மெல்பனில் தமிழக படைப்பாளி தமிழச்சி தங்கபாண்டியனுடன் இலக்கிய சந்திப்பு!

தமிழச்சி தங்கபாண்டியனின் 'நிழல் வெளி'தமிழச்சி தங்கபாண்டியன்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழக எழுத்தாளரும்  இலக்கிய ஆய்வாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொள்ளும் இலக்கியச்சந்திப்பு மெல்பனில்,  வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி ( 25-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.

Continue Reading →

மேலும் சில கடிதங்கள்…

வாசகர் கடிதங்கள் rajamanickam manickam <rajamanickam29583@gmail.com>
To:Navaratnam Giritharan

வணக்கம், தகவலுக்காக…, சொல் தேடுதல் தொடர் தீக்கதிரில் எழுதிவருகிறேன். இந்த வாரம் வகிபாகம் –  அக்கினிக்குஞ்சு இதழ் மற்றும் பதிவுகள் இணைய இதழிலிருந்து எடுத்தாண்டேன்…

புதிய சொல் , பழைய தேடல் – 15  வகிபாகம் – அண்டனூர் சுரா

‘தமிழகத்தில் புரத வண்ணார்கள்’ – த.தனஞ்செயன் எழுதிய ஒர் ஆய்வு நூல். திருநெல்வேலி , தாமிரபரணி பகுதிகளில் வண்ணார் குடும்பங்கள்  ஓர் ஊராக வாழும் நிலையைக் கொண்டிருக்க  சோழர் ஆட்சிப் பகுதிகளான திருச்சி, தஞ்சை பகுதிகளில்  ஊருக்கு ஒரு குடும்பம் என்கிற அளவில் தனித்த குடும்பமாக வசித்து வருகிறார்கள். பிற்கால சோழர் ஆட்சிக்  (கி.பி 6 – 12 ) காலத்திற்கு முன்பு வரை எந்தவொரு குடித்தொழிலையும் குலத்தொழிலாக  பார்க்கும் போக்கு இருந்திருக்கவில்லை. இவர்களே, மநு தர்மத்தையும் வருணாசிரமத்தையும் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புப்படுத்தி ;  செய்யும் தொழிலைக் கொண்டு சாதி,  சாதிக்குள் சாதி ; சாதி சார்ந்த குடிகளை வளர்த்தெடுக்கச் செய்தார்கள் என்கிறது இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை தந்திருப்பவர்  பேரா.வீ.அரசு. ‘ தமிழ்ச்சமூக வரலாறு எழுதியலில் ‘ குடித்தொழில் பெறும் வகிபாகம் ‘ .

அக்கினிக்குஞ்சு இதழில் ஜெயராமசர்மா ‘ ஔவையார் தொடக்கம் அன்னை தெரசா வரை ‘ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இப்படியாக ஓரிடம் ” சமூகத்தில் ஆணின் வகிபாகமும் பெண்ணின் வகிபாகமும் காலத்துக்குக்காலம் மாறுபட்டு வருகிறது “.

இலங்கை வாழ் தமிழ் மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய  நாளிதழ்  ‘வீரகேசரி’. சமீபத்தில் அந்நாளிதழ் 89 ஆவது வயதைத் தொட்டிருந்தது. இதை நினைவு கூறும் பொருட்டு லெ.முருகபூபதி பதிவுகள் என்கிற இணைய பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினார் ‘ கலை இலக்கியத்தில் வீரகேசரியின் வகிபாகம் ‘. இப்படியாக ஈழத்தமிழ் சார்ந்த எழுத்தாளர்களிடமும் புலம்பெயர் பத்திரிகைகளிலும் இச்சொல் அதிகமாக புழக்கத்திலிருந்து வருவதைக் கவனிக்க முடிகிறது. அது என்னதாம் ‘வகிபாகம்’ ?

Continue Reading →

இதழ் வெளியீடு: கூர் 2018: ‘காயம் பட்ட நிலம்’!

‘காயம் பட்ட நிலம்’ இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமில்லை, பூப்பரப்பின் பல்வேறு மக்களும் இயற்கையும் பட்ட காயத்தினது அடையாளமாகும். (இதழின் ஆசிரிய தலையத்திலிருந்து) கூர் 2018 ‘காயம்…

Continue Reading →