தோழமை நினைவுகள் குமரன் (பொன்னுத்துரை) (1954 – 2013)

குமரன் (பொன்னுத்துரை)03.11.2013 ஞாயிறு பிற்பகல் 03.00 மணி, SALLE SAINT BRUNO, 9, RUE SAINT BRUNO, 75018 PARIS
SAINT BERNARD தேவாலயம் அருகில் ,Métro :  LA  CHAPELLE
 
குமரன் நினைவுப் பேருரை: யமுனா ராஜேந்திரன் – ‘போராட்ட வாழ்வும் வரலாற்றில் வாழ்தலும்’
 
போராட்டத்தினுள் வாழும் மனிதர்கள் முதன்மையாக இழப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். உச்சபட்சமாக உயிரை இழக்க நேரும். நிலவிய சமூகம் ஏற்படுத்தி வைத்த அறங்கள், ஒழுக்கங்கள், நியமங்கள், பொறுப்புக்கள் போன்றவற்றை இவர்கள் மீற நேரிடும். தவிர்க்கவியலாமல் வன்முறையை எதிர்கொள்ளவும் செலுத்தவும் நேரிடும். அனைத்துக்கும் மேலாக இலக்கை எய்தும் நோக்கில் தோல்வியை எதிர்கொள்ளவும் நேரிடும். அப்போது தாம் இழந்தவையும் மீறியவையும் அர்த்தமுள்ளவைதானா என்கிற கேள்விகளை எதிர்கொள்ள நேரும். அவ்வேளை உளச்சிதைவுக்கும் நம்பிக்கையின்மைக்கும் அவர்கள் உள்ளாகவும் நேரிடும். இதனையும் மீறித்தான் மனிதர்கள் தம் இருப்புக்கும் விடுதலைக்கும் போரிட்டபடியே இருக்கிறார்கள். இதுவே மனிதகுலத்தின் வரலாறு. ஈழப் போராட்டத்தினையிடையில் வாழ நேர்ந்த மனிதர்களின் வாழ்வும் இவ்வாறானதே. எனினும், இவர்களில் ஒரு சிலரே வரலாற்றில் வாழ்கிறார்கள். ஏன் அவ்வாறு நேர்கிறது என்பது குறித்து பார்வையாளர்கள் பங்குபெறும் உரையாடல் பிரதான உரையை அடுத்து இடம்பெறும். தோழர். குமரனுடன் வாழ்ந்த தோழர்களும் நண்பர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
 

Continue Reading →

படித்தோம் , சொல்கிறோம்: கவிஞர் செ. கதிரேசர்பிள்ளையின் பாரதம் தந்த பரிசு

கவிஞர் செ. கதிரேசர்பிள்ளைஎழுத்தாளர் முருகபூபதிநடிப்பதற்காகவே எழுதப்படும் படிப்பதற்காக  மாத்திரம்  எழுதப்படும் நடிப்பதற்கும் படிப்பதற்கும்  எழுதப்படும்  நாடகங்கள் என்று  மூன்றுவகைகள்  இருப்பதாக ஒரு  சந்தர்ப்பத்தில் பேராசிரியர்  மு.வரதராசன் குறிப்பிட்டார். நாடகங்களை எழுதினால்  நடிக்கமாத்திரமே முடியும். படிப்பதற்காக  நாடகங்கள் எழுதமுடியாது எனச்சொல்லும் விமர்சகர்களும்  இருக்கிறார்கள்.ஒரு காலத்தில்  தமிழ்      சினிமாப்படங்களின்  கதை  வசனங்கள் கையிலே  சுருட்டக்கூடிய பருமனில் சிறு  நூல்களாக  வெளியாகின. அவற்றைப்படித்துப்பாடமாக்கி பாடசாலைகளிலும்  மற்றும் பிரதேச  சனசமூகநிலையங்கள் ஊர் மன்றங்களில் நாடகம்  நடித்திருக்கிறார்கள்.  குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன்  (வசனம் சக்தி கிருஷ்ணசாமி)  இரத்தக்கண்ணீர்  (வசனம்  திருவாரூர் தங்கராசு)  திரைப்பட  வசனத்தை வைத்துக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.  வரி வட்டி திறை வானம்  பொழிகிறது… பூமி விளைகிறது…  வயலுக்கு   வந்தாயா ஏற்றம் இறைத்தாயா…அங்கு கொஞ்சி  விளையாடும்  எம்குலப்பெண்களுக்கு   மஞ்சள்   அரைத்துக்கொடுத்தாயா?   மாமனா மச்சானா. என்று பாடசாலைக்காலத்தில் கட்டபொம்மன்   வசனம் பேசிய பலர்   எம்மத்தியில் இருக்கிறார்கள்.

Continue Reading →