இளவாலைத் திருக்குடும்பக்கன்னியர் மடத்தின் தோற்றமும் சிறப்பும்

இளவாலைக் திருக்குடும்பக்கன்னியர் மடம்‘கிறிஸ்தவ மதத்தின் பிடியிலிருந்து மக்களை மீட்டு எடுத்தால் மட்டும்தான் புரட்சியின் வெற்றி சாத்தியமென்று’ பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரவாத ஆட்சியின்போது கருதப்பட்ட நிலையில் Bordeaux  என்னுமிடத்தில் அதி.வண.பேராயர் Pierre Bienvenu Noailles அவர்களால் உருவாக்கிய திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் வரலாற்றோடு இளவாலைக் கன்னியர் மடத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. 1858 இல் யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க சமய அதி வணக்கத்திற்குரிய ஆயராக இருந்த Semeria (OMI)  அவர்களால் அதி வண. பேராயர் Noailles அடிகளார்க்கு யாழ்ப்பாணத்தில் பெண்கள் மத்தியில் கல்வி ஊட்டும் முகமாகää கன்னியாஸ்திரிகைகளை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதி வேண்டிக் கொண்டதிற்கிணங்க உருவானதே இளவாலைக் கன்னியர் மடமாகும்.
  

Continue Reading →

நூல் அறிமுகம்: எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு… நவீன குறுங்காவியம்

நூல் அறிமுகம்: எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... நவீன குறுங்காவியம்கலாபூஷணம் பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு… என்ற நவீன குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987) கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு (2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம் ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும்.  இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை, அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி  போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது.

Continue Reading →

நெடுங்கவிதை: டி.எஸ்.எலியட்டின் ‘பாழ்நிலம்’ [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)]

2. சதுரங்க விளையாட்டு

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'அவள் வீற்றிருந்த நாற்காலி ஜொலிக்கும் சிம்மாசனம்,
தகதகத்தது பளிங்குத்தரைமேல். நிலைக்கண்ணாடியில்
ஒரு மதுரஸ திராட்சைக்கொத்தின் சித்திரம்
அதில் பொன்னிற கியூபிட் எட்டிப்பார்த்தான்.
(இன்னொரு காதல் தேவன் அவள் விழிகளை சிறகால் மறைக்க)
எழுதினாள் பக்கச்சட்டங்கள் இரட்டிப்பாக்கிய
தூங்காவண்ணமணி விளக்குச்சுடரில் பட்டுத்தெறித்தது
மேஜையும் அவள் வெல்வெட்டுப் பேழை ஆபரணங்களும்.
அள்ளிவீசிய் வெண்கிரணங்களில் ஐக்கியமான ஒளி ஜாலங்கள்
திறந்திருந்த தங்கச்சிமிழ்கள் வர்ணக்குப்பிகள் அகத்தே
திரவம், பொடி, குழம்பென்று டப்பிகளில் நெளிய
வண்ண வண்ண செயற்கை வாசனாதி திரவியங்கள்
சிந்தையை மயக்கி செயலிழந்து ஊசலாடச் செய்யும்.
வீசும் சாளரத்தென்றலில் மெழுகுத் தீபங்கள் நடனமாடும்
சித்திர விதானத்தில் எழில் கோலங்களை
புகைமண்டலங்கள் எழுப்பும் பாங்கில்
கடல்கட்டைகள் எரியும் தாமிர அடுப்பில்
கணப்பு ஆரஞ்சு நிறத்தொல் தகிரும்.
அதன் சுவரில் திமிங்கிலம் நீந்தும் மாடத்தில் ஓர் அடர்வனம்.
மங்கிய நிலவொளியில்  ஒருநெஞ்சை உருக்கும் ஓவியம்.
அதில் ஒரு புராணக் காட்சி
கொடூர டார்க்குஸ் மன்னன்தன் கொழுந்தியாள்
பிலோமிலாளை கடூரமாய் கற்பழித்து
அவள் குயிலாகச் சபிக்கப்பட்டதில் இன்றும் அவள்
கானகத்தில் தன் ஊமைச் சோகத்தை கூவித்திரிகிறான்.
‘ஜக், ஜக்’ என்று இன்னும் அவள் புலம்புவது
இன்றைய ஜடக்காதுகளுக்கு கேட்காது. இப்படி எத்தனையோ சித்திரங்கள் பேசின.
அவைகளில் வெறித்த உருவங்கள் விரக்தியால்
காலத்தால் கருகிய தங்கள் கதைகளைச் சொல்லின.
அறையின் அமைதி கிழித்து அந்நேரம் மாடியில் யாரோ ஏறும்
காலடி ஓசையில் ஒய்யாரமாய் வளைந்து திரும்பினாள்
கணப்பின் கதகதப்பில் சிங்காரியின் கேஸங்கள்
ஐந்தாய் வகிந்திடும் ஜாலத்தில்
காதல் மொழிகள் பொங்கி உதிர்ந்தன.

Continue Reading →