இயற்கைவளப் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்புக் கருத்தரங்கம், காஞ்சிபுரம்

இயற்கைவளப் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்புக் கருத்தரங்கம், காஞ்சிபுரம்அன்புடையீர், மக்கள் இணையம் நடத்தும் இயற்கைவளப் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்புக் கருத்தரங்கத்துக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறோம். தமிழ்நாட்டின் அதிமுக்கிய பிரச்சினையான இதற்கு குரல்கொடுக்க அனைவரும் ஒன்றுதிரள்கிறார்கள். தாங்களும் இணைந்து குரல்கொடுக்கவேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.

தோழமையுடன்
செ.ச.செந்தில்நாதன்

Continue Reading →

கோவை இலக்கிச் சந்திப்பு நிகழ்வு – 44

1. முனைவர் எம்.ஏ.சுசீலா சிறுகதைகள் ‘தேவந்தி’ நூல் குறித்து கவிஞர் அகிலா2. புலவர் செ.ராசு – இடைப்பாடி அமுதன் எழுதிய ‘1800இல் கொங்கு’ குறித்து கவிஞர் சிவதாசன்3.…

Continue Reading →

ஜெயந்தி சங்கரின் நூலுக்கு ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013!

ஜெயந்தி சங்கர்ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து  ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவல், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவல், ஜெயந்தன் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாடக நூலுக்கான விருது திரு க. செல்வராஜின் ‘நரிக்கொம்பு’, ஏக்நாத் எழுதிய  கெடைக்காடு நாவல், புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ ஆகிய நூல்களுக்கும் ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் 2013’ வழங்கப்படுகிறது. சிறந்த கவிதை நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’ தொகுப்பிற்கும்,  ஜான் சுந்தர் எழுதிய ‘சொந்த ரயில் காரி’ தொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விருதிற்காக திலகபாமாவின் கவிதை தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

Continue Reading →

துபாயில் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் கிரீன் குளோப் என்ற அமைப்பினை ஷார்ஜா பள்ளி மாணவர் ஹுமைத் அபுபக்கர் ஏற்படுத்தி சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறார்.…

Continue Reading →