சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து.

khuswant singh- வெங்கட் சாமிநாதன் -சில உறவுகள், சந்திப்புகள், நிகழ்வுகள் எப்படியெல்லாம் நேர்ந்து விடுகின்றன என்று பின்னர் நினைவுக்கு வரும்போது எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பின்னர் என்று சொன்னேன். அதுவும் இரண்டு தலைமுறைகளுக்குப் பின் எண்ணிப்பார்க்க சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தாலோ, வியப்புதான். இரண்டு நாட்களாக இப்படித்தான் மனம் ஒரு சுழலுக்குள் ஆட்பட்டு சலித்து வருகிறது. அது எந்த நி்கழ்வு பற்றி, யாரைப் பற்றி என்பதைப் பின்னர் சொல்கிறேன். இந்த சமயத்திய சந்தர்ப்பத்தில், இப்போதே சொல்லிவிட்டால், ஏதும் சொல்ல இருப்பவர்கள் எல்லாம் தனக்குத் தெரிந்ததைச் சொல்வதை ஒரு வழக்கமாகவோ, கடமையாற்றலாகவோ சொல்வதாக வாசிப்பவர் களுக்குத் தோன்றிவிடும். எனக்கு அந்த தகுதி இல்லாததால், என் விஷயத்தில் அப்படி அல்ல இது. இதில் என் சுபாவமும், அன்றைய என் கோபமும், அன்று சற்றுப் பொறுமை காத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றும் தோன்றினாலும், இதன் விளைவு இப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்கும்? என்றும், ஒரு வேளை என் எதிர்வினை வேறு எப்படியாக இருந்திருக்கக் கூடும், நான் நானாகத் தானே இருந்திருக்க முடியும் என்றும் தோன்றுகிறது. மனம் இப்படியெல்லாம் சலனிப்பதையும் இப்போது தவிர்க்க முடியாது தான். ஆனாலும் என் மனத்தில் கொஞ்சம் வருத்தம் இருந்தது தான். லாபிரிந்த் என்பார்களே அப்படித்தான். இது ஒன்றும் அப்படி எண்ணற்ற சிக்கலான பாதைகள் கொண்டதல்ல. ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்று தெரியாத இடத்திற்கு இட்டுச் சென்றது அதிக சிக்கல் இல்லாமல்.

Continue Reading →