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 1!

- வேந்தனார் இளஞ்சேய் -

1. விருப்புடன் வந்திடுவீர்

பொது வாழ்வில் சேவைதனை
பொறுப்பாய் ஆற்ற வந்தோரே
சங்கங்கள் பலதிலின்று பல
சச்சரவுகள் இருப்ப தேனோ

மன்றங்கள மைத்து பணிதனை
மகிழ்வுடனே ஆற்ற வந்தோரே
மாறுபட்டு நின்றும்முள் மோதி
மல்லுக் கட்டி நிற்பதேனோ

கற்றவர் நாமென்று கூறியென்றும்
கர்வப்படும் நம்மவர் தம்முள்
பிரிந்துநின்று பிணங்கு கொண்டு
பிளவு கண்டு நிற்றலேனோ

சிந்தித்துப் பார்த்திடுவோமே சற்று
சீர்திருத்த முனைந்திடு வோமே
மனம்விட்டுப் பேசி நாமும்நம்
மாறுபாட்டை போக்கலா மன்றோ

Continue Reading →