கண்ணாடி வார்ப்புக்கள்-நாடக நூல் அறிமுக விழா-கண்ணோட்டம்!

கண்ணாடி வார்ப்புக்கள்-நாடக நூல் அறிமுக விழா-கண்ணோட்டம்!நேற்று  ஹரோ சிவிக்  மண்டபத்தில் (12/10/13) அவைக் காற்றுக் கலைக்  கழகத்தினரின் ‘கண்ணாடி வார்ப்புக்கள்’    நாடக நூல்  அறிமுகவிழா  சிறப்பாக  நடைபெற்றது.  சில  நூல்  அறிமுக விழாக்களுக்கு  செல்வதில் நாட்டம் கொள்வதில்லை.அங்கு விழா ஒரு பக்கம் நடக்க சபையோர் இரைச்சலுடன் கதைத்துக் கொண்டிருப்பர்.சிலர் நூலை விமர்சிக்காது ஏதோவெல்லாம் பேசிக்கொள்ள எழுத்தாளர் பாவமாய் உட்கார்ந்திருப்பார்.சில இடங்களில் நூலை விற்றுவிடுவதிலுள்ள ஆரவம்/அவசரம் மற்றவற்றில் கோட்டை விட்டிருப்பர். மாறாக, நூலுக்குள் நின்றபடியே நாடகம்,நடிப்பு,அரங்கியல் சார்ந்த விமர்சனக்களை நேர்த்தியாக திருமதி மாதவி.சிவலீலனும்,திரு.சாம் பிரதீபனும் செய்தனர். தமிழன்,மனம்பேசுது,ஈழகேசரி,புதினம் பத்திரிகைகளின் ஆசிரியர் திரு.ஈ.கே.ராஜகோபால் அவர்களின் வாழ்த்துரை நல்ல செய்திகளைச் சொன்னது.

அரங்கியல் சார்ந்த அனுபவமும்,பட்டப்படிப்பும் கொண்டவர் சாம் பிரதீபன். திருமறைக்கலா மன்றம் மூலமும்,பின்னர் தீபம் தொலைக்காட்சி ‘பிடிக்கல..பிடிக்கல மூலமும் நாடகங்களை ரசிகர்களுக்கென தந்து அசத்தியவர்.அவரின் நீதியின் இருக்கைகள் நாடக நூல் அவரின் நாடக அனுபவதிற்கு சான்றானது. எனவே அவரின் விமர்சனம்  நம் போன்றோரின் தேடலுக்குத்  தீனி  போட்டன எனலாம். நாடகம், கவிதை, அரங்கியல் சார் நூல்களின் மூலம் அறிமுகமான/பரிச்சயமான அமரர். காரை.சுந்தரம்பிள்ளை அவர்களின் மகளான திருமதி.மாதவி சிவலீலனின் விமர்சனம் நூலைப் பல தடவை படித்து உள்வாங்கியது தெரிகிறது.அவரின் தந்தையின் நாடக அனுபவம் இவரின் இலக்கிய முயற்சிகளுக்கு பெரிதும் உதவுக்கின்றன.புலிக்குப் பிறந்தது பூனையாகாது.

Continue Reading →

“இலங்கையில் தமிழின அழிப்பு”- தமிழருக்கான பாராளுமன்றக் குழுவினரின் கருத்தாய்வு

"இலங்கையில் தமிழின அழிப்பு"- தமிழருக்கான பாராளுமன்றக் குழுவினரின் கருத்தாய்வுபிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “இலங்கையில் தமிழின அழிப்பு” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஒன்று, கடந்த செவ்வாய்க் கிழமை, பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் நடைபெற்றது. பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயட்பாட்டளர்கள் கலந்து கொண்ட இவ்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி-பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது. இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பான,தமிழ் மக்களுக்கும் – வேற்றின மக்களுக்கும்,  தனிநபர்களுக்கும்-அமைப்புகளுக்கும், என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கிடையான, ஆரோக்கியமான கலந்துரையாடல் இங்கு இடம் பெற்றது.

Continue Reading →

‘ஞானம்’ சஞ்சிகையின் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய’ச் சிறப்பிதழ்! ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!

‘ஞானம்’ சஞ்சிகையின் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய'ச் சிறப்பிதழ்! ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!(1)  ‘ஞானம்’ தனது 15ஆவது அகவையில் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ என்ற மகுடத்தில் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளது. படைப்பாளிகளிடமிருந்து இச்சிறப்பிதழுக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் 01-10-2013க்கு முன்னர் பிரசுரமான தமது சிறந்த படைப்பு ஒன்றினை பிரசுர விபரங்களுடன் அனுப்பி வைக்கலாம். புலம்பெயர் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. தட்டச்சு செய்யப்பட்ட படைப்புகளை 31-12-2013க்கு முன்னர் தமது புகைப்படத்துடன் மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு வேண்டுகிறோம்.

Continue Reading →

இலண்டன் மாநகரில் பேராசிரியர் ”சாகித்திய ரத்னா” சபா ஜெயராசாவுக்குப் பாராட்டு..! ”இணுவில் ஒலி” சஞ்சிகை அறிமுகம்..!

இலண்டன் மாநகரில் பேராசிரியர் ''சாகித்திய ரத்னா" சபா ஜெயராசாவுக்குப் பாராட்டு..! ''இணுவில் ஒலி" சஞ்சிகை அறிமுகம்..!பேராசிரியர் – ”சாகித்திய ரத்னா” சபா ஜெயராசா இலண்டன் மாநகரில் கடந்த சனிக்கிழமை மாலை (28 – 09 – 2013) பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ”இணுவில் ஒலி” சஞ்சிகை அறிமுகமும் இடம்பெற்றது. இலண்டன் தமிழ் இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் ஏற்பாட்டில் 28 -ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பிரபல எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணன் தலைமை வகித்தார். திருமதி வேலையா தமிழ்மொழி வாழ்த்தினையும் பக்திப் பாடல்களையும் பாடினார். திருமதி நிர்மலா விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மூத்த பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் பேராசிரியரது பணிகளைக் குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சபா ஜெயராசா தம்பதிகளுக்குப் பொன்னாடை போர்த்து – மாலை அணிவித்து – நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.  இரா. உதயணன் பேராசிரியரின் பல்துறை ஆளுமைகள் குறித்து விரிவாகத் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

Continue Reading →