கவிதை: பின்வயது இலக்கியத்தில் விம்மிய தினங்கள்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இளம்நண்பர் சுறுசுறுப்பர் சிறுகதையை நான் படித்தேன்.
மளமளென்று எழுதியது…  மைகூடக் காயவில்லை…
இருந்தசிறு குறைகள்என் துருதுருப்பைக் குறைக்கவில்லை.
புரிந்து அதனைப் படித்து விட்டுப் பல மணிகள் சிந்தித்தேன்.

அன்புக்கு இலக்கணமாய் காதலுக்கோர் பொற்சிலையாய்
இன்சுவைகொள் இலக்கியமாய் மானிடத்தின் முதன்மையனாய்
என்னுளத்துள் இடம்பிடித்தான் கதைமாந்தன் என்னும் ‘அவன்” —
தன்-இனியாள் மறைவாய் மணந்தும் கடுகளவும் வெறுக்காதான்.

அடுத்தநாள் காலையிலே படுக்கைவிட்டு எழுமுன்னம்
நடுநிசியில் தொடங்கியஎன் நடுவு-நிலை ஆய்வுகளின்
முடிவுகள் முன்னிடம்பெற்று மனத்திரையில் ஓடுகையில் 
சடுதியாய் என்கண்கள் சலக்குளமாய்ப் பனித்தன பார்!

Continue Reading →

சிறுகதை: ஈழத்தில் ஒரு தாய்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -மங்காமல் ஒளிவீசும் மணிகள்போன்று
எங்கள், தொல் தமிழீழ மானிப்பாயின்
தங்கரத்தினம் என்னும் குணத்தின் குன்று
தாய்க்குலத்தார் பலர்போற்றும் தலைமைமாது
அங்காங்கு பந்துக்கள் அகதிகளாய்
அலைக்கழிந்து வாய்க்கரிசி போடுதற்கும்
பங்காகப் பாடையினைச் சுமப்பதற்கும்
பக்கத்தில் இல்லாமல் தனித்துச் சென்றாள்.

ஊரில் எவருக்குமே அவள் தங்கமாமி. எனக்கும் தான். நான் அவளின் ஒரே மகளை மணம் முடித்தேன். எப்போதும் பகிடியுடன் சிரித்த முகம்.  ஒரு மாதிரியான வஞ்சகமில்லாத கேலிச்சிரிப்பு என்றும் சொல்லலாம். தங்கமும் குடும்பத்தில், நான்கு சகோதரர்களுடன் ஒரே மகள். அவருக்கும், என்னுடைய மனையாளுடன் நான்கு ஆண்பிள்ளைகள்.

மானிப்பாயில் மரியாதையாக வாழ்ந்துவந்த குடும்பம். மாமிக்கு, எட்டு வாரங்களின் முன் பிறந்த குழந்தையிலிருந்து எண்பது தொண்ணூறு வயதினர் வரையில் எல்லோரும் நண்பர்களே. இப்படியான ஒரு ஆத்மா, குடும்பத்தினர் ஒருவருமே கிட்டடியில் இல்லாமல், அநாதை போல, நோயினில் நினைவின்றிப் பிரிந்துசென்றது. ஏன்?  எப்படி?  வாழ்வெல்லாம் எல்லோரிடமும் அந்த அசாதாரணத் தாயார் நல்லெண்ணமும் நற்பெயரும் தேடியது இதற்காகத்தானா?

Continue Reading →