தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தரின் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் ஆகும்.  இது வேலூர்  மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் திருவடியிலிருந்து நீர் ஊறுவதால்  திருஊறல் என்று இத்தலம் பெயர் பெற்றது. கோவில் அருகே கல்லாறு பாய்கிறது என்பது மட்டுமல்ல  கூவமும் கொசத்தலையும் பிரிகின்ற கேசாவரம் அணையும்  4 கி.மீ .தொலைவிலுள்ளது. இக்கோவில் கருவறை சுற்றி பல்லவர்கால உருளைவடிவத் (cylindrical) தூண்களை பெற்றுள்ளது. கருவறை புறச்சுவரில் பல அரசர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன்றி  பிரகார நெடுஞ்சுவரிலும் பல கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. இத்தலம் காஞ்சிபுரத்தில் இருந்த்து 30 கி.மீ. தொலைவிலும் அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ.தொலைவிலும் உள்ளது.                          

கருவறைசுற்று உருள்வடிவத்  தூண் / கல்வெட்டு சுவர்

S.I.I. Vol 12 Pg 53 No 104 தக்கோலம் ஜலநாத ஈசர் மேற்கு கருவறைப் புறச்சுவர்

1.  ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு நாலவ
2.  து சோழநாட்டு வண்டாழை வேளூர்க் கூற்றத்து புலியூ
3. ர் புலியூருடையான் நாராறுங்கப் போனரயன் திருவூ
4. றல் மஹாதேவர்க்கு ஒரு நொந்தாவிளக்கு எரிப்பதற்
5. க்கு வைத்த ஆடு _ _ _ _

விளக்கம்: கூற்றம் என்ற சொல்லை வைத்து பார்க்கும் போது 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு போலத் தெரிகின்றது. சோழவேந்தன் யார் என்று தெரியவில்லை. (இராசராசன் இராசகேசரி எனப்பட்டான். இராசேந்திரன் பரகேசரி என்று அழைக்கப்பட்டான்). ஆனால்அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டில் சோழநாட்டின் வண்டாழை வேளூர் கூற்றத்தில் அடங்கிய புலியூரைச் சேர்ந்த புலியூருடையான் நாராறுங்கப் போனரயன் என்ற மூன்றாம் அதிகாரப் பொறுப்பு அரசன் திருவூறல் ஈசனுக்கு நந்தா விளக்கு எரிப்பற்கு கொடுத்த ஆடு 90 அல்லது 96 என்ற எண் பகுதி சிதைந்துள்ளது. தேவார காலத்தில் திருவூறல் என்று மட்டுமே இருந்தது பின்பு தக்கோலம் என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.

S.I.I. Vol 3 எண் 166

தக்கோலம் ஜலநாத ஈசுவரர் சன்னதி வடக்கு சுவர் கல்வெட்டு

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 314: கனடா மூர்த்தி!

கனடா மூர்த்திகனடா மூர்த்தி என்று அறியப்படுகின்ற மு.நாராயணமூர்த்தி பல்துறை திறமை கொண்டவர். கதை, கட்டுரைகள் எழுதுவதில் , ஆவணப்படங்கள் தயாரிப்பதில், ஓவியம் வரைவதில், நகைச்சுவை ஆக்கங்கள் படைப்பதில், ஒலி(ளி) பரப்பாளராகப் பணி புரிவதில் என்று பல்துறை ஆற்றல் கொண்ட இவரை நான் முதன் முதலில் கண்டது யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த காலகட்டத்தில்தான். அப்பொழுது இவர் சமயத்தில் ஈடுபாடு மிக்க ஒருவராக நினைவிலுள்ளார். தேவாரங்கள் கூடப் பாடியதாக ஒரு நினைவு. ஆனால் அப்போது இவரை நான் பார்த்ததோடு சரி. கதைத்தது இல்லை. இவர் எனக்கு ஒரு வருட ‘சீனியர்’. அதன் பின்னர் நான் இவரைக் கனடாவில் சந்தித்தபோது ஆளே மாறிப்போயிருந்தார். ருஷ்யாவில் புலமைப்பரிசு பெற்று சென்று பொறியியல் படித்து முடித்து திரும்பியிருந்த ஒருவராக, சமூக, அரசியலில் நாட்டமுடையவராக, இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவராக  மாறிப்போயிருந்தார்.

தாயகம் பத்திரிகை(+ சஞ்சிகை) வெளிவந்த போது அதில் இவரது கை வண்ணத்தைக் கண்டு வியந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில்தான் இவரை முதன் முறையாகச் சந்தித்திருக்கின்றேன். 260 பார்ளிமென்ற் வீதித் தொடர்மாடிக் கட்டடத்தில் கனடாவில் முதன் முதலாகச் சந்தித்ததாக நினைவ. அப்பொழுது தாயகம் பத்திரிகையில் எனது தொடர்கதைகள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதிலொன்று ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’ அதற்கு ஓவியம் வரைந்தவர் இவரே என்பதைப்பின்னரே அறிந்து கொண்டேன். அதுபோல் தாயகம் பத்திரிகையில்  (+சஞ்சிகை) வெளிவந்து பலரின் கவனத்தையும் கவர்ந்துகொண்டிருந்த பகுதிகளில் ஒன்று ‘முனியின் பதில்கள்’. சுவையான முனியின் பதில்களை இரசித்தவர்களில் நானுமொருவன். அம் முனி இவர்தானென்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். அம்முனிவரின் படத்தை வரைந்தவரும் இவர்தான் என்பதையும் பின்பு அறிந்தேன்.

கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகள் பலருடன் புகைப்படமெடுப்பதில் விருப்புள்ளவர் இவர். அப்புகைப்படங்கள் அனைத்தையும் தனியொரு தொகுதியாக வெளியிடலாம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் ‘பரதேசம் போனவர்கள்’…

வாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்'... வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளியான , புலம்பெயர்தமிழ்ப்படைப்பாளிகளிடமிருந்து வெளியான சிறுகதைத்தொகுப்புகளில் ‘நான்காவது பரிமாணம்’ வெளியீடாக வெளிவந்த எழுத்தாளர் க.நவத்தின் ‘பரதேசம் போனவர்கள்’ தொகுப்புக்கு முக்கிய இடமுண்டு. எழுத்தாளர் ஒரு கல்விமான் மட்டுமல்லர் சிறந்த எழுத்தாளரும் கூட. கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு எனப்பல்துறைகளிலும் சிறப்பாக ஆற்றலை வெளிப்படுத்தும் இவரது ‘பரதேசம் போனவர்கள்’ தொகுப்பினை அண்மையில் ஆறுதலாக வாசித்துப்பார்த்தேன். தொகுப்பின் கதைகள் அனைத்துமே நாட்டு அரசியற் சூழல் காரணமாகப் புலம்பெயர்ந்து பரதேசம் சென்ற ஈழத்தமிழர்களின் வாழ்வை விபரிப்பவை. தொகுப்பின் தலைப்பான ‘பரதேசம் போனவர்கள்’ பொருத்தமான தலைப்பு.

தொகுப்பின் கதைகள் கூறும் கருத்துகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

சொந்த மண்ணிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கு, அந்நிய நாட்டுக்கு, வேறொரு கலாச்சாரச்சூழல் விளங்குமிடமொன்றுக்குப் புலம்பெயரும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளியல்ரீதியிலான, கலாச்சாரரீதியிலான மற்றும்  நிறவெறி போன்ற பிரச்சினைகளை, சவால்களை, அவற்றை அவர்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றார்கள் என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. புதிய சூழல் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் எவ்விதம் அவர்கள் வாழ்வைச் சீரழிக்கின்றன என்பதை  புதிய சூழல் தரும் பொருளியல்ரீதியிலான அனுகூலங்களை எவ்விதம் அவர்கள் தவறாகப்பாவித்துப் பயன்பெறுகின்றார்கள் என்பதையெல்லாம் தொகுப்பின் கதைகள் விபரிக்கின்றன. சில கதைகள் அதிகம் ஏனைய எழுத்தாளர்களினால் கையாளப்பட்டிராத பால் மாற்றம் (‘ட்ரான்ஸ்ஜென்டர்’), பாலியல்ரீதியிலான பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் கதைகள் வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தொகுப்பில் என் பார்வையில் கவனத்தை ஈர்த்த கதைகளாக ‘ஜீவித சங்கல்பம்’, ‘வெள்ளைப்புறா ஒன்று.’, ‘பிச்சைக்காசு’, ‘காற்றைப்போன்றதடி என் காதல்’, ‘ஆசாரசீலம்’ போன்றவற்றைக் கூறுவேன். ஏனையவையும் சோடை போனவையல்ல.

Continue Reading →

கவிதை: வாழ்த்துதல் நன்றன்றோ!

- வேந்தனார் இளஞ்சேய் -

வாழ்த்துதற்கு நமக்கு நல்மனமது
வேண்டும்
வஞ்சமற்ற நல்ல நெஞ்சமது
வேண்டும்
இதயத்தில் வற்றாத இரக்கமது
வேண்டும்
இன்பமாய் இருந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

பாராட்ட நல்ல உணர்வது
வேண்டும்
பக்குவமான சிறந்த குணமது
வேண்டும்
நல்லதை ரசிக்கும் இயல்பது
வேண்டும்
நலமாய் சிறந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

Continue Reading →

தொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (1)

ஆசிரியரின் என்னுரை!

- கடல்புத்திரன்  (பாலமுரளி) - இந்தக் கதை 1990 களிலிருந்து கனடாவிலிருந்து, வெளியான ‘தாயகம்’பத்திரிகையில் தொடராக வெளியானது. 98இல் வ.ந.கிரிதரனின்  முயற்சியில் குமரன் வெளியீடாக ‘வேலிகள்’ என வெளியாகிய தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது.  நூலகத் தளத்திலும் நீங்கள் அந்த புத்தகத்தைப் வாசிக்கலாம்.

இந்தியாவும்,இலங்கையும் இருக்கிற உலகப் படத்தில் இலங்கை மாம்பழம் போல இருக்கிறது. அதன் வட பகுதிக்கு அண்மையாக கடலில் மூன்று,நான்கு தீவுகள் இருப்பதைப் பார்க்கலாம். அதிலே மிகக் குறைந்த கடல் தூரத்தில் பிரிபட்டுள்ள பகுதி தான் அராலிக்கடல். தரைப் பகுதியோட இருக்கிற பகுதி அராலி, அடுத்தப்பக்கம் இருப்பது வேலணைத் தீவு. காரைநகர், பண்ணை வீதிகளைப் போல வீதி அமைக்கக் கூடிய இரண்டு, மூன்று கிலோ மீற்றர் தூரம் தான் இந்தக் கடலும்.  மகிந்த ராஜபக்சா அரசாங்க  காலத்தில்   அராலிக் கடலில் வீதி அமைக்கிற யோசனை இருந்திருக்கிற‌து போல இருக்கிறது. கூகுள் படத்தில் வீதி அமைக்கப் பட்டே விட்டிருப்பதுப் போலவே காட்டுகிறது.   ஆனால், உண்மையில் வீதி இன்னமும் அமைக்கப்படவில்லை.   .இந்த இடத்தில் தான் .1985 ம் ஆண்டில் இந்தக் கதை நிகழ்கிறது. 50 % …உண்மையும்,50 %  …புனைவுமாக கலந்து எழுதப் பட்டிருக்கிறது. இனி வாசியுங்கள்.இந்த போக்குவரத்தில், பயணித்தவர்கள் வாசிக்கிறவர்களில் யாரும் ஒரிருவர் இருக்கலாம்.

சில திருத்தங்களுடன் இந்நாவல் மீண்டும் தொடராகப் ‘பதிவுகள்’இணைய இதழில் வெளியாகின்றது.


அத்தியாயம் ஒன்று!

தீவையும் யாழ்ப்பாணத்தையும் பிரிக்கிற அந்த சிறிய கடல்பரப்பு ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கனகனின் பூட்டன் காலம் அல்லது அதற்கு முந்தியதாக இருக்கலாம். அங்கே சிறிய துறையிருந்ததற்கு அடையாளமாக உள்ளே சென்ற மேடையொன்று அழிந்து சிதைந்து காணப்பட்டது. அவன் அப்பன் சிலவேளை “அப்படியே றோட்டு தீவுக்குச் சென்றது. இப்ப கடல் மூடிவிட்டது” என்று கதையளப்பான். ஒருவேளை அப்படி யிருக்குமோ என்று அவனும் நினைப்பதுண்டு. ஏனெனில் தார்ப்பருக்கைகளோடு கூடிய றோட்டு ஒன்று கடலுக்குள்ளே போயிருப்பதையும் யாரும் பார்க்கக்கூடியதாக இருந்தது. அவ்விடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மட்டும் பாவிக்கிற இடமாகவே அது கனகாலமாக புளங்கி வருகிறது. அவர்கள் தங்குவதற்கான ஒரு நீண்ட வாடி ஒரு புறத்தில் அமைந்திருந்தது.முந்தி ஒலைக்கொட்டகையாக இருந்ததை ஒருமாதிரியாக அரச மானியத்தைப்பெற்று அஸ்பெஸ்டாஸ் கூரையோடு கூடிய சீமெந்துக் கட்டிடமாகக் கட்டியிருந்தார்கள். அந்தப்பகுதி பிரபல்யமாகவும், அவசியமானதாகவும் வரும் என்று எந்த மீனவனும் நினைத்திருக்கமாட்டான். சிறிய வள்ளத்தில் சென்று மீன்பிடித்து வருகிற அவர்களை புதிதாக ஒரு பிரச்சினை மூழ்கடிக்கப்போகிறது என்று மூக்குச் சாத்திரமா அவர்களுக்குத் தெரியும்.

கடல் பரப்பு அமைதியாக இருந்தது. மனதில் எரியும் கனலை அடக்க முடியாதவர்களாக அண்ணன் முருகேசு, கோபாலு, தில்லை, சப்பை போன்ற பிரதிநிதிகள் இடுப்பில் ஆயுதத்தைச் சொருகியிருந்த அந்த திக்குவாய்ப் பெடியனை சூழ்ந்திருந்தார்கள். கனகன், அன்ரன், நகுலன், நடேசு செட் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒரமாக நின்றது.

“தம்பி, இது சரியில்லை. அவங்களை அந்தக் கரையிலிருந்து ஒடுறதுக்கு நீ ஒப்புதல் தந்தாய். இப்ப, ஒரு வள்ளம் இந்தக் கரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு போயிருக்கிறது. உவங்களுக்கு சரியான பாடம் படிப்பிக்கேலும். நீ ஒப்புதல் தந்திருப்பதால் நாம எல்லாம் பொறுமையாக இருக்கிறம். அவங்களுக்கு நீ திட்டவட்டமாக வரையறை சொல்லி அதைக் கடைப்பிடிக்க வைக்க வேணும்” முருகேசின் கோபப்பேச்சு கனகனை சிறிது கிலி கொள்ள வைத்தது.

இவன் பயம் அறியாதவன். உயர் சாதிப்பெண்ணைக் காதலிச்சு, கூட்டிக்கொண்டு வந்து வாழ்கிறவன். நண்பர்கள் சிலருடன் எளிமையாக ஐயனார் கோவிலில் தாலி கட்டுறபோது அந்த சாதியினர் ஊருக்குள் அட்டகாசம் செய்யவந்தார்கள். திருக்கை வால், மண்டா, ஆயுதங்களை எடுத்துக் கொண்டு துணிவாக எதிர் கொண்டவர்கள்   .ஆட்தொகை, ஆயுதம் பற்றி எல்லாம் கவலைப் படாத கூட்டம். இப்ப,இயக்கப் பெடியன் ஒருத்தனையே காட்டமாக எதிர் கொள்கிறார்கள். இவர்கள், சடாரெனச் சுட்டுத்தள்ளி விடுவார்கள். கனகனால் அவனை மறிக்க முடியுமா? தெரியவில்லை. எனவே, பயந்த மனதுடன் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

Continue Reading →