வாழ்வாதாரக்கல்வியும்……வாழ்வியல் திறன்களும்…..

அறிமுகம்

- முனைவர் இரா. இராமகுமார், எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி.,  எம்.ஏ(வரலாறு). அக்ரி(உ)., த.பண்டிட்., டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்., உதவிப் பேராசிரியர் & நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் - 629“கல்லா மாந்தர் இல்லா நிலையை
காலம் தான் தந்திடுமா!
பெற்றவர் உற்றவர் மற்றவர் போற்றிடும்
மாற்றம் தான் வந்திடுமா!
கற்றவர் பெற்றிடும் கற்பனைப் பெட்டகத்தை
திறன்கள் தான் வளர்த்திடுமா!
கற்றவை பெற்றவை காகிதமாகிவிடுமா!
காலத்தால் கலை நயக் காவியமாகிவிடுமா!”

மனித வாழ்வில் உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றை நலமாக வைத்துக்கொள்ளுத்ல் வேண்டும். நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ளுதல் தற்காலத்திற்கு இன்றியமையானதாகும். பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து வருகின்ற மாணவர்களிடத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்கள் இரண்டறக் கலந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்மறையான குணங்களை நேர்மறையாக மாற்றிடத் தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, திட்டமிடுதல் போன்றவை தேவையானதாகும். சுயக் கட்டுப்பாடு, தன்னை அறிதல் மற்றும் நுண்ணறிவுடன் கூடிய சிந்தனை மூலம் ஆரோக்கியமான குணநலன்கள் உருவாகிடும். மாணவர்களின் நிறைகளையும் குறைகளையும் அடையாளம் கண்டு, ஆசிரியர் அவற்றை எடுத்துரைக்கும் போது அவர்களுடைய குறைகள் யாவும், நிறைகளாக மாற்றிட இயலும். என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம், எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதனை ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாணவர்களின் நலனை உற்று நோக்கி, அதன் பின்பு அறவுரைப் பகர்தல் அவசியமாகின்றது.இதன் மூலம் மாணவர்கள் தம் கருத்தையும் எண்ணங்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் பண்பை வளர்க்க உதவிடும். இதனை செயல்படுத்திடவும், மாணவர்களிடத்து நடைமுறைப் படுத்திடவும் ஒவ்வொரு ஆசிரியர்களும் வாழ்வியல் திறன்களைக் குறித்து அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.

வாழ்வியல் திறன்கள்
கல்வியானது உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்வதாகும். மனித வாழ்வில் கல்விக் கற்கும் காலமே வசந்தமானது. இதனை கற்பவர் உணர்வதில்லை என்பதே நிதர்சனம். திறன்கள் வெளிப்படாதவரை வாழ்வில் வெளிச்சமில்லை எனலாம்.அறியப்பட்டத் திறன்கள் அறிவினை வலுப்படுத்திட உதவும் என்பதில் ஐயமில்லை. ‘வாழ்க்கைத் திறன்கள்’ என்னும் கல்வி ஏற்பாட்டினை ,நான்கு முக்கியக் காரணிகள் நிர்ணயம் செய்பவையாக உள்ளன. அவையாவன,

1. தன்னை அறிதல்.
2. துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்.
3. பகுத்தறியும் திறன்.
4. தொடர்புகொள்ளும் திறன்.

இத்தகைய வாழ்வியல் திறன்கள் எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்கு வலிகோலுகின்றன. ஆனல் இன்றைய கல்வி இத்தகைய திறன்களை நிறைவேற்றிடுமா என்பது இமாலயக் கேள்வியாக உள்ளது. நல்லாசிரியர் இத்தகையத் திறன்களை மாணவர்களிடையே அளவிட்டு, மதிப்பீடு செய்வதும், சிறப்பாக மாணவர்களிடையே வளர்ப்பதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.

Continue Reading →

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்

- முனைவர்(திருமதி).ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர். -தமிழர் தம் இலக்கிய மாளிகையை அலங்கரிக்கும் இலக்கிய வகைகள் எண்ணற்றவை. அவற்றுள் சிற்றிலக்கிய வகைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாட்டின் ஒப்பற்ற போர் வேந்தர்களாம் சேர, சோழ, பாண்டியர்களின் தன்னிகரில்லாப் புகழினைப் பறை சாற்றும் விதமாய் அமைந்திருப்பது முத்தொள்ளாயிரம்;. இதில் வேந்தர்களின் பெருமைகளை ஆசிரியர் அக, புறப் பாடல்களால் வெளிப்படுத்தியுள்ளார்

முத்தொள்ளாயிர இலக்கியம் கருத்தாற்றலாலும், கற்பனையாற்றலாலும், சொல்லாற்றலாலும் சிறப்புற்று விளங்குவது. மொழியின் அழகினை விளக்கும் அணியிலக்கணங்கள் இதில் பல பயின்று வந்துள்ளன. அவற்றுள் புலவரின் குரலாக ஒலிக்கும் தற்குறிப்பேற்ற அணி சிறப்பானதாகும். 

தற்குறிப்பேற்றம்
உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது, கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணியாகும். இதன் இலக்கணம் குறித்து தண்டியலங்காரம் பின்வருமாறு கூறுகின்றது.

“பெயர் பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்
இயல்பின் விளை திறனன்றி அயலொன்று
தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”(தண்டி-56 )

இத்தகைய தற்குறிப்பேற்ற அணியானது இலக்கியங்களில் புலவர் கூற்றாக இலக்கியத்தில் வரும் மாந்தர், பொருள் போன்றவற்றின் சிறப்பினை எடுத்துரைக்கும் முகமாய் காணப்படும்.

முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்
முத்தொள்ளாயிர இலக்கியம் கற்பனையாற்றல் வளத்தால் சிறப்புற்று, ஒப்பற்று விளங்கும் ஓர் இலக்கியமாகும்.  அன்றாட வாழ்வில் நாம் காண்பவை ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள். ஆனால் அவற்றிற்கு கற்பனை என்னும் உயிர் கொடுத்துக் கவிதையாக்கும் போது அது இறவாப் புகழுடைய இலக்கியமாகின்றது. நாம் இவ்வவுலகில் இயல்பாகக் காணும் இயற்கைக் காட்சிகள் முத்தொள்ளாயிரப் புலவரின் கற்பனையில் இருந்து முற்றிலும் மாறானவை, புதுமையானவை. ௨லகில் நடக்கும் இயல்பான காட்சிகள் புலவருக்கு மன்னனின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் முத்தொள்ளாயிரப் பாடல்களில் பயின்று வரும் தற்குறிப்பேற்ற அணி குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

வானவில்லின் திருக்கோலம்
அண்ணாந்து பார்க்கின்றான் புலவன். வானில் வர்ணங்களின் ஜாலமாம் வானவில் தோன்றி காணப்படுகின்றது. அதனைக் கண்ட புலவன், சேரனுக்கு அஞ்சித் தான் விண்ணோரும் சேரனின் கொடியாம் விற்கொடியினைக் கவினுற வரைந்து வைத்துள்ளனர் என்று எண்ணுவதாய்,

Continue Reading →