வாசிப்பும், யோசிப்பும் 76 : பூங்குழழி வீரனின் ‘இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை’ என்னும் ‘வல்லின’ச்சஞ்சிகைக்கட்டுரை பற்றிச்சில குறிப்புகள்….

வாசிப்பும், யோசிப்பும் 76 : பூங்குழழி வீரனின் 'இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை' என்னும் 'வல்லின'ச்சஞ்சிகைக்கட்டுரை பற்றிச்சில குறிப்புகள்....‘இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை‘ என்னும் தலைப்பில் பூங்குழழி வீரன் என்பவரால் ‘வல்லினம்.காம்’ இணையச்சஞ்சிகையில் கட்டுரையொன்று எழுதப்பட்டுள்ளது.

கட்டுரையில் “1943-இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமும் அவர்களால் வெளியிடப்பட்ட ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகையும் இலங்கையில் நவீன கவிதை முயற்சிக்கான களத்தினைத் திறந்து விட்டிருந்தது. இதன் விளைவாக மஹாகவி, முருகையன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி போன்ற பலர் நவீன கவிதை முயற்சிகளில் இறங்கினர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாவலர் துரையப்பாப் பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை, அழக.சுந்தரதேசிகர் போன்ற பல கவிஞர்கள் இவ்வாறு மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஊடாட்டத்தினைக் கொண்டிருந்த நிலையில், நீலாவாணன், மஹாகவி, முருகையன் போன்றோரும் முதன்மை பெறுகின்றார்கள்.” என்றூ குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading →