மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன். இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்- மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

தலைமை:    திரு விஜய திருவேங்கடம்..
முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி.. 
சிறப்புரை:     திரு பழ. கருப்பையா..
விருதாளர்:     திரு தமிழ்மகன்..
நிரலுரை:        முனைவர். ப. சரவணன்..

உறவும் நட்புமாக வருகை  தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறேன்…

Continue Reading →

வந்தவாசி: புத்தகங்களே மனித மனங்களைப் பண்படுத்தும் ஆற்றலுடையவை… – நூலக வாசகர் வட்ட மாணவ உறுப்பினர் சேர்ப்பு விழாவில் பேச்சு –

வந்தவாசி: புத்தகங்களே மனித மனங்களைப் பண்படுத்தும் ஆற்றலுடையவை... - நூலக வாசகர் வட்ட மாணவ உறுப்பினர் சேர்ப்பு விழாவில் பேச்சு  வந்தவாசி. ஜூலை.21. –  வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற மாணவ நூலக உறுப்பினர் சேர்ப்பு விழாவில்,மனித மனங்களைப் பண்படுத்தி. நல்வழி காட்டும் ஆற்றலுடை யவையாய் எப்போதும் புத்தகங்களே முன்நிற்கின்றன என்று மேனாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் வேல்.சோ.தளபதி பேசினார்.  இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ் தலைமையேற்றார்.நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர்கள் டாக்டர் அர.நர்மதாலட்சுமி, தலைமையாசிரியர் க.சண்முகம், கவிஞர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அரிமா சங்க மேனாள் மாவட்ட ஆளுநர் வேல்.சோ.தளபதி, புதிதாக நூலக உறுப்பினர்களாக சேர்ந்த மாணவிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி, ‘நானும் புத்தங்களும்…’ எனும் தலைப்பில் பேசும்போது, சிறுவயதிலேயே எனது தந்தையார் மூலமாக எனக்குப் புத்தக வாசிப்பும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும் அறிமுகமானது. தந்தை பெரியாரின் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களும், நா.பார்த்தசாரதி, அறிஞர் அண்ணா போன்றோரின் மனித வாழ்வியலைப் பேசும் எழுத்துக்களும் எனக்கு உத்வேகமூட்டியவை.  

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன் – கறுப்பு ஜூலை 83 நினைவு தினக்கட்டுரை: இலக்கிய திறனாய்வாளர் கலா. பரமேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று

 

” ஞாயிற்றுக்கிழமை  போய்விடுவேன்  என்றார் – அவ்வாறே  போய்விட்டார் இரண்டு  நாள்  இடைவெளியில் சஞ்சரித்த காலமு (னு)  ம்  கணங்களும் “

1_kalaparameswaran.jpg - 12.09 Kbமுருகபூபதிமுப்பத்தியொரு  ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை   மாதம்   22   ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  நள்ளிரவு    யாழ்ப்பாணம்    பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்தியில்  வந்துகொண்டிருந்த  இராணுவ  ட்ரக்   வண்டி  மீது நிலக்கண்ணி வெடித்தாக்குதல்    நடந்தது.  அச்சம்பவத்தில்  13   இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியை  தமிழர்கள்  இன்றும்  கறுப்பு  ஜூலை  என்று அனுட்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இலங்கையின்  அரசியலிலும்  அங்கு வாழ்ந்த   பூர்வகுடி தமிழ் மக்களினதும்  வாழ்வில்    பெரும்    மாற்றத்தை ஏற்படுத்திவிட்ட அந்த  1983   ஜூலை   மாதத்தில் யாழ்ப்பாணம் பலாலிவீதியில் ஒரு  இல்லத்தில்  அந்த    கறுப்புஜூலை   ஆழமாகவே பதிந்துவிட்டது. அந்தவீட்டிலிருந்த   முதியவர்    மற்றும்    குடும்பத்தலைவர்    தவிர்ந்த ஏனையவர்களை    வேரோடு    பிடுங்கி    எறிந்து    தேசாந்தரிகளாக்கியது. அப்படியென்றால்  –  அந்த    முதியவரும்    குடும்பத் தலைவரும்    என்ன ஆனார்கள்?    அவர்களின்    உடல்களை    குண்டுகள்    துளைத்து    அவர்கள் பரலோகம்    பயணித்தார்கள். எனது   இனிய    நண்பர்   கலா. பரமேஸ்வரன்   இன்று (24-07-1983)    யாழ்ப்பாணம்   பலாலிவீதியில்    கொல்லப்பட்ட   31    ஆவது    ஆண்டு நினைவு  தினம்.  அந்தத்துயரமே  இந்தக்கறுப்பு ஜூலையில்    இன்றைய  நாளில் எனது துயர்பகிர்வு. அன்று  24  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை   ஆடி  ஆமாவாசை – போயாதினம்.    தென்னிலங்கையில்   நாட்டின்    ஜனாதிபதி   உட்பட பௌத்தர்கள்    அனைவரும்   சில்   அனுட்டித்துக்கொண்டிருந்தார்கள்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம் : பேசாமொழி 18 வது இதழ் வெளிவந்துவிட்டது….

பேசாமொழி 18 வது இதழ் வெளிவந்துவிட்டது....நண்பர்களே மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளிவரும் இணைய இதழான பேசாமொழியின் 18வது இதழ் இன்று (16-07-2014) வெளியாகியிருக்கிறது. இந்த இதழில் தமிழ் திரைப்பட ஆய்வாளர் தியடோர் பாஸ்கரனின் மிக விரிவான நேர்காணல் ஒன்றை யமுனா ராஜேந்திரன் எடுத்திருக்கிறார். மிக விரிவான இந்த நேர்காணல் இரண்டு பகுதிகளாக வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரே மூச்சில் படிக்கும்போது கிடைக்கும் தீவிரத் தன்மையை இரண்டு பகுதிகளாக வெளியிட்டால் அது கெடுத்துவிடும் என்று கருதி, ஒரே இதழில் முழு நேர்காணலையும் கொடுத்திருக்கிறேன். தவறவிடாமல் அவசியம் படிக்க வேண்டிய நேர்காணல். தவிர தியடோர் பாஸ்கரன் சில மாதங்களுக்கு எனக்கு படிக்க பரிந்துரைத்த ஜான் பெர்ஜரின் “Ways of Seeing”, புத்தகத்தை மொழியாக்கம் செய்து, இந்த இதழில் இருந்து வெளியிடுகிறோம். நண்பர் யுகேந்திரன் இந்த மொழியாக்கத்தை மேற்கொள்கிறார். பிம்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பது தொடங்கி, காட்சி படிமங்களின் வியப்பை இந்த நூல் நமக்குள் விரிவாக பதிவு செய்துக்கொண்டே போகிறது. இப்படியான புத்தகங்கள் தமிழில் வெளியானால்தான், பிம்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்கிற தெளிவு நமக்கு ஏற்படும். பிம்பங்களை நேர்த்தியாக அலச தெரிந்தால், தமிழில் நிகழ்ந்திருக்கும் இத்தனை மோசமான திரைப்பட ஆக்கத்தை நாம் கட்டுப்படுத்தி இருக்க முடியும். நண்பர்கள் தவறாமல் இந்த தொடரை வாசிக்க வேண்டும். உங்களுக்குள் பல அதிசயங்கள் நிகழலாம்.

Continue Reading →

சேலத்தில் தமிழ் ஸ்டுடியோ – தொடர் திரையிடல்..

சேலத்தில் தமிழ் ஸ்டுடியோ - தொடர் திரையிடல்..நண்பர்களே எதிர்வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சேலத்தில் உள்ள ARRS மல்டிப்ளெக்ஸ் ஹாலில் தமிழ் ஸ்டுடியோவின் மாதாந்திர திரையிடல் தொடங்கப்படவிருக்கிறது. தமிழின் முதல் குறும்படமான நாக்-அவுட்டும், இந்தியாவில் முதல் தலித்தியல் திரைப்படமான ஃபன்றியும் திரையிடப்படவிருக்கிறது. படத்தொகுப்பாளர் பீ. லெனின் இந்த மாதாந்திர திரையிடலை தொடங்கி வைக்கிறார். சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நண்பர்கள் தவறாமல் இந்த மாதாந்திர திரையிடல் தொடக்க விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சேலத்தில் உள்ள நண்பர் மணிகண்டனின் தீவிர முயற்சியின் காரணமாகவே, சேலத்தில் தமிழ் ஸ்டுடியோவின் திரையிடல் தொடங்கப்படுகிறது. மணிகண்டனுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி சேலத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலக திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கிறது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் கலந்துக்கொள்ளவும். இதன் தொடர்ச்சியாக சேலத்தில் பல்வேறு பயிலரங்குகளும் நடத்தப்படவிருக்கிறது.

Continue Reading →

சர்வதேச படைப்பிலக்கிய நூல்களுக்கான “மொழி” விருது வழங்கும் விழா 2014.

1_thoppu5.jpg - 11.21 Kb

தோப்பு இலக்கிய வட்டம் சிறந்த இலக்கிய நூல்களுக்கான மொழி விருது வழங்கும் விழா ஒன்றினை இவ்வாண்டு இறுதியில் நடாத்த ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. பின்வரும் நான்கு பிரிவுகளில் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு தகைமை பெறும் ஒவ்வொரு வகைக்கும் பரிசளிக்கப்படும்.

1. நாவல், குறுநாவல், சிறுகதை, குறுங்கதை
2. கவிதை
3. கட்டுரை, பத்திகள், ஆய்வுகள்
4. மொழி பெயர்ப்புக்கள்: சிங்கள, ஆங்கில மூல நூல்களை தமிழ் மொழியில் பெயர்த்து எழுதப்பட்ட நூல்கள்

Continue Reading →

பாரிஸ் மாநகரில் ‘அனலைத் தென்றல்’ விழாவில் ஐந்து நூல்கள் வெளியீடு..!

பாரிஸ் மாநகரில் 'அனலைத் தென்றல்' விழாவில் ஐந்து நூல்கள் வெளியீடு..!“சிறுவர் இலக்கியம் படைப்பது மகத்தான பணியாகும். புலம்பெயர்ந்த மண்ணில் எம் சிறார்களின் மொழி ஆளுமைக்கு உதவத் தமிழ்மொழியில் சிறுவர் இலக்கியம் அதிகமாகப் படைக்கப்பட வேண்டியது அவசியமாகும். சிறுவர்க்கான மனநிலையிலிருந்து அவர்களுக்கான பாடல்களைப் படைப்பதில் சில பெருங்கவிஞர்களே தோற்றுவிடுகிறார்கள். ஆசிரியராக அனுபவம் பெற்றவரும் பாலர்கல்வியில் விசேட பயிற்சிபெற்றவருமான பத்மா இளங்கோவன் சிறுவர் பாடல்கள்,குழந்தைப் பாடல்கள் படைப்பதில் வெற்றிபெற்றுள்ளார். அவர் படைத்துள்ள பாடல்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மண்ணிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன்,தமிழகத்தில் சிறந்த பரிசான ‘சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின்” சிறுவர் இலக்கியப் பணிக்கான பரிசினையும் அவர் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியதாகும். அவர் மேலும் இலக்கியத்துறையில் சாதனை படைக்க எமது வாழ்த்துக்கள்” இவ்வாறு,பாரிஸ் மாநகரில் அண்மையில் நடைபெற்ற ‘அனலைத் தென்றல்” விழாவில் ஐந்து நூல்களை வெளியிட்டு உரையாற்றிய ‘கல்விச் சேவையாளர்” சி. காராளபிள்ளை குறிப்பிட்டார்.

Continue Reading →

எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்தை வாழ்த்துகிறோம்

பதிவுகள் இணைய இதழில் கவிதைகள்,  நூல் விமர்சனங்களை எழுதிவருபவர் எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத். இவர் அண்மையில் நடைபெற்ற கொழும்புப் பல்கலைக் கழக இதழியல் ‘டிப்ளோமா’ கற்கைநெறியில்…

Continue Reading →

ரேமண்ட் கார்வருடனோர் அறிமுகம்

- வெங்கட் சாமிநாதன் -ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும்   செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு  ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர். ரேமண்ட் கார்வரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியும் எழுதும் செங்கதிர், காலாவதியாகிப் போனதாகக் கருதப்பட்ட யதார்த்த வாத எழுத்தின் மீது திரும்ப கவனம் விழக் காரணமானவர் என்று சொல்கிறார். சாதாரண மனிதர்களை பற்றி, அலங்காரமற்ற எளிய சொற்களில் அவர்கள் வாழ்க்கையை, வீட்டுக்குள் அடைபட்ட நிகழ்வுகள் சார்ந்தே அவர் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதத்தன்மை கொண்ட படைப்புகளை அவர் விரும்பியதில்லை என்று சொல்லப்பட்டாலும், அவர் கதைகளில் கார்வரின் வாழ்க்கை அனுபவத்துக்கு அன்னியமான சம்பவங்களோ மனிதர்களோ காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவர் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய, அவற்றையே பிரதிபலிக்கும் சம்பவங்களும் மனிதர்களும் தான் அவர் கதைகளில் காணப்படுகின்றனர். இது  இத்தொகுப்பில் தரப்பட்டுள்ள அவர் கதைகள் முழுதையும் படித்த பிறகுதான் தோன்றுகிறது.

Continue Reading →

சிறுகதை: யுத்தங்கள் செய்வது…

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -நேட்டோ விமானங்கள் குண்டு வீசியபோது இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும். நான் அப்போது இன்னும் தூங்கியிருக்கவில்லை. சட்டென எழுந்து அறைக்கு வெளியே பல்கணிக்கு ஓடிவந்தேன். அறை, கட்டடத்தின் ஆறாவது மாடியில் அமைந்திருந்ததால் வெளியே வெகுதூரம்வரை பார்க்கக்கூடியதாயிருக்கும். குண்டுச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வெளியே பார்க்கும் மிரட்சி எதேச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது. குண்டுத் தாக்குதல் மிக அண்மையான இடங்களில் நடந்திருக்குமோ.. சத்தமும் கட்டடத்தின் அதிர்வும் அந்தமாதிரி இருந்ததே என்ற பதற்ற உணர்வுதான் காரணம். நேட்டோ படையினரின் குண்டு வீச்சுக்களும்.. அவற்றைத் தொடர்ந்து லிபிய அரசப் படையினரின் வான் நோக்கிய விமான எதிர்ப்பு வேட்டுக்களின் சத்தங்களும் சில இரவுகளாகத் திரிப்போலி நகரின் இரவுகளைக் கலக்கிக் கொண்டிருந்தன.

 என் அறைக் கதவு அவசர கதியிற் தட்டப்பட்டது.

அழைப்பொலியை விசைக்காமல் இப்படி நாலு வீடுகளை எழுப்புவதுபோலப் படபடப்புடன் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்று எனக்குத் தெரியும். கதவின் கொளுக்கியை விடுவித்துத் திறப்பதற்கு முற்படும்போதே, அதைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுளைந்தார்கள்.. பிரியசாந்தவும் சந்திரசேனவும். நான் பணியாற்றும் கம்பனியின் ஊழியர்களான இவர்களும் இதே கட்டடத்தின் இன்னொரு அறையிற் தங்கியிருந்தார்கள். விமானக் குண்டுவீச்சு தொடங்கிய நாளிலிருந்து குழம்பிப்போயிருந்தார்கள். கடந்த சில நாட்களாக, ‘இலங்கைக்குப் போகவேண்டும்.. அதற்கு ஒழுங்கு செய்யுங்கள்..’ என நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தம் உக்கிரமடைந்து வான்வழி தடைவலயமாக்கப்பட்டிருக்கும் கட்டம் இது. லிபியாவிலிருந்து நினைத்தவுடன் இலங்கைக்குப் போவதென்பது இயலுமான காரியமல்ல என்பது இவர்களுக்கும் தெரிந்திருந்தது. எனினும் ஒவ்வொரு குண்டு வீச்சின்போதும் எனது அறைக்கே வந்துவிடுகிறார்கள்.

Continue Reading →